முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

வியக்க வைக்கும் மனித உடல்

நமது உடலில் விழி வெண் படலத்தில் இரத்த நாளங்கள் இல்லை. இது காற்றில் இருந்து ஆக்சிஜன் பெறுகிறது. மனித உடலில் இருக்கும் நியூரான்கள் ஒன்றிணைந்து இயங்கும் போது மில்லியன் ஜி.பி கம்பியூட்டர் ஸ்டோரேஜ்-க்கு இணையானதாக விளங்குகிறது. உடலில் இருக்கும் 25% ஆக்சிஜன் மூளைக்கு தான் செல்கிறது. பிறந்த குழந்தையால் ஒரே நேரத்தில் குடிக்கவும் முடியும், மூச்சுவிடவும் முடியும். மண்டை ஓட்டில் மட்டுமே 22 எலும்புகள் இருக்கின்றன. மூளையில் இருந்து அனுப்பப்படும் நர்வ் இம்பல்ஸ்-களின் வேகம் மணிக்கு 274 கிலோமீட்டர் வேகம் ஆகும். இதயம் சராசரியாக நமது வாழ்நாளில் 228 மில்லியன் லிட்டர் இரத்தத்தை பம்ப் செய்கிறது. முப்பதாவது வயதிற்குள் உங்கள் இதயம் நூறுகோடி முறை துடித்திருக்கும். மனிதர்கள் மத்தியில் சரும நிற வேறுபாடு இருப்பதற்கு காரணம் மெலனின். இது தான் ஒருவரது சருமத்தை கருமை, வெண்மை என ஆக்குகிறது.

மிதக்கும் தபால் நிலையம்

உலகிலேயே மிதக்கும் தபால் நிலையம் எங்கிருக்கு தெரியுமா.. அது வேறு எங்கும் இல்லை. இந்தியாவில்தான். அதுவும் குளுகுளு காஷ்மீரில். ஸ்ரீ நகரில் உள்ள தால் ஏரியில் கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மிதக்கும் தபால் அலுவலகம் திறக்கப்பட்டது.  அப்போதைய முதலமைச்சர் உமர் அப்துல்லா மற்றும் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் சச்சின் பைலட் ஆகியோரால்தொடங்கப்பட்டது. படகு ஒன்றில் தான் இந்த அலுவலகம் செயல்படுகிறது. ஏரியில் மிதந்தபடியே உள்ளூர் மக்களுக்கான தபால் சேவைகளை செய்து வருகிறது.   உலகளவில் இந்தியாவில் தான் அதிக தபால் அலுவலகங்கள் உள்ளன. இந்தியாவில் சுமார் 1,55,015 தபால் அலுவலகங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

வெள்ளத்தில் மூழ்கியும் அணையாமல் தீபம் எரியும் கோயில்

நாமக்கல் மாவட்டம்  மோகனூர். இங்கே, ஊருக்குள், காவிரிக் கரையோரத்தில் உள்ளது ஸ்ரீஅசலதீபேஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தில் அப்படி என்ன சிறப்பு. எத்தனையோ உள்ளன. பாடல் பெற்ற தலம். திருக்கார்த்திகை தீபத் திருவிழா இங்கே விமரிசையாக கொண்டாடப்படுகிறது. காசிக்கு நிகரான தலம், திருவண்ணாமலைக்கு நிகரான தலம் எனப் போற்றப்படுகிறது. சுவாமி முன் உள்ள தீபம் ஆடாமல் அசையாமல் எரிவதாலேயே அவருக்கு அசலதீபேஸ்வரர் என்ற பெயர் வந்தது. ஒரு முறை காவிரியில் வெள்ளம் வந்து கோயில் மூழ்கிய போதும் தீபம் மட்டும் விடாமல் எரிந்து கொண்டிருந்ததாகக் கூறப்படுவது இதன் கூடுதல் சிறப்பு.

பழங்கால கல் கோளங்கள் அல்லது கல்பந்துகள் எங்குள்ளன தெரியுமா?

பார்ப்பதற்கு பூங்காவில் அழகிய வடிவமைப்புக்காக செய்து வைக்கப்பட்டுள்ளதை போல காட்சியளிக்கும் கல் கோளங்கள் கோஸ்டா ரிகாவில் கண்டு பிடிக்கப்பட்டன. இவற்றை உள்ளூர் வாசிகள் கல் பந்துகள் என்றழைக்கின்றனர். 1 செமீ தொடங்கி 2 மீ விட்டம் கொண்ட சுமார் 15 டன் வரையிலான எடை கொண்ட ஏராளமான கல் கோளங்கள் கண்டறியப்பட்டன. இவை சுமார் கிபி 600 முதல் 1500 வரையிலான கால கட்டத்தைச் சேர்ந்தவையாக கூறப்படுகிறது. டிக்யூஸ் கலாச்சாரத்தை சேர்ந்த இந்த கற்கோளங்கள் எதற்காக செய்யப்பட்டன என்பது விளங்காத மர்மமாகவே வரலாற்றில் இது வரை இருந்து வருகிறது என்றால் ஆச்சரியம் தானே..

கொடிய விஷமான சயனைடே உயிர்கள் உருவாக காரணமாம்

உயிரை எடுக்க கூடிய சயனைடே உயிர்கள் உருவாக காரணமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.  புதிய ஆராய்ச்சியில் ,  கொடிய சயனைடு  கலவை, உண்மையில், பூமியில் உயிர்கள் உருவாக உதவியது என்று கண்டறியப்பட்டு உள்ளது. விஞ்ஞானிகள் சயனைடைப் பயன்படுத்தி ஒரு இரசாயன எதிர்வினையை உருவாக்கியுள்ளனர்,சயனைடு நான்கு 400 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் கரிம உயிர்களை உருவாக்கத் உதவியது என கண்டறிந்து உள்ளனர். சயனைடு என்பது கார்பன் மற்றும் நைட்ரோஜன் அணுக்களால் உருவானது. இதன் அறிவியல் பெயர் சிஎச் (CH). இதை உட்கொண்டால் உடனே மரணம் தான். பிழைத்தாலும் வாழ்நாள் எல்லாம் நரம்பு சம்பந்த பட்ட நோய்களால் அவதி பட நேரிடும். இதுகுறித்து கூறிய ஆராய்ச்சியாளர்கள் 'சயனைடு பூமியில் உயிர்களின் தோற்றத்தில் முக்கிய பங்கு வகித்திருக்கலாம், மேலும் வேற்றுகிரகவாசிகளை கண்டறிய நமக்கு  உதவலாம்' என்று கூறி உள்ளனர். ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சியின் வேதியியல் இணைப் பேராசிரியரும், ஆய்வின் முதன்மை ஆசிரியருமான டாக்டர் ராமநாராயணன் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:- பூமியின் ஆரம்பத்திலோ அல்லது பிற கிரகங்களிலோ - நாம் உயிர் வாழ்வின் அறிகுறிகளைத் தேடும்போது - நாம் அறிந்த உயிர் வேதியியலின் அடிப்படையில் தேடுகிறோம். இதே வளர்சிதை மாற்ற எதிர்வினைகள் சயனைடால் நிகழ்ந்து இருக்கலாம் என்பது வாழ்க்கை மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்பதைக் காட்டுகிறது என கூறினார்.

சாக்லேட்டின் தாயகம்

கொலம்பஸ் 16ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். அப்போது அங்கு வாழ்ந்து வந்த மக்கள் சாக்லேட்களைப் பயன்படுத்தி வந்ததைக் கண்டு பின்னர் ஸ்பெயின் நாட்டுக்கு அதனை அறிமுகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.கி.பி. 1350ஆம் ஆண்டுகளில் தென் ஆப்பிரிக்காவில் பயன்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அங்கு வாழ்ந்து வந்த மக்கள் சாக்லேட்டை கோகா மரங்களில் இருந்து பெற்றனர். பின்னர் ஸ்பெயின் நாட்டிலும் இத்திரவப் பொருள் ஓர் உணவாகப் பரவியது. ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக் காலம் இது ஸ்பெயினில் மட்டுமே புழக்கத்தில் இருந்து வந்தது என பல்வேறு ஆதாரங்கள் கூறுகின்றன. 17 ஆம் நூற்றாண்டில் பிரான்சில் சாக்லேட் அறிமுகப்படுத்தப்பட்ட போது உடனடியாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. உடலுக்கு தீங்கற்றது என அரசு சான்றளித்த பிறகே 1650 இல் மக்கள் பானமாக மாறியது. பின்னர் பிரெஞ்சுக்காரர் அதை ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தினார். 18 ஆம் நூற்றாண்டில் தான் இங்கிலாந்துக்குள் நுழைகிறது சாக்லேட். சுவிஸ் நாட்டு கெய்லர் சாக்லேட்டை கட்டிகளாக மாற்றி பரவ செய்தார். காட்பரி சகோதரர்களான புரோஜான் மற்றும் பெஞ்சமின் ஆகியோர் விதவிதமான மூலப்பொருட்கள் கலவையுடன் சுவையான சாக்லேட் பண்டங்களை உருவாக்கினர்.கோஹன்ரிட் ஜே. வான் ஹட்டன் என்ற டச்சு நாட்டு வேதியியல் அறிஞர் 1860 ஆம் ஆண்டில் சாக்லேட் திரவத்தை, சாக்லேட் தூளாக மாற்றக்கூடிய தொழில்நுட்பச் செயல் முறையைக் கண்டுபிடித்தார். இக்கோட்பாட்டின் அடிப்படையில் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த டேனியல் பீட்டர் என்பவர் பால் சாக்லேட்டைத் தயாரிக்கத் துவங்கினார்.தற்போது இந்தியா உட்பட எல்லா நாடுகளிலும் வகை வகையான சாக்லேட்கள் தயாரிக்கப்படுகின்றன. 2 ஆம் உலகப் போரின் போது வீரர்களுக்காக விதவிதமான சாக்லேட்கள் தயாரிக்கப்பட்டன

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago