முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

புதுமையான வழியில்...

மிச்சிகன் மாநில ஆய்வாளர்கள் கோப்பிரவைடு மெட்டலிடிரன்ஸ் என்றழைக்கப்படும் பாக்டீரியாவில் இருந்து தங்கம் வெளிவருவதை  கண்டுபிடித்துள்ளனர். இந்தப் பாக்டீரியா தங்கம் உருவாகத் தேவைப்படும். கோல்டு குளோரைடு எனும் ரசாயன பொருட்களை விழுங்கி தங்கத்தை உமிழ்வதாக கண்டறிந்துள்ளனர்.

சிறுநீரகத்தை பாதுகாக்க

இரண்டு டீஸ் பூன் மல்லி விதைகளை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவைத்து மறு நாள் காலை அதனை வடிகட்டி குடிக்க சிறுநீரில்  உள்ள  பாதிக்கப்பட்ட செல்கள் அழியும். வெள்ளக்கரிக்காய் ஜூஸை தினமும் இருவேளை குடித்து வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் சிறுநீரில் வெளியேறி, உடலை  குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

இலக்கியத்தில் அதிக நோபல் பரிசு பெற்ற நாடு எது தெரியுமா?

இலக்கியத்துக்காக வழங்கப்படும் நோபல் பரிசுதான் உலகிலேயே மிகவும் உயர்ந்த விருதாக கருதப்படுகிறது.  அதில் அதிகமான விருதுகளை குவித்த நாடு பிரான்ஸ். 1901 முதல் 15 பேர் இலக்கியத்துக்காக இதுவரை நோபல் பரிசு வென்றுள்ளனர். அந்த ஆண்டில் முதன்முறையாக நோபல் பரிசு பெற்று சாதனை பட்டியலை தொடங்கி வைத்தவர் பிரெஞ்சு கவிஞர் Sully Prudhomme. அவரை தொடர்ந்து ரெனே தெகார்த்தே, வால்டேர், சார்லஸ் பொதேலர் என பலர் நோபல் பரிசுகளை வென்றுள்ளனர்.

இனி மவுஸ் வேண்டாம் - வந்து விட்டது ஸ்மார்ட் ரிங்

இன்றைக்கு கம்பியூட்டர் துறையில் எவ்வளவோ வளர்ந்து விட்ட போதிலும் சில விஷயங்களில் கொஞ்சம் முன்னகராமலேயே இருந்து வந்தோம். ஆனால் இந்த புதிய நூற்றாண்டு எல்லாவற்றையும் மாற்றி வருகிறது. அதில் லேப்டாப், டேப்லட்  போன்றவற்றை பயன்படுத்துபவர்களுக்கு மவுஸ் பயன்பாடு என்பது எவ்வளவு தேவை என்பதை உணர்ந்திருப்பார்கள். டச் பேட் இருந்த போதிலும் கூடவே ஒரு மவுசையும் பையில் வைத்து எடுத்து செல்வர். இனி அந்த கவலை வேண்டாம்.. வந்து விட்டது மவுசுக்கு பதிலாக ஸ்மார்ட் ரிங். இதை ஆள்காட்டி விரலில் மாட்டிக் கொண்டு வழக்கமாக மவுசை பயன்படுத்துவது போல ஆட்டிக் கொண்டிருந்தால் போதும்... லேப்டாப்பில், டேப்லட்டில் அவ்வளவு ஏன் கணிணியில் கூட ஜாலியாக வேலை பார்க்கலாம். இனி  எலி வாலில் தலைகீழாக தொங்குவதை போல மவுஸ் தொங்கிக் கொண்டிருக்க வேண்டியது இல்லை.. இந்த ரிங் போதும். தேவைப்படாத போது டிராயரில் போட்டு பூட்டி விட்டு ஜாலியாக செல்லலாம். தேவைப்படும் போது சட்டை பையிலோ.. விரலிலோ மாட்டிக் கொண்டு செல்லலாம்.

உலகிலேயே மிகப் பெரிய புத்தகம்

உலகிலேயே மிகப் பெரிய புத்தகம் 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் வெளியிடப்பட்டது. இந்த புத்தகம் இஸ்லாமிய இறைத் தூதரான நபிகள் நாயகம் வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய சம்பவங்களை தொகுத்து வழங்குவதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை அரபு நாட்டிலுள்ள Mshahed International Group என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புத்தகத்தை உருவாக்கும் பணியில் 50க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர். 16.40 அடி அகலமும், 26.44 அடி உயரமும் கொண்டதாக 1360 கிலோ எடை கொண்டதாக உருவாக்கப்பட்டது. உலகிலேயே மிகவும் பெரிய புத்தகம் என்ற கின்னஸிலும் இடம் பிடித்துள்ளது.

முதல் காற்றாடி

2000 ஆண்டுகளுக்கு முன் சீனாவை ஆண்டு வந்த ஹூவான் ஹெங் என்ற அரசன் உலகின் முதல் காற்றாடியை பறக்கவிட்டார். பின்னர் மூங்கில், மெல்லிய பட்டுத்துணி, நூலுடன் நல்ல பட்டங்களை உருவாக்கினார்கள். ஒவ்வொரு ஆண்டும் சீனர்கள் ஒன்பதாவது மாதத்தில் ஒன்பதாவது நாளை பட்டங்கள் தினமாகக் கொண்டாடுகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago