முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஆபாசம் வன்முறை

மதுப்பழக்கத்தைத் தூண்டும் காரணங்களில் ‘சமூக வலைதளங்களில் பரவும் ஆபாசம் மற்றும் வன்முறை சார்ந்த வீடியோக்கள் இளம்பருவத்தினரிடம் மதுப்பழக்கத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது’ என்று இங்கிலாந்தின் உளவியல் நிபுணரான ஜோன் க்ரான்வெல் கண்டறிந்துள்ளார்.

உப்புநீர் ஏரி

ரஷ்யா, ஈரான், துர்க்மெனிஸ்தான், அசர்பைஜான் மற்றும் கசகஸ்தான் ஆகிய நாடுகளைத் தனது எல்லைகளாகக் கொண்ட காஸ்பியன் ஏரி 3 லட்சத்து 17 ஆயிரம் சதுர கி.மீ பரப்பளவும், 78,200 கன கி.மீ கொள்ளளவும் கொண்டது. ஏறத்தாழ 120 நதிகள் காஸ்ப்பியனை நோக்கி பாய்கின்றன. இதில் வோல்கா நதிதான் மிகப் பெரியது.

உலகிலேயே அதிகமான விலைக்கு விற்பனையான வயலின் கருவி

வயலின் என்பதும் அழகிய இசைக்கருவி. இளையராஜா பாட்டை கேட்டவர்களுக்கு தெரிந்திருக்கும் இந்த இசைக்கருவியின் அற்புதம் எப்படி என... இந்நிலையில் உலகிலேயே அதிகமான விலைக்கு விற்பனையான வயலின் இசைக்கருவி எது தெரியுமா.. லேடி ப்ளூன்ட் ஸ்ட்ராடிவேரியஸ் என்பவர் 1721 ஆம் ஆண்டு உருவாக்கிய வயலின் கருவிதான் அதிக விலைக்கு போனது. கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தின் போது இந்த வயலின் இசைக்கருவி சுமார் 121 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டது. 2011 இல் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி மற்றும் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதற்காக இந்த ஆன் லைன் மூலம் இந்த ஏலம் நடத்தப்பட்டது. இசைக் கருவிகளில் அதிக விலைக்கு விற்ற சாதனையை இது படைத்துள்ளது.

குச்சி ஐஸை கண்டுபிடித்தது ஒரு சிறுவன் என்றால் நம்ப முடிகிறதா?

குழந்தைகள் முதல் குச்சி ஊன்றி நடக்கும் கிழவர்கள் வரை குச்சி ஐஸ் விரும்பாதவர்கள் இருக்க மாட்டார்கள். இன்று உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் குச்சி ஐஸ் செய்முறையை கண்டுபிடித்தது, வெறும் 11 வயது சிறுவன்தான் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும். அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மாகாணத்தை சேர்ந்த ஃபிராங்க் எப்பர்சன் என்ற 11 வயது சிறுவன் எதேச்சையாக கண்டுபிடித்ததுதான் குச்சி ஐஸ். ஒருநாள், அவனுடைய வீட்டுக்கு வெளியே, சோடா பவுடர், நீர் மற்றும் அவற்றை கிளறும் குச்சி ஆகியவற்றை கையில் வைத்து விளையாடிக்கொண்டிருந்தான் ஒருகட்டத்தில், அவற்றை அங்கேயே மறந்து விட்டு, தூங்கப் போய்விட்டான். அடுத்த நாள் காலை, அங்கு வந்த பார்த்த போது, அவனுக்கு ஒரே ஆச்சர்யம். அவன் வைத்துவிட்டு போன சோடா தண்ணீர் அப்படியே உறைந்து போய் கிடந்தது. அதை சுவைத்து பார்த்த அவன் அதன் சுவையில் மயங்கிப் போனான். தொடர்ந்து சோடா நீரை உறைய வைத்து தன் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் அதை அறிமுகம் செய்தான் எப்பர்சன். பின்னர் அதற்கு உரிய காப்புரிமை பெற்று ஒரு ஐஸ் கம்பெனியை தொடங்கினான். அன்றைக்கு அங்கு தொடங்கிய குச்சி ஐஸ் இன்றைக்கு உலகையே ஆட்டி படைத்து வருகிறது.

முதன் முதலில் எடுத்த புகைப்படத்தை புரொசஸ் செய்ய எவ்வளவு நேரமானது தெரியுமா?

Nicéphore Niépce என்பவர் எடுத்த புகைப்படம் தான் உலகின் முதல் புகைப்படம் என்று சொல்லப்படுகிறது. இந்த புகைப்படத்தை அவர் எடுத்து அதை புரொசஸ் செய்வதற்கு மட்டும் 8 மணி நேரம் பிடித்துள்ளது. அப்போதைய கையால் மேற்கொள்ளப்படும் தொழில் நுட்பங்கள் காரணமாக இத்தனை மணி நேரமானது. மேலும் ஒரு புகைப்படத்தை எடுப்பதற்கும் நீண்ட நேரமானது. எனவேதான் பண்டைய காலங்களில் புகைப்படத்துக்கு நீண்ட நேரம் போஸ் கொடுக்க வேண்டியிருந்ததால், பெரும்பாலும் அந்த புகைப்படத்தில் உள்ள நபர்கள் சிரிக்காமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும். ஏனெனில் அவர்கள் நீண்ட நேரம் அசையாமல் இருக்க வேண்டும் அல்லவா. அது சரி முதலில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்துக்கு என்ன டைட்டில் தெரியுமா  "லே கிராஸில் ஜன்னல் வழி தெரியும் காட்சி" என்பதாகும்.

டாடா ஏர்லைன்ஸ் பற்றி உங்களுக்கு தெரியுமா

தற்போது ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் 18 ஆயிரம் கோடிக்கு வாங்கியுள்ளது. அது அனைவருக்கும் தெரிந்த செய்தி.. தெரியாத செய்தி என்ன தெரியுமா.. இந்தியாவில் முதன் முதலில் விமான  போக்குவரத்தை இயக்கியது டாடா தான். அதன் நிறுவனர் Jehangir Ratanji Dadabhoy (JRD) Tata 1932 இல் அதை நிறுவனார். அப்போது அது டாடா ஏர்லைன்ஸ் என அழைக்கப்பட்டது. டாடா ஏர்லைன்ஸ் அப்போது உள்நாட்டு விமான சேவைகளை மட்டுமே இயக்கி வந்தது. பின்னர் 1946 ஆல் அது ஏர் இந்தியாவாக மாற்றப்பட்டது. அப்போது அது 'மகாராஜா; சின்னத்தை கொண்டதாக பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. 1948 இல், ஏர் இந்தியா நிறுவனம் ஐரோப்பாவுக்கு விமான சேவைகளை தொடங்கியது. தனியார்-பொது துறை பங்களிப்புடன் சர்வதேச சேவைகள் இயக்கப்பட்டன. அரசு வசம் 49 சதம் பங்குகளும், டாடா வசம் 25 சதவீத பங்குகளும் இருந்தன. 1953 இல் எர் இந்தியாவை முழுக்க தேசியமயமாக்கி நேரு அறிவித்தார். இதற்கு டாடா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.இந்நிலையில் தற்போது கிட்டத்தட்ட 68 ஆண்டுகளுக்கு பின்னர் ஏர் இந்தியா விமானம் டாடா வசமே திரும்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago