முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

அதிநவீன விமானம்

தற்போது ஒரு அடுக்கும் விமானம் மட்டுமே உள்ள நிலையில், மணிக்கு 2300 மைல் வேகத்தில் பறக்கும் 2 அடுக்குமாடி அதிநவீன விமான மாதிரியை ஆஸ்கர் வினல்ஸ் என்பவர் வடிவமைத்துள்ளார். இதில் 250 பேர் ஒரு நேரத்தில் பயணம் செய்ய முடியும். இந்த விமானத்தில் லண்டனில் இருந்து நியூயார்க் நகருக்கு வழக்கத்தை விட 3 மணிநேரத்துக்கு முன்னதாக செல்லலாம்.

நௌலி ஆசனம்

நௌலியின் ஆசனத்தை செய்து வருவதால் வயிற்றை சார்ந்த முதுகெலும்பின் பாகங்கள், அதைச்சார்ந்த நரம்புக்கூட்டங்கள் அனைத்தும் புத்துயிர் பெறும். நரம்புகள் பலம் பெறுவதால் உடல் வலுவடையும். குடல் வாயு, வயிற்று கோளாறுகள், வாயில் துர்நாற்றம் உள்பட பல பிரச்சினைகள் தீர்ந்து விடும். நோயின்றி ஆரோக்கியமாக வாழ தட்சிண நௌலி உறுதுணையாக இருக்கும்.

குங்குமப்பூவை சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்குமா

குங்குமப் பூ.  சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஈரானில் அதை காட்டிலும் அதிகம். 50 ஆயிரம் ஆண்டுகள். ஏன் அப்படி? குங்குமப் பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்குமா...கிடையவே கிடையாது. குழந்தையின் நிறத்தை தீர்மானிப்பது குங்குமப்பூ அல்ல. ஜீன்கள் எனப்படும் மரபணுக்கள். ஆனால் குங்குமப்பூவின் மருத்துவ பயன்கள் அதிகம். அதில் உள்ள குரோசின் மற்றும் பிக்குரோசின் குரோசின் என்ற ரசாயனம் சுமார் 90 வகையான நோய்களுக்கான பாக்டீரியாக்களை இனம் கண்டு அழிக்கிறது. இதனால் கர்ப்பிணிகள் இதை சாப்பிட்டால்  நோய் தாக்குதலிலிருந்து தப்பலாம் என்பதால் இது பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுதான் உண்மை..

கதவுகளே இல்லாத கிராமம்

கிராமம் என்றால் வீடுகள் இருக்கும். வீடுகள் என்றால் வாசல் கதவுகள் இருக்கும்தானே.. ஆனால் ஒரு வித்தியாசமான கிராமத்தில் வீடுகளுக்கு வாசல் கதவுகளே கிடையாது. அந்த கிராமம் எங்குள்ளது தெரியுமா...இந்தியாவில்தான். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷானி ஷிங்னாப்பூர்தான்  அது. இது சனீஸ்வர பகவானின் திருத்தலமாகவும் வணங்கப்படுகிறது. சுமார் 300 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலை கொண்டுள்ள இந்த கிராமத்துக்கு ஒவ்வொரு நாளும் சுமார் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கதவு இல்லாத போதும் இந்த கிராம மக்கள் இரவில் நன்றாகவே உறங்குகின்றனர். ஏன் தெரியுமா... சனி பகவான் காவல் காப்பதாக ஒரு ஐதீகம். என்னா ஒரு ஆச்சரியம் பாருங்கள்..

ஒற்றைக் காலில் ....

நாரைகள் ஒற்றைக் காலில் நிற்பதற்கு காரணம் தற்போது தெரியவந்துள்ளது. உடலின் சக்தியை சேமிக்க அவை ஒற்றைக்காலில் நிற்கின்றனவாம். உடலின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தி நீண்ட நேரம் நிற்கும் வகையில் நாரைகள் இவ்வாறு நிற்கின்றதாம். ஒற்றைக்காலில் நிற்கும்போது அவைகளின் உடலில் மற்ற எந்த தசைகளும் செயல்படுவதில்லை என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

புதிய ரோபோ

ஜப்பானின் ‘ஒரிகாமி’ என்னும் முறையை பின்பற்றி அமெரிக்காவில் உள்ள ஹர்வார்ட் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் மடிக்கு வைக்கக்கூடிய புதிய ரோபோடை வடிவமைத்துள்ளனர்.  இந்த ரோபோட்டிற்கு பேட்டரி தேவை இல்லை. இந்த ரோபோட் வயர்லெஸ் மாக்னெட்டிக் ஃபீல்ட் மூலம் இயக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago