முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

உலகிலேயே மிகப் பெரிய புத்தகம்

உலகிலேயே மிகப் பெரிய புத்தகம் 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் வெளியிடப்பட்டது. இந்த புத்தகம் இஸ்லாமிய இறைத் தூதரான நபிகள் நாயகம் வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய சம்பவங்களை தொகுத்து வழங்குவதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை அரபு நாட்டிலுள்ள Mshahed International Group என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புத்தகத்தை உருவாக்கும் பணியில் 50க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர். 16.40 அடி அகலமும், 26.44 அடி உயரமும் கொண்டதாக 1360 கிலோ எடை கொண்டதாக உருவாக்கப்பட்டது. உலகிலேயே மிகவும் பெரிய புத்தகம் என்ற கின்னஸிலும் இடம் பிடித்துள்ளது.

உலகின் மிகச்சிறிய நாடு எது தெரியுமா?

உலகின் மிகச்சிறிய நாடு ‘வாடிகன் சிட்டி’. இது மொத்தமாக 0.44 சதுர கிலோமீட்டர் அளவே உடையது. மொத்தமாக 110 ஏக்கர் மட்டுமே, இதன் பரப்பளவு. இது ரோம் நகரின் உள்ளேயே அமைந்துள்ளது. இது உலகளாவிய கத்தோலிக சபையின் தலைமை இடமாக உள்ளது. உலகின் மிகப்பெரிய தேவாலயமான புனித பீட்டர் பஸிலிக்கா இங்கு உள்ளது. இது 1929ம் ஆண்டு, முசோலினி போப்புடன் செய்துக் கொண்ட லாட்டரன் உடன்படிக்கையின் போது உருவாக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது, இது நடுநிலை நாடாக இருந்தபடியால், மேலும் கத்தோலிக சபையின் தலைநகராக இருந்தபடியால், தாக்குதலுக்கு உள்ளாகவில்லை. உலகெங்கிலும் உள்ள 100 கோடி கத்தோலிகர்களின் தன்னார்வ கொடையே இதன் வருமானம். இதைத் தவிர, அருங்காட்சியக நுழைவுக் கட்டணம், தபால் தலைகள், சுற்றுலா நினைவுப் பொருட்கள் வழியாக பணம் கிடைக்கிறது. இதன் மொத்த மக்கள் தொகை, கிட்டத்தட்ட 1000 மட்டுமே. இது பிறப்பினால் வரும் குடியுரிமை அல்ல. இது கத்தோலிக சபையின் பல்வேறு பொறுப்புகளில் அமர்த்தப்படும் நபர்களுக்கு, மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு, அந்த பொறுப்பின் காலத்திற்கேற்ப, குடியுரிமை வழங்கப்படும். அந்தப் பொறுப்பின் காலத்திற்கு பிறகு, தன்னிச்சையாகவே, லாட்டரன் உடன்படிக்கையின் படி, அந்தக் குடியுரிமை இத்தாலிய குடியுரிமையாக மாற்றப்படும்.

மிகவும் சிறந்தது

குழந்தைகளுக்கு உணர்வுப் பிரச்சனைகளை கையாள அவர்களுக்கு விளையாட்டுச் சிகிச்சை நல்ல பலன் அளிக்கிறது. இந்த சிகிச்சை மறைமுகமாக குழந்தைகளின் தேவைகளை புரிந்துகொள்வது. இதன் மூலம் குழந்தையின் உணர்வுகளை வெளிக்கொண்டு வரமுடியும். 3 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு இந்த சிகிச்சையை பயன்படுத்தலாம்

அந்த 6 மணி நேரம் ....

அதிகபட்சமாக தினசரி 8 மணி நேரம் நன்றாக அயர்ந்து தூங்கினால் உடலுக்கு நல்லது என்ற பொதுவான கருத்து உள்ளது. தற்போது குறைந்தது தினந்தோறும் 6 மணி நேரத்துக்கு குறையாமல் தூங்க வேண்டும்.  இல்லாவிடில் உடலில் பலவிதமான நோய்கள் ஏற்பட்டு உயிரிழப்பு அபாயம் உருவாகுமாம். இதுகுறித்து சமீபத்தில் ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. அதில் 6 மணி நேரத்துக்கு குறைவாக தூங்கியவர்கள் நீரிழிவு, அதிகபட்ச ரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் நோய்கள் ஏற்படுகிறதாம். அதன் மூலம் 2 மடங்கு உயிரிழப்பு அபாயம் உருவாகும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. தூக்கம் குறைவதால் இருதய நோய்கள், பக்க வாதம், மூளையில் பாதிப்பு போன்றவையும் உருவாகும். எனவே நாள் ஒன்றுக்கு குறைந்தது 6 மணி நேரமாவது தூங்க வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இங்கிலாந்து பவுண்ட்ஸ்

இங்கிலாந்து வங்கி திங்களன்று ஒரு ட்வீட் மூலம் புதிய 5 பவுண்டு நோட்டுகளில் விலங்கு கொழுப்பு (animal fat) இருப்பதாக உறுதிப்படுத்தி இருக்கின்றது.இதை தொடர்ந்து சைவ உணவு உண்பவர்கள் பெரும் காட்டம் அடைந்துள்ளனர். அந்த நோட்டுகளை நீக்க வேண்டும் என ஒரு மனுவில் இது வரை சுமார் 19,000 பேர் கையெழுத்திட்டு வங்கியிடம் கோரிக்கை வைக்க உள்ளனர்.

தீப்பெட்டிக்கு முன்பாகவே லைட்டர் வந்து விட்டது தெரியுமா?

அறிவியல் எப்போதும் சிக்கலான கால வரிசையை கொண்டிருக்கும். எது எப்போது வெளிப்படும் என்பதை மனிதனால் யூகிக்க முடியாது. அதே போல தான் மிகவும் எளிமையான தீக்குச்சி தீப்பெட்டி போன்றவை கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே லைட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன. அதான்ங்க... சிகரெட்களை பற்ற வைக்க நாம் பயன்படுத்துகிறோமே அந்த குட்டி சாதனம்தான்... 1816 இல் ஜெர்மனி வேதியியலாளர் ஜோகன் வுல்ப்காங் என்பவர் லைட்டரை கண்டு பிடித்து விட்டார்.  அதற்கு பின்னர் சில ஆண்டுகள் கழித்து 1827 இல் தான் தீப்பெட்டியும் தீக்குச்சியையும் பிரிட்டனை சேர்ந்த வேதியியலாளர் ஜான் வாக்கர் என்பவர் சல்பைடு, பொட்டாசியம் குளோரேட், பசை, ஸ்டார்ச் ஆகியவற்றை கொண்டு தயாரிக்கிறார். தொடக்கத்தில் தனது கண்டுபிடிப்புக்கு காங்கிரேவ்ஸ் என்று பெயரிட்டார். பின்னர்தான் அவை மேட்ச் தீப்பெட்டி, தீக்குச்சி என்ற பெயரை பெற்றன என்றால் ஆச்சரியம் தானே..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago