முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

அதிசயம் - ஆச்சர்யம்

மெல்போர்ன் நகரில் இருக்கும் ஸ்டீபன் ஹிர்ஸ்ட். மைன் கூன் வகையை சேர்ந்த ஓமர் என்ற பூனையை வளர்த்து வருகிறார். மாமிசத்தை மட்டுமே விரும்பி சாப்பிடும், ஒரு வயது நிரம்பிய இந்த பூனை 120 சென்டி மீட்டர் நீளமும், 14 கிலோ எடையும் உள்ளது.  தற்போது இந்தப் பூனை உலகின் மிக நீளமான பூனையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

பீட்சா எப்படி வந்தது

இன்று உலகையே ஆக்கிரமித்திருக்கும் பீட்சாவின் கதை தெரியுமா.. 1889ம் ஆண்டில், அப்போதைய இத்தாலி ராணியான மார்கரிட்டா மற்றும் ராஜாவான முதலாம் ராக் உம்பர்டோ ஆகியோர் நேப்பிள் பகுதியில் நகர்வலம் சென்றனர். அப்போது, அந்நகர ஏழைகள் விரும்பி சாப்பிட்டு வந்த தட்டை ரொட்டியை, ராணி சுவைத்து பார்த்தார். உடனே, தட்டை ரொட்டியின் ருசிக்கு மயங்கிய ராணி அதன் ரசிகையாகவே மாறிவிட்டார். உடனே தனது அரண்மனை சமையல்காரரை அழைத்து‘எனக்கு தட்டை ரொட்டியை தயார் செய்து தா’ என்று உத்தரவிட்டார். இதுதான் சந்தர்ப்பம் என்று காத்திருந்த அரண்மனை சமையல்காரர் ரஃபேல் எஸ்போசிடா, தட்டை ரொட்டிக்கு புதிய பரிமாணம் அளித்தார். அதில், இத்தாலிய சிகப்பு தக்காளி, சீஸ், துளசி இலைகள் போன்றவற்றை ஒரு அளவான விகிதத்தில் சேர்த்து ராணியிடம் கொடுத்தார். அவர் தயாரித்த தட்டை ரொட்டியில், இத்தாலிய தேசிய கொடியின் வண்ணங்களான சிவப்பு (தக்காளி), வெள்ளை, பச்சை இருக்கும்படி பார்த்து கொண்டார். இன்று, நம்மிடையே பிரபலமாக உள்ள மார்கரிட்டா பீட்சா என்ற ரகம் தோன்றியது இப்படித்தான். பின்னர் 2 ஆம் உலகப் போரின் போது ராணுவ வீரர்கள் மூலம் உலகம் முழுவதும் பரவி பீட்சா பல்வேறு வடிவங்களை எடுத்தது என்பது நீண்ட வரலாறு.

பறவைகளைப்போல வலசை செல்லும் விலங்குகள் எது தெரியுமா?

பருவ காலத்தின் போது இனப்பெருக்கத்துக்காகவோ, இரை தேடியோ பறவைகள் கண்டம் விட்டு கண்டம் செல்வதை வலசைக்கு போதல் என்று குறிப்பிடுகின்றனர். அதென்ன பறவைகள் மட்டும்தான் வலசை செல்லுமா, விலங்குகள், பூச்சிகள் செல்வதில்லையா என்று கேட்டால்... ஆம்.. அவற்றிலும் சில இது போல வலசை செல்கின்றன. சில பறவைகள், விலங்குகள், பூச்சிகள் ஆகியவை இரை மற்றும் இனப் பெருக்கத்துக்காக வாழக்கூடிய சூழலை நோக்கி இடம்பெயர்கின்றன. அலாஸ்கா கரிபு மான்கள், மெக்சிகோ மோனார்க் வண்ணத்துப்பூச்சிகள், ஆப்பிரிக்கத் தட்டான்பூச்சிகள், ஆப்பிரிக்க எருதுகள், சாம்பல் வண்ணத் திமிங்கிலங்கள் போன்றவை மிக நீண்ட தூரத்துக்கு வலசை செல்கின்றன.

தேநீர் விருந்து மூலம் திருமண சடங்கு

கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவின் எல்லையில் ரஷ்யா, ஈரான், ஆர்மீனியா, ஜார்ஜியா மற்றும் காஸ்பியன் கடல் இடையே அஜர்பைஜான் நாடு அமைந்துள்ளது. பெண்களுக்கு உரிமை வழங்கிய முதல் முஸ்லிம் நாடு. 1918 ஆம் ஆண்டில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதல் முஸ்லீம் நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது. இன்றுவரை ஆண் பெண் சமத்துவ முஸ்லிம் நாடுகளில் ஒன்றாக இருந்துவருகிறது. இங்கு திருமணம் நிச்சயம் வித்தியாசமாக தேநீர் கோப்பை மூலமாக நடத்தப்படுகிறது. திருமண நிச்சயம் செய்ய கூடியிருக்கும் பொழுது தேனீர் கோப்பைகள் சர்க்கரை இல்லாமல் பரிமாறப்பட்டால் திருமணம் இன்னும் நிச்சயம் செய்யப்படவில்லை என அர்த்தம். தேனீர் கோப்பையில் தேநீர் இனிப்பு சேர்த்து கொடுக்கப்பட்டால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டது என அர்த்தம். அஜர்பைஜானின் தேசிய விலங்கு கராபக் குதிரை. இது உலகின் பழமையான இனங்களில் ஒன்றாகும். அஜர்பைஜானில் குதிரை இறைச்சி ஒரு காலத்தில் பரவலாக உண்ணப்பட்டது. ஆனால் இப்போது அதற்கு பதிலாக மெனுவில் ஆட்டுக்குட்டி மற்றும் மாட்டிறைச்சியைக் காணலாம்.

பேஸ் புக்கை திறந்தால் கன்னத்தில் பளார்

இந்திய அமெரிக்கரான மணீர் சேதி. இவர் பாவ்லோக் நிறுவனத்தில் நிறுவனர் மற்றும் சிஇஓவாக பொறுப்பு வகித்து வருகிறார். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு தனது நிறுவனத்தின் உற்பத்தியை மேலும் அதிகரிக்க வேண்டும் என புரிந்து கொண்டார். இதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட அவர் விநோதமான முயற்சி ஒன்றையும் உருவாக்கினார். அதில் பணியின் போது பேஸ்புக் பார்ப்பதால் பணி திறன் பாதிப்பதாக கருதிய அவர்,தான் பேஸ் புக் பக்கத்தை பார்க்கும் போதெல்லாம் தன்னை அறைவதெற்கென பெண் ஊழியரை பணியமர்த்தினார். இவர் தன்னை அறியாமல் பேஸ் புக்கை திறக்கும் போதெல்லாம் அந்த பெண் இவரை கன்னத்தில் அறைவதுதான் அந்த பெண்ணின் பணி. கரா என்ற அந்த பெண்ணுக்கு இதற்காக மணிக்கு 8 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.600)  என்ற சம்பளமாக வழங்கப்பட்டது. இதனால் ஒரு ஆச்சரியப்படத்தக்க மாற்றம் ஏற்பட்டதாக அவர் கூறினார். ஆம் அவரது உற்பத்தி திறன் ஜெட்வேகத்தில் 98 சதவீதம் அதிகரித்துள்ளது.  இதில் அவரை அந்த பெண் கன்னத்தில் அறையும்  புகைப்படத்தையும் சேதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதை பிரபல டெஸ்லா கார் நிறுவன அதிபர் Elon Musk தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்ததுடன் மனீஷ் சேதியின் இந்த யோசனைக்கு பாராட்டும் தெரிவித்திருந்தார்.

ரூ. 1 கோடிக்கு விற்பனையான காளைமாடு

இந்த ஆண்டுக்கான வேளாண் கண்காட்சி பெங்களுருவில் நடைபெற்றது. இந்தாண்டுக்கான கண்காட்சியை பெங்களுரூ வேளாண் அறிவியல் பல்கலை கழகம் ஒருங்கிணைக்கிறது. நவம்பர் 11 முதல் 14 வரை நடைபெற்ற இந்த கண்காட்சி ஜிகேவிகே வளாகத்தில் நடைபெற்றது. இதில் பாரம்பரிய தானிய விதைகள், நாட்டு மாட்டு ரகங்கள், விலையுயர்ந்த பாரம்பரிய ஜாதி மாடுகள், வேளாண் கருவிகள், உழவு கருவிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. மேலும் 12 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகளும் பங்கேற்றனர்.இதன் ஹை அட்ராக்சனாக விளங்கியது எது வென்றால் ஒரு நாட்டு காளை மாடு ரூ.1 கோடிக்கு விற்பனையானது என்பதுதான். போரே கவுடா என்பவருக்கு சொந்தமான மூன்றரை வயது கொண்ட Hallikar ரக காளை மாடுதான் தற்போது அதிக விலைக்கு விற்பனையாகியுள்ளது. உயர் ஜாதி நாட்டு மாட்டு ரகமான இந்த காளையின் உயிரணுவுக்கு மிகுந்த டிமான்ட் இருப்பதால் ஒரு டோஸ் ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகிறது. இதன் உயிரணு விற்பனை மூலம் மாதம் ஒன்றிற்கு சுமார் ரூ.25 லட்சம் வரை வருவாய் வருவதாக சொல்லப்படுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்... எனவே இந்த காளைக்கு மிகுந்த தேவை இருப்பதால் விலையும் அதிகமாக உள்ளதாக அதன் உரிமையாளர் தெரிவித்தார். பொதுவாக மாடுகள் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் முதல் 2 லட்சம் வரை தான் விலை போகும். தற்போது ரூ.1 கோடிக்கு காளை விற்பனையான சம்பவம் விவசாயிகள் மத்தியில் ஆச்சரியமாக பகிரப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago