முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

கேஸ் அடுப்பால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தா? / விஞ்ஞானிகளின் ஆய்வில் புது தகவல்

கேஸ் அடுப்புகள் பழசானாலும் சரி, புதுசானாலும் சரி, அவை தொடர்ச்சியாக மீத்தேன் வாயுவை வெளியிடுகின்றன. இந்த தனிமம்தான் இயற்கை எரிவாயு தொகுப்பில் முக்கியமான ஒன்றாகும். தற்போது தோராயமாக நாடு முழுவதும் சுமார 40 மில்லியன் கேஸ் அடுப்புகள் நாள்தோறும் பயன்படுத்தப்படுகின்றன. அதே போல அரை மில்லியன் எரிவாயு வாகனங்கள் சாலையில் பறக்கின்றன. இப்போது நினைத்து பாருங்கள். அவற்றிலிருந்து வெளியாகும் மீத்தேன் அளவு குறித்து. புவிவெப்பமயமாதலுக்கு மிக முக்கிய காரணியாக இது உள்ளது என ஸ்டான்போர்ட் பல்கலை கழகம் மேற்கொண்டுள்ள புதிய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளதாக அதன் விஞ்ஞானிகள் குழு தலைவர் எரிக் லேபெல் (Eric Lebel). இது குறித்து அவர் மேலும் கூறுகையில், வெளியாகும் மீத்தேனில் முக்கால்வாசி பங்கு கேஸ் அடுப்பில் இருந்துதான் வெளியாகிறது என்பதை கண்டறிந்துள்ளோம் என எச்சரிக்கிறார்.

ஹேக்கர் உஷார்

ஹேக்கர்களிடம் இருந்து ஸ்மார்ட்போனை பாதுகாக்க வலுவான பாஸ்வேர்டு வைத்து கொள்ள வேண்டும். உங்கள் போன் மறைகுறியாக்கப்பட்டதா? என்பதை செக் செய்யுங்கள். Encryted என்று கூறப்படும் இந்த பாதுகாப்பு அம்சம் என்பது டேட்டாவை ஓப்பன் செய்யும் முன் செய்ய வேண்டிய ஒரு பாதுகாப்பு வழியாகும். மேலும், போனில் உள்ள சாப்ட்வேர்களை அப்டேட் செய்ய வேண்டும்.

நீதிமன்றம் வைத்திருக்கும் பறவை

காகங்கள் உலகில் உள்ள மிகவும் புத்திசாலித்தனமான பறவைகள். கருவிகளைப் பயன்படுத்தக்கூடியதும் கருவிகளை உருவாக்கக்கூடியதுமான ஒரே பறவை காகம்தான். ஒரு காகம் தனிப்பட்ட மனித முகங்களை அடையாளம் கண்டு நினைவில் வைத்திருக்கும் திறன் கொண்டது. ஆபத்து பற்றிய தகவல்களை மற்ற காகங்களுடன் அவைகள் தங்கள் மொழியில் பகிர்ந்து கொள்ளும். காகங்கள் தங்கள் பிரச்சனைகளை பேசி தீர்க்க நீதிமன்றம் போன்ற செயல்பாட்டில் ஈடுபடுகின்றன. அங்கு அவைகள் இளவயது காகங்கள் உணவை திருடுவது போன்று செய்யும் எந்த குற்றத்தையும் செய்த காகத்தை தண்டிக்கிறது. இது காகங்களிடம் காணப்படும் வித்தியாசமான செயல் என சொல்லப்படுகிறது. ஒரு வேலையை வெற்றியாக செய்து முடித்த பிறகு மனிதர்கள் உணரும் சாதனை உணர்வைப் போலவே ஒரு கருவியை வெற்றிகரமாகப் பயன்படுத்திய பிறகு காகங்களும் அதிக நம்பிக்கையுடன் நடந்து கொள்கின்றனவாம். மனிதர்களைப் போலவே காகங்களும் எதையாவது சாதிக்க வேண்டும் என்பதில் மகிழ்ச்சி அடைவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

இரட்டையர்கள் பிறப்பது அரிதல்ல

நம்மில் பெரும்பாலோனோர் நினைத்து கொண்டிருப்பது போல இரட்டையர்களாக பிறப்பது அரிதான ஒன்று அல்ல. மாறாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பல்வேறு ருசிகர தகவல்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக இரட்டையர்கள் குறித்து 1915 முதல் ஆவணப்படுத்தப்பட்ட  ஆவணங்களின் மூலம், 1980 வரையிலான கால கட்டத்தில் பிறக்கும் குழந்தைகளில் 50 பேருக்கு ஒருவர் சாரி இருவர் இரட்டையர்களாக பிறக்கின்றனர்.  அதாவது கிட்டத்தட்ட 2 சதவீதம் பேர் இரட்டை குழந்தைகளாக பிறக்கின்றனர். 95க்கு பிறகு அதன் பிறப்பு விகிதம் 2.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2001 இல் 3 சதவீதம், 2010 இல் 3.3 சதவீதம் அதாவது பிறக்கும் 30 குழந்தைகளில் இருவர் இரட்டையர்கள் என்பதே அந்த ஆய்வு தெரிவிக்கும் சுவாரசிய தகவல்.

தூக்கம் வர

தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு இதோ ஒரு டிப்ஸ். உறங்குவதற்கு முன்பு ஒரு வாழைப்பழமும், வெதுவெதுப்பான பாலும் சாப்பிடுவது நல்ல உறக்கத்தை தரும், காரணம் உறக்கதிற்கான ஹார்மோன் மெலடோனின் மூலம் சிறந்து செயல்படுகிறது. மேலும், பாலில் இருக்கும் டிரிப்டோபென் ஆழ்ந்த உறக்கத்தை நமக்கு தருகிறது.

பனி சிகரத்தில் காஸ்ட்லியான ஹோட்டல்

கோடை வாசஸ்தலங்களில் விடுமுறைக்கு செல்பவர்கள் சற்று தள்ளி அமைந்திருக்கும் அமைதியான இடங்களை நாடுவது வழக்கம். ஆனால் ரொம்பவே தள்ளி, பனி சிகரத்தின் மலை உச்சியில் மிகவும் காஸ்ட்லியான தங்கும் விடுதி ஒன்று உள்ளது. அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள தெனாலி தேசிய பூங்காவில்தான் அந்த ஓட்டல் அமைந்துள்ளது. இந்த ஓட்டலுக்கு விமானத்தில் செல்வதை தவிர வேறு மார்க்கம் கிடையாது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 6 ஆயிரம் அடி அதாவது 1829 மீட்டர் உயரத்தில் பனிப்பாறையில் இந்த ஹோட்டல் அமைந்துள்ளது. பருவ காலங்களில் வானில் ஏற்படும் வண்ண மாற்றங்களை பார்ப்பதற்கே காண கண் கோடி வேண்டும். அதற்கு ஈடாக இந்த ஹோட்டலுக்கு செலவழிக்கவும் காசு கோடி வேண்டும். ஜோடியாக தங்குபவர்களுக்கு 3 இரவுகளுக்கு வெறும் ரூ.26 லட்சம் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பனி சறுக்கு, மலையேற்றம் போன்ற பல்வேறு பொழுது போக்கு  அம்சங்களும் பகலில் உள்ளன. இரவில் வானில் ஏற்படும் வண்ண மாற்றங்களை காண்பதே இந்த ஹோட்டலில் தங்குபவர்களுக்கு ஏற்படும் மிகப் பெரிய பரவச அனுபவமாகும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago