ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு, இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றைக் கண்டறியும் சென்சார்களைக் கொண்ட ஸ்மார்ட் வாட்ச்களைக் கண்டுபிடிப்பது ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ்-இன் கனவாக இருந்தது. இதற்கு வடிவம் கொடுக்கும் நவீன சென்சார்களைத்தான் ஆப்பிள் நிறுவன பயோமெடிக்கல் என்ஜினியர்கள் தற்போது உருவாக்கியுள்ளனர்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
ஜோதிடத்திலும், மக்கள் பேச்சு வழக்கிலும் சனிக்கு நல்ல பெயர் கிடையாது. மக்கள் வாயில் அதிகமாக வசைபாடப்படும் ஒரு கிரகம் சனி. ஆனால் அறிவியலில் ஆச்சரியம் மிகுந்தது மட்டுமல்ல, மிகுந்த வளம் மிக்கதும் கூட. அண்மையில் வெளியான ஆய்வில் வெளிவந்த உண்மையை கேட்டால் அப்படியே ஆச்சரியத்தில் வாயைப் பிளப்பீர்கள்... ஆம், நாம் அன்றாடம் வசை பாடும் சனி கிரகத்தில் ஆண்டுதோறும் வைர மழை பொழியுமாம்.. இது குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், சனி, யுரேனஸ், நெப்டியூன் கிரகங்களில் காணப்படும் அதிக அழுத்தம் காரணமாக கார்பன் அணுக்கள் அப்படியே படிகங்களாக மாறி விடுமாம். கார்பன் அணு படிகம் என்பது வைரமன்றி வேறில்லை என்பது விபரமறிந்தவர்களுக்கு தெரியும். இதை ஒரு குட்டி ஆய்வகத்தில் வைத்து பரிசோதித்தும் பார்த்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சனி கிரகத்தில் அழுத்ததில் ஏற்படும் மாற்றம் காரணமாக இது போல எக்கச்சக்கமான வைர மழை பொழியுமாம். அதாவது சுமார் 2.2 மில்லியன் பவுண்டுக்கும் அதிகமானவை அவை என்கின்றனர் விஞ்ஞானிகள்.
பிரமிடுகள் என்றாலே நமக்கு நினைவக்கு வருவது எகிப்துதான். பிரமிடுகளும் அதில் வைக்கப்பட்டுள்ள மம்மி எனப்படும் பழங்கால சடலங்களும் உலகம் முழுவதும் வியப்பை ஏற்படுத்துபவையாகும். ஆனால் உலகிலேயே அதிகமாக பிரமிடுகள் உள்ள நாடு எகிப்து என்று நீங்கள் நினைப்பீர்களேயானால்.. அது முற்றிலும் தவறு. அதிகமான பிரமிடுகள் உள்ள நாடு சூடான் தான். எகிப்து நாட்டில் 138 பிரமிடுகள் உள்ளன என்றால் சூடானில் 244 பிரமிடுகள் உள்ளன. சூடான் நாடு நைல் நதி நாகரிகத்துக்கு மிகவும் எடுத்துக்காட்டான நாடாகும். கிபி 1070 தொடங்கி கிமு 350 வரையிலும் குஷார்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. அவர்கள்தான் சூடானில் பிரமிடுகளை உருவாக்கினர். எகிப்து பிரமிடுகளின் உயரம் சுமார் 400 அடி என்றால் சூடானில் அவை சுமார் 100 அடி கொண்டவையாக அமைக்கப்பட்டிருந்தன.
ஒரு மனிதனின் கையெழுத்தை அப்படியே உள்வாங்கி அதை எழுதுகிறது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் பான்ட் ரோபோ. மனிதன் பேனாவை பிடித்து எழுதுவது போல் ரோபோ அழகாக பேனாவை பிடித்து எழுதக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தங்கள் கணினி, டேப்லட் அல்லது ஸ்மார்ட்ஃபோன் போன்றவற்றில் பான்ட் எழுதும் கடிதத்தை டிஜிட்டல் கடிதமாகவும் மற்றவருக்கு அனுப்பி வைக்கலாம்.
சென்னை போன்ற பெருநகரங்களில் எந்த நாளிலும் எந்த நேரத்திலும் எந்த பழத்தையும் விலைக்கு வாங்கலாம். அதிலும் குறிப்பாக ஆப்பிள்கள் விற்காத சூப்பர் மார்க்கெட்களோ, ஸ்டோர்களோ இருக்க முடியாது. ஆனால் அவை பறித்து ஓராண்டு கழித்தே விற்பனைக்கு வருகின்றனவாம். ஆப்பிள்கள் பொதுவாக ஆகஸ்ட் தொடங்கி நவம்பர் மாதங்களில்தான் அறுவடை சீசன். அவை பறிக்கப்பட்டு, வேக்ஸ் தடவி,் சூடான காற்றில் காய வைத்து குளீருட்டப்பட்ட பதப்படுத்தும் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. பின்னர் அவை பேக் செய்யப்பட்டு நம்மூர் சூப்பர் மார்க்கெட்களை அடைய 6 மாதம் முதல் 1 வருடம் வரை கூட ஆகுமாம்.
லண்டனைச் சேர்ந்த குழு ஒன்று படம் வரையும் புதிய ரக ரோபோ ஒன்றினை வடிவமைத்துள்ளது. லைன் அஸ் (Line-us) என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ கடினமான படங்களை கூட அழகாகவும் மிகக் குறுகிய நேரத்திலும் வரையக்கூடியது. சந்தைக்கு வரும் முன்னரே இணையதளத்தில் 30 மணி நேரத்தில் 1000 லைன் அஸ் ரோபோக்கள் விற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Mar 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோலுக்கினியானில் புறப்பாடு.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம் பட்ட
-
இன்றைய ராசிபலன்
14 Mar 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Mar 2026


