முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

சளி பிரச்சினைக்கு...

நெஞ்சில்  சளிக்கட்டிக்கொண்டு மூச்சு விட சிரமப்படுபவர்களும், சளியால் இருமல் வந்து அடிக்கடி இருமி வயிற்று வலி ஏற்படுவர்களுக்கும் ஏலக்காய் நல்ல மருந்தாக அமையும். ஏலக்காயை மென்று சாப்பிட்டாலே தொடர் இருமல் குறையும். மேலும், சளியின் தாக்கம் குறையும். ஆனால் அதிகம் சேர்க்க கூடாது.

அறிவுறுத்தும் ஆவல்

புளிப்பான உணவுகளின் மீது நாட்டம் அதிகமாக இருந்தால், பித்தப்பை மற்றும் கல்லீரல் அளவுக்கு அதிகமாக வேலை செய்கிறது என்று அர்த்தம். இறைச்சிகளின் மீது நாட்டம் இருந்தால், உடலுக்கு புரோட்டீனை தேவை என்று அர்த்தம். சர்க்கரை  மீது ஆவல் அளவுக்கு அதிகமாக நாம் சர்க்கரை எடுத்துக்கொள்கிறோம் என்று அர்த்தம்.

ஆரஞ்சுத்தோல் டீ

சருமப் பிரச்சனைகளை நீக்க மற்றும் சருமம் பளபளப்பு பெற ஆரஞ்சு பழத் தோலால் தயாரிக்கப்படும் டீ  சிறந்தது. இதற்கு ஆரஞ்சுத் பழத் தோல் பவுட் 2 ஸ்பூன் எடுத்து அதனுடன் ஏலக்காய் 2 சேர்த்து அதை 2 டம்ளர் நீரில் போட்டுக் கொதிக்கவிட்டு, பாதியாகச் சுண்டியதும் அதை வடிகட்டி தேன் சேர்த்தால் ஆரச்சுத் தோல் டீ ரெடி.

ஆக்ஸிஜனின் பிறப்பிடம்

பூகோளத்தின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசான் காடுகளின் மொத்த பரப்பளவு 55 லட்சம் ச.கி.மீ. பிரேசில் உள்ளிட்ட 9 நாடுகள் வரை நீண்டிருக்கும் இதை ஒரு நாடாக கருதினால், பரப்பளவில் இது 9-வது இடத்தைப் பிடிக்கும். இதில் 6,400 கி.மீ. தூரமுள்ள நதி ஓடுகிறது. நீளமான நதிகளின் பட்டியலில் அமேசான் நதி 2-ம் இடத்தில் உள்ளது. 40 ஆயிரம் தாவர இனங்கள், 3 ஆயிரம் மீன் இனங்கள், 400க்கும் மேற்பட்ட பாலூட்டிகள் இங்கு வசிக்கின்றன. அமேசான் மழைக்காடுகளால் தான் உலகிற்கு 20 சதவிகிதத்திற்கும் அதிகமான ஆக்ஸிஜன் கிடைக்கிறது. அதேபோல் ஆயிரத்திற்கும் மேற்போட்ட பறவை இனங்களும், 25 லட்சம் வகை பூச்சிகளுக்கும் அமேசான் காடுகள்தான் வாழ்விடமாக இருக்கின்றன. உலகில் 3 டி.செ வெப்பநிலை அதிகரிப்பால் இந்த காடு தற்போது அழிவை எதிர்நோக்கியுள்ளது.

விபத்தை தடுக்க

ரயிலில் மட்டும் நாம் விரும்பும் இருக்கையை தேர்வு செய்ய முடியாது அதற்கு காரணம் உண்டு. நாம் டிக்கெட் பதிவு செய்யும் போது, எல்லா கோச்சிலும், மத்திய பகுதியில் இருக்கும் இருக்கைகள் தான் முதலில் பதிவு செய்யப்படும். அதற்கடுத்து இருக்கைகள் சீரான முறையில் பதிவு செய்யப்படும். பர்த் பதிவுகளும் இப்படி தான். ரயிலில் இப்படி டிக்கெட் பதிவு செய்து பிரித்தால் தான் ரயில் ஓடும் போது அதன் புவியீர்ப்பு மையம் பாதிக்கப்படாமல் இருக்கும். ரயில் ஓடும் போது அதன் சமநிலை பாதிப்படையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த முறை பின்பற்றப்படுகிறது. இதனால் தான் ரயில்கள் வேகமாக பயனிக்கும் போது விபத்து ஏற்படாமல் பயணிக்க உதவுகிறது.

தண்ணீர் நல்லது

தண்ணீர் என்பது ஆக்சிஜன் மற்றும்  ஹைட்ரஜன் கலந்த கூட்டுக் கலவையாகும். தண்ணீரை அதிக அளவில் குடித்தால்  உடல் எடை குண்டாகாமல் சீரான உடலுடன் அழகாக இருக்க முடியும் என்கிறார்கள்  மருத்துவ நிபுணர்கள். தண்ணீரை அதிக அளவில் குடிப்பதால் யூரிக் அமிலம் போன்ற தேவையற்ற கழிவுகள் விரைவில் சிறு நீர் வழியாக வெளியேறி உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதனால் உடல், மூளை செயல்பாட்டு திறன் மிகச்சிறப்பாக செயல்பட்டு சுறுசுறுப்பையும் தரும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago