முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பனி, Snow

ஆர்க்டிக் பகுதியில் பனியில் உறைந்திருக்கும் 90 லட்சம் சதுர மைல் பரப்பளவு சுமார் 10 லட்சம் ஆண்டுகள் பழமையானவை. ஆர்க்டிக்கின் பெரும்பகுதி இன்னும் முழுமையாக அறியப்படவில்லை. புவி வேகமாக வெப்பமடைந்து ஆர்க்டிக் பனிப்படலம் உருகுவகுதால், அணுக்கழிவுகள், கண்டுபிடிக்கப்படாத வைரஸ்கள், ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு கட்டுப்படாத பாக்டீரியாக்கள் பரவலாம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

அதிசய சிறுமி

வங்கதேசத்தை சேர்ந்த சோய்டி கதூன் என்ற குழந்தை 3 காலுடன் பிறந்தது. இடுப்புடன் இணைந்த 3-வது கால் இருந்ததால் நடக்க முடியாமல் சிரமப்பட்ட அந்த சிறுமிக்கு ஆஸ்திரேலியாவின் மோனாஷ் சிறுவர்கள் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சைக்கு பின் சோய்டியால் நடக்கவும், ஓடவும் முடிகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மனிதனால் மட்டும்...

சராசரியாக, வாழ்நாளில் 25 கோடி தடவை அழும் அல்லது கண்ணீர் விடும் ஒரே உயிரினம் மனிதன்தான். அதிகமாக சிரிக்கும் போது கண்ணீர் வரக் காரணம், கண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ள சுரப்பியுள்ள தசைநார்கள் அழுத்தப்படுவதால்தான். ஆனால், பச்சிளம்குழந்தைகள் அழுவதில்லை, கத்த மட்டுமே செய்யுமாம்.

சைவ உணவு சாப்பிடும் முதலை கேரளாவில் அதிசயம்

பொதுவாக சிறிய விலங்குகள், மீன்கள் ஆகியவற்றை வேட்டையாடி உண்ணும் வகையைச் சேர்ந்தவைதான் முதலைகள். ஆனால் வடக்கு கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ளது ஸ்ரீஅனந்தபுரம் கோவில் என்ற இடம். இங்குள்ள கோவிலில் ஸ்ரீஅனந்தபுரம் பத்மநாப சுவாமிகள் அருள் பாலிக்கிறார்.  அக்கோயிலில் உள்ள குளத்தில் வசிக்கும் முதலை தான் இப்போது ஹைலைட். அவர்தான் நம்ம வெஜிடேரியன் முதலை. பாபியா என அப்பகுதி மக்களால் செல்லமாக அழைக்கப்படும் இது சில வேளைகளில் கோயிலுக்கு உள்ளேயும் வந்து விடுவதுண்டு.  கோயிலில் சமைக்கும் உணவுதான் இந்த முதலைக்கும் வழங்கப்படுகிறது.  இது எப்போது வந்தது என்று யாருக்கும் தெரியாது. கோயில் குருக்கள் அதற்கு கோயில் யானைக்கு கொடுப்பது மாதிரி சாதாரணமாக உணவை படைக்கிறார். நமக்கு படியளக்கும் பகவான்தான் அதற்கும் படியளக்கிறார் எனக் கூறும் குருக்கள், அந்த முதலை இதுவைர யாரையும் தாக்கியதில்லை என்கிறார். சாதுவான பூனை போல கோயில் பிரகாரத்தில் வலம் வருகிறார் முதலையார். 

மருதாணி

நகங்களின் மேல் சிறிது அளவு டூத்பேஸ்ட்டை தடவி காய விடுங்கள். பின் 10 முதல் 15 நிமிடங்கள் வரை அப்படியே விட்டு பிறகு தேய்த்து எடுத்தால், நகங்களின் மீது உள்ள மருதாணி கறைகள் முழுமையாக நீங்கி விடும். ஒரு சிறிய கிண்ணத்தில் இரண்டு தேக்கரண்டி ஆலிவ் ஆயில் மற்றும் உப்பு கலந்து கொள்ளுங்கள். அவை இரண்டும் சமமான அளவில் எடுத்துக் கொள்ளுங்கள். அந்தக் கலவையை ஒரு பருத்தித் துணியால் எடுத்து உங்களின் நகங்களின் மீது தேய்த்தால் மருதாணி கறை போயே போச்... இட்ஸ் கான்.

கயி்ற்றின் மீது நடப்பவர்கள்: ரஷ்யாவில் வினோத கிராமம்

நம்மூர்களில் திருவிழாக் காலங்களில் வித்தை காட்டும் கலைஞர்கள் தெருவில் இரு புறமும் கயிறை கட்டி கூத்தாடுவதை பார்த்திருக்கிறோம். அதையை சற்று உயரமாகவும், நீளமாகவும் மாற்றி வெளிநாடுகளில் சாதிப்பவர்களும் இருக்கிறார்கள். அண்மையில் இளைஞர் ஒருவர் பிரான்ஸ் நாட்டில் உள்ள ஈபில் டவர் மீது கயிற்றை கட்டி அசால்ட்டாக நடந்து சென்று சாதனை செய்த வீடியோ நெட்டில் வைரலாக பரவியதை அனைவரும் பார்த்திருக்கலாம்.ஆனால் ஒரு கிராமமே கயிற்றில் நடக்கும் வித்தை தெரிந்தவர்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோமா.. என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த கிராமத்தில் முதியவர் தொடங்கி இளையவர் வரை, பெண்கள் தொடங்கி சிறுவர்கள் வரை அனைவரும் கயிற்றில் நடக்கும் வித்தை தெரிந்தவர்களாக அசத்து கின்றனர். இந்த வினோத கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா.. ரஷ்யாவில்.. பொதுவாகவே சர்க்கஸ் துறையில் ரஷ்யர்கள் தான் எப்போதும் முன்னிலையில் இருப்பவர்கள். கடந்த நூற்றாண்டில் சர்க்கஸ் தொழில் செழித்து கிடந்த கால கட்டத்தில் ரஷ்யர்கள் உலகம் முழுவதையும் வியாபித்திருந்தனர். தற்போது சர்ககஸ் தொழில் படிப்படியாக குறைந்து விட்டது.மக்களுக்கும் பெரிய அளவில் ஆர்வம் காட்டுவது இல்லை. அது கிடக்கட்டும்.. கயிற்றின் நடக்கும் அந்த கிராமம் Russia’s Dagestan autonomous republic என்று சொல்லப்படும் பிராந்தியத்தில் உள்ள Tsovkra-1 என்ற சிறிய கிராமம் தான் அது. அந்த கிராமத்தில் உள்ள அனைத்து மக்களுமே கயிற்றில் நடக்கும் திறன் பெற்றவர்கள் என்பதாலேயே அது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த காலத்தில் 3 ஆயிரம் மக்கள் தொகையை கொண்டிருந்த அந்த கிராமம் தற்போது 300 பேராக குறைந்துள்ளது. சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கயிற்றின் மேல் நடக்கும் மரபை அவர்கள் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago