இன்றைய நவீன யுகத்தில் மன அழுத்தம் குறைய சுவாச பயிற்சி, பிராணயாமம் என பல்வேறு மூச்சு பயிற்சிகளும், யோக பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. நாம் நாசித் துவாரத்தின் வாயிலாக மூச்சை இழுத்து அதை நுரையீரலுக்கு அளிப்பதன் மூலம் பிராண வாயு உடலுக்கு சென்று தேவையான ஆற்றலை அளிக்கிறது. ஆனால் நாம் சுவாசிக்கும் போது ஒரு நேரத்தில் ஒரு நாசித் துவாரத்தின் வாயிலாக மட்டும்தான் சுவாசிக்கிறோம் என்பது உங்களுக்கு தெரியுமா... ஒரே நேரத்தில் இரு நாசித் துவாரங்கள் வாயிலாகவும் மனிதன் சுவாசிப்பது கிடையாது. கேட்பதற்கு மிகவும் இது சிக்கலானது. ஒரு துவாரத்தின் வழியாக சுவாசித்தாலும் இரு நாசிகளும் சம அளவில் பிராண வாயுவை பகிர்ந்து கொள்கின்றன. ஒவ்வொரு நாசித் துவாரத்தின் வாயிலாகவும் சுவாசிப்பது சில மணி நேரங்களுக்கு ஒரு முறை மாறி மாறி நடக்கும் என்பதும் ஆச்சரியமான ஒன்று தானே.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
இந்த வருடம் இதுவரை இல்லாத அளவிற்கு விண்கற்கள் பொழிவு நிகழும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அர்சிட் எனப்படும் விண்கற்கள் இன்று அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் இருண்ட வானில் தீப்பந்துகள் போல காட்சியளிக்குமாம்.இதனை தொலைநோக்கி இல்லாது வெறும் கண்ணால் கூட பார்க்கலாம். அர்சிட் விண்கற்கள் 1790 ஆம் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 20-30 நிமிடங்கள் வானில் பிரகாசமாக தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை மக்களும் வருடத்தின் இறுதியில் இந்த விண்கற்கள் பொழிவினை காண முடியும்.
எஸ்எம்எஸ்-களை மொபைல் மற்றும் டேப்லெட்களில் மட்டுமல்லாது நமது வீட்டுச் சுவற்றில்கூட டைப் செய்யலாம். இதற்காக கூகுள் நிறுவனம் புதிதாக ஒரு யோசனையை தனது முந்தைய ப்ராஜெக்ட்டுடன் இணைத்துள்ளது. கூகுள் ஏற்கெனவே ‘ப்ராஜெக்ட் கிளாஸ்’ என்ற கண்ணாடியை உருவாக்கிவருவது நினைவிருக்கலாம். அந்த ப்ராஜெக்ட் கிளாசுடன் இந்த புதிய முறையையும் அறிமுகப்படுத்தவுள்ளது. SMS-களை சுவற்றிலிருந்தும் ‘டைப்’ செய்யும் முறையானது விர்ச்சுவல் கிபேட் என அழைக்கப்படுகிறது. இதை பயன்படுத்தினால் நீங்கள் மொபைல் போன் மட்டுமல்லாது எங்குவேண்டுமானாலும் டைப் செய்து அதை எஸ்எம்எஸ் மற்றும் சாதாரண தரவுகளாகவும் மாற்றமுடியும். ஆனால் இதற்காக கூகுளின் விசேஷ கண்ணாடி மற்றும் கைகளுக்கும் படத்தில் காட்டப்பட்டுள்ளதை போல சில விசேஷ முறைகளை பின்பற்றவேண்டும். ஆரம்ப நிலையிலுள்ள இந்த சிறப்பு சாதனங்கள் விரைவில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனலாம்.
இதென்ன புதுசாக இருக்கே என்று யோசிக்கிறீர்களா... ஒவ்வொரு நாட்டுக்கும், கலாச்சார மக்களுக்கும் பல்வேறு வகையான கால கணக்கு அதாவது காலண்டர், நம்மூர் பாஷையில் சொன்னால் பஞ்சாங்கம் உள்ளது. அதன் படி எத்தியோப்பியாவின் காலண்டரில் 13 மாதங்கள் உள்ளன. ஒவ்வொரு மாதத்துக்கும் 30 நாட்கள். கடைசி மாதமான பகுமே என்ற மாதத்தில் மட்டும் 5 நாட்கள். இதனால் இவர்கள் எப்போதும் மற்ற நாடுகளின் காலத்துடன் ஒப்பிடும் போது 7 ஆண்டுகள் பின்தங்கியே உள்ளனர். அவர்கள் தங்கள் புத்தாண்டு தொடக்கத்தை செப்டம்பர் 11 ஆம் தேதிதான் கொண்டாடுகின்றனர். புதிய நூற்றாண்டு தொடக்கத்தை அவர்கள் 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 இல்தான் கொண்டாடினர் என்றால் ஆச்சரியம் தானே
ஒரு நொடியை பில்லியனால் வகுத்தால் என்ன எண் கிடைக்குமோ அந்த நேரத்தைக் கூட அளவிடும் கடிகாரத்தை நாசா விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இது லேசர் பீம்களோடு இணைக்கப்பட்டு விண்கலத்துக்கும், கோள்களின் தரை பரப்புக்கும் உள்ள தொலைவைக் கண்டறிய உதவும் என்றும், ஒளியின் வேகத்தில் நகரும் பொருளின் தூரத்தை அறிய உதவும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
100 விதமான ஒலிகளை எழுப்பும் விலங்கினம் எது தெரியுமா.. அது பூனைதான்.நாய்கள் கிட்டத்தட்ட பத்து விதமான ஒலிகளை மட்டுமே வாய்களின் மூலம் எழுப்பும் திறன் உடையவை ஆகும்.ஆனால் பூனைகள் கிட்டத்தட்ட 100 விதமான ஒலியை (மியோவ்) அவைகளின் வாய்களின் மூலம் எழுப்பும் திறன் உடையவை. நாய்களை விட பூனைகளுக்கு கேட்கும் திறன் மிகவும் அதிகமானதாகும். அவ்வளவு ஏன்...! மனிதர்களை விடவும் பூனைகளுக்கு கேட்கும் திறன் மிகவும் அதிகமானது. பூனைகள் அதன் வாழ்நாளில் மூன்றில் இரண்டு பங்கு வாழ்நாளை தூங்குவதற்காக மட்டுமே செலவு செய்கின்றன. .நில நடுக்கம் உருவாகுவதற்கு 10 முதல் 15 நிமிடங்கள் முன்பே நிலநடுக்கம் உருவாகுவதை பூனைகள் உணர்ந்து விடும். பூனைகளால் இனிப்புச் சுவையை உணர முடியாது. லட்சக்கணக்கானோரை கொன்று குவித்த ஹிட்லர் அஞ்சி நடுங்கிய ஒரே விலங்கினம் பூனைதான்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 week ago |
-
மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம் விலை: சவரன் ரூ.81 ஆயிரத்தை கடந்தது
09 Sep 2025சென்னை, தங்கம் விலை நேற்று முன்தினம் ஒரே நாளில் பவுனுக்கு ரூ.440 அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டிருந்த நிலையில், நேற்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சம் தொட்ட
-
அமெரிக்காவில் இந்திய இளைஞர் சுட்டு கொலை
09 Sep 2025அமெரிக்கா, அமெரிக்காவில் இந்திய இளைஞர் சுட்டு கொலை செய்யப்பட்டார்.
-
வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
09 Sep 2025சென்னை : வெளிநாட்டு பயணத்தில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாரியாக தற்போதைய நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென முதல்வருக்கு எடப்பாடி பழனிசாமி
-
புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப்பதிவு: த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்
09 Sep 2025சென்னை : புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்ததற்கு த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
பிரிக்ஸ் அமைப்பு குறித்து ட்ரம்ப் ஆலோசகர் விமர்சனம்
09 Sep 2025நியூயார்க், பிரிக்ஸ் அமைப்பு குறிதது அதிபர் ட்ரம்ப் ஆலோசகர் கடும் விமர்சனம் செய்துள்ளார்.
-
மனிதன் தெய்வமாகலாம் படத் தலைப்பை வெளியிட்ட தனுஷ்
09 Sep 2025வ்யோம் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் புதிய திரைப்படத்தின் தலைப்பை நடிகர் தனுஷ் சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.
-
என்னால் உயிர் வாழ முடியாது: நீதிபதியிடம் நடிகர் தர்ஷன் முறையீடு
09 Sep 2025பெங்களூரு : பல நாட்களாக சூரிய ஒளியைப் பார்க்கவில்லை. எனது கைகளில் பூஞ்சை உருவாகியுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் என்னால் உயிர் வாழ முடியாது.
-
நேபாளத்தில் அரசுக்கு எதிராக போராட்டம்: பிரதமர் பதவியில் இருந்து கே.பி.சர்மா ஒலி ராஜினாமா
09 Sep 2025காட்மாண்டு, நேபாள அரசுக்கு எதிராக வலுக்கும் போராட்டம் குறித்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் கே.பி. சர்மா ஒலி.
-
தமிழ்நாடு அரசு சார்பில் இசைஞானி இளையராஜாவுக்கு வரும் 13-ம் தேதி பாராட்டு விழா
09 Sep 2025சென்னை : தமிழ்நாடு அரசு சார்பில் வருகிற 15-ம் தேதி இளையராஜாவுக்கு பராட்டு விழா நடக்கிறது. இதில் முக்கிய திரை பிரபலங்கள் பங்கேற்கிறார்கள்.
-
கோவையில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் பிரசாரம் - ரோடு ஷோ
09 Sep 2025கோவை : கோவையில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் பிரசாரம் மற்றும் ரோடு ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது.
-
அமித்ஷாவை சந்தித்தது ஏன்? - செங்கோட்டையன் விளக்கம்
09 Sep 2025டெல்லி : அமித்ஷாவை செங்கோட்டையன் சந்தித்ததுக்கான காரணம் குறித்து தெரிவித்துள்ளார்.
-
சேலம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
09 Sep 2025சென்னை : தமிழகத்தில் இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிபேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, ஈரோடு
-
காஞ்சிபுரம் டி.எஸ்.பி. சங்கர் கணேஷை உடனே விடுதலை செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
09 Sep 2025சென்னை : காஞ்சிபுரம் டி.எஸ்.பி. சங்கர் கணேஷை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.
-
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: சோனியா, கார்கே, பிரியங்கா, ராகுல் காந்தி வாக்களித்தனர்
09 Sep 2025புதுடெல்லி : குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் வாக்குப்பதிவு பாராளுமன்ற வளாகத்தில் நேற்று (செப். 9) காலை 10 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது.
-
2026 சட்டமன்ற தேர்தலில் நாம் பெறும் வெற்றி, தி.மு.க.வுக்கான வெற்றி மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழகத்திற்கான வெற்றி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
09 Sep 2025சென்னை, தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்கம் நம்மால்தான் முடியும், 2026-ல் நாம் பெறும் வெற்றி, தி.மு.க.வுக்கான வெற்றி மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கான வெற்றி என
-
2030-ம் ஆண்டுக்குள் திராவிட மாடல் 2.0 ஆட்சியில் தமிழகத்தை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் திட்டவட்டம்
09 Sep 2025சென்னை, “எத்தனையோ இடர்கள், எத்தனையோ தடைக்கற்கள், எத்தனையோ சூழ்ச்சி அரசியல்கள்...
-
அ.தி.மு.க. கோமா நிலையில் உள்ளது: அமைச்சர் அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்
09 Sep 2025சென்னை : அ.தி.மு.க. கோமா நிலையில் உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
-
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: ஒரு நபர் ஆணைய உத்தரவு நிறுத்திவைப்பு
09 Sep 2025சென்னை : தூய்மை பணியாளர்கள் போராட்டம் குறிதது ஒரு நபர் ஆணையம் பிறப்பித்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
காசாவில் இருக்கும் அனைவரும் வெளியேற வேண்டும் : இஸ்ரேல்
09 Sep 2025டெல் அவிவ், முழுமையான ராணுவ நடவடிக்கை தொடங்க இருப்பதால், காசா திட்டுப்பகுதியில் வசிக்கும் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.
-
தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் நயினார் நாளை டெல்லி பயணம்
09 Sep 2025சென்னை, தமீழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் நாளை டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
-
செப்.19 ல் வெளியாகும் படையாண்ட மாவீரா
09 Sep 2025இயக்குநரும், நடிகருமான வ. கௌதமன் முதன்மை பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் படையாண்ட மாவீரா. இந்த திரைப்படத்தில் வ.
-
கொல்கத்தாவில் முப்படை தளபதிகள் மாநாடு: பிரதமர் தொடங்கி வைக்கிறார்
09 Sep 2025புதுடெல்லி, கொல்கத்தாவில் முப்பட தளபதிகள் மாநாட்டை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
-
திருச்சியில் தொடங்கி மதுரையில் முடிக்கிறார்: சனிக்கிழமைகளில் மட்டுமே பிரச்சாரம் செய்கிறார் விஜய்!
09 Sep 2025சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தை த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் செப்.13 முதல் தொடங்குகிறார்.
-
துணை ஜனாதிபதி தேர்தல்: முதல் நபராக வாக்களித்த பிரதமர்
09 Sep 2025புதுடெல்லி, நாட்டின் 16-வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21-ம் தேதி பதவி விலகியதை தொடர்ந்து அந்த பதவிக்கு நேற்று தேர்தல் நடைபெறும் என த
-
அமெரிக்க ஓபன் பரிசுத்தொகை..?
09 Sep 2025ஆண்டின் கடைசி ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடைபெற்றது.