முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

எல்.இ.டி ஸ்டிக்

மரத்தாலான ஸ்டிக் ஒன்றில் எல்.இ.டி கதிர்களை உமிழும் விளக்குகளைப் பொருத்தி காற்றில் படம் வரையும் அதிசயத்தை டிஐஒய் நெட்வொர்க் எனும் நிறுவனம். இந்தக் கருவிக்கு பிக்செல் ஸ்டிக் என்று பெயரிட்டுள்ளனர். பார்ப்பதற்கு மேஜிக் போல தெரிந்தாலும், தொழில்நுட்பத்தின் உதவியுடன் இது சாத்தியமாகியுள்ளது.

காற்றாழையில் இருந்து தோலாடை

ஆண்டு தோறும் தோல் மற்றும் இறைச்சிக்காக ஏராளமான வன விலங்குகள் கொல்லப்ட்டு வருகின்றன. இவற்றை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில் புதிய சாதனையாக  இரண்டு இளைஞர்கள்  கற்றாழையிலிருந்து ‘தோல்’ ஆடை உருவாக்கி சாதனை படைத்து உள்ளனர்.விலங்குகளின் தோல்களில் இருந்து தயாரிப்படும் பல்வேறு வகையான  ஆடம்பர பொருட்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. இதன் காரணமாக, சட்டவிரோதமாக விலங்குகள் வேட்டையாடப்படும் கொடுமையும் நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில் , அட்ரியானோ டி மார்டி என்ற நிறுவனம்,  டெசர்டோ எனப்படும் கற்றாழை இலைகளைப் பயன்படுத்தி தோலைப் போன்றே  துணியை உருவாக்க ஒரு புதிய நுட்பத்தை வகுத்துள்ளது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களான  அட்ரியன் லோபஸ் வெலார்டே மற்றும் மார்ட்டே செசரெஸ் ஆகிய இளைஞர்கள் இதை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஒரு சமயத்தில் ஒரு நாசி துவாரத்தின் வாயிலாக மட்டுமே சுவாசிக்க முடியும்

இன்றைய நவீன யுகத்தில் மன அழுத்தம் குறைய சுவாச பயிற்சி, பிராணயாமம் என பல்வேறு மூச்சு பயிற்சிகளும், யோக பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. நாம் நாசித் துவாரத்தின் வாயிலாக மூச்சை இழுத்து அதை நுரையீரலுக்கு அளிப்பதன் மூலம் பிராண வாயு உடலுக்கு சென்று தேவையான ஆற்றலை அளிக்கிறது. ஆனால் நாம் சுவாசிக்கும் போது ஒரு நேரத்தில் ஒரு நாசித் துவாரத்தின் வாயிலாக மட்டும்தான் சுவாசிக்கிறோம் என்பது உங்களுக்கு தெரியுமா... ஒரே நேரத்தில் இரு நாசித் துவாரங்கள் வாயிலாகவும் மனிதன் சுவாசிப்பது கிடையாது. கேட்பதற்கு மிகவும் இது சிக்கலானது. ஒரு துவாரத்தின் வழியாக சுவாசித்தாலும் இரு நாசிகளும் சம அளவில் பிராண வாயுவை பகிர்ந்து கொள்கின்றன. ஒவ்வொரு நாசித் துவாரத்தின் வாயிலாகவும் சுவாசிப்பது சில மணி நேரங்களுக்கு ஒரு முறை மாறி மாறி நடக்கும் என்பதும் ஆச்சரியமான ஒன்று தானே.

மனிதர்களை போன்றே....

சமூக ஈடுபாடு மனிதர்களில் அதிகம் காணப்படுகின்றது. இதே இயல்பு குரங்குகளிலும் காணப்படுவதாக தற்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். குரங்கின் மூளையிலுள்ள நரப்பு வலையமைப்பினை ஸ்கேன் செய்து பார்த்த போது இந்த உண்மை வெளியாகியுள்ளது.குரங்குகளின் மூளைகளில் உள்ள நியூரான்களில் மனிதர்களை போன்று கற்பனைத்திறன் உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உணவும் வலிமையும்

முடி உதிர்தல், சொட்டை ஆகிய்வற்றை தடுக்கும் ஆற்றல் உணவுகளுக்கு உள்ளன. சால்மன் மீனில் உள்ள அதிக புரதச் சத்து கூந்தலுக்கு பலம் தரும். முடிஉதிர்தல் சொட்டை ஆகிய்வை உருவாகாது. தேன் கூந்தலின் அடர்த்திக்கும், நட்ஸ் சாப்பிடுவது மரபியல் ரீதியாக வரும் சொட்டையை தடுக்கவும், பசலைக் கீரை சாப்பிட்டால் முடி உதிர்வை தவிர்க உதவும். பூசணி விதை எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய்வைகள் கூந்தலுக்கு தேவையான ஊட்டசத்தை தருவதால் அவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது மிக நல்லது.

புதுவித அழைப்பிதழ்

மக்களிடமும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக திருமண அழைப்பிதழை ஏடிஎம் கார்டு வடிவில் தற்போது அச்சடிக்கின்றனர். இந்த ஏ.டி.எம் கார்டு வடிவிலான திருமண அழைப்பிதழ்கள் எளிய வகையில் அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் மணமக்களின் பெயர்கள், கல்யாண தேதி, இடம் ஆகிய விவரங்கள் மட்டும் இடம்பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago