முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஆபத்து அதிகம்

மார்ப்பகப் புற்றுநோய், 40 வயதைக் கடந்த பெண்களுக்கு வர வாய்ப்புகள் அதிகம். பாலூட்டாத பெண்கள் மார்பகப் புற்று நோய் வர வாய்ப்பு அதிகம். காரணம், பாலூட்டுவதால் புற்றுநோய்க்குக் காரணமாகும் சில ஹார்மோன்களின் அளவு உடலில் கட்டுக்குள் வைக்கப்படும். பாலூட்டும் காலம் முடியும்போது, டி.என்.ஏ சிதைவுக்கு உட்பட்ட மார்பகச் செல்கள் தாய் உடலில் இருந்து விடுபட்டிருக்கும். அவை எதிர்காலத்தில் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.

பாடஹஸ்தாசனம்

பாடஹஸ்தாசனத்தை செய்வது மிகவும் எளிது. இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் இடுப்பு, கால்கள் நன்கு வலிமை அடையும். மேலும் ஜீரண சக்தியை அதிகரிக்கும்.இந்த ஆசனத்தை தினமும் 3 முதல் 5 முறை செய்து வந்தால், இடுப்பு வளையும் தன்மை பெறுகிறது. ஜீரண சக்தி அதிகரிக்கிறது. கால்கள் வலுப்பெறுகின்றன.

புராணங்களில் இடம் பெற்றுள்ள பறவைகள் எது தெரியுமா?

எகிப்து புராணங்களில் பா என்ற பறவையும், சாம்பலிலிருந்து உயிர்தெழும் பீனிக்ஸ் பறவையும் குறிப்பிடப்பட்டுள்ளன. மெக்சிகோ நாட்டுப்புற கதைகளில் கூ என்ற பறவை வருகிறது. பூர்வீக அமெரிக்க புராணங்களில் தீப்பறவை இடம் பெற்றுள்ளது. கிரேக்க புராணங்களில் ஹார்பீஸ் என்ற பறவை சொல்லப்படுகிறது. ஆஸ்டெக் புராணங்களில் குவாட்செல்கோட் என்ற பறவை சொல்லப்படுகிறது. அமெரிக்க புராணங்களில் ராவன் ஆகிய பறவைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்து புராணங்களில் அன்னம், சக்கரவாகம், அன்றில் போன்ற பறவைகள் குறிப்பிடப்படுகின்றன.

நல்ல தோற்றத்திற்கு ...

உடல் ஆரோக்கியத்தில் தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. தூக்கம் இல்லாவிடில் உடல் நலக்குறைவு ஏற்படும். இந்த நிலையில் வழக்கத்தை விட குறைந்த நேரம் தூங்கினால் உடல் மட்டுமின்றி முக கவர்ச்சியும், வசீகரமும் குறையும் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. சுவீடனில், 25 பேரை தேர்ந்தெடுத்து அவர்களிடம் 7.5 மணி நேரம் அயர்ந்து தூங்கும்படி வலியுறுத்தினர். அதன் பின்னர் முக அழகை போட்டோ எடுத்தனர். அதே போன்று 4 மணி நேரம் தூங்க வைத்து போட்டோ எடுக்கப்பட்டது. அவற்றில் குறைந்த நேரம் தூங்கிய போட்டோவில் முகம் பொலிவிழந்து கவர்ச்சி இன்றி காணப்பட்டது. இதன் மூலம் முகம் கவர்ச்சியுடன் திகழ அதிக நேரம் தூங்க வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

பிறந்த குழந்தைகள் 75 சதவீதம் நீராலானவை

பிறந்த குழந்தைகள் 75 சதவீதம் நீராலானவை என்றால் நம்ப முடிகிறதா.. ஆனால் அதுதான் உண்மை... குழந்தைகள் பிறந்ததும் பெரும்பாலும் அவை நீராகவே இருக்கின்றன. அவர்களது உடலில் 75 சதவீதம் நீரே இருப்பதாக நாசாவின் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. மனிதன் வளர வளர தனது நீர்ச்சத்தை இழப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வளர்ந்த மனிதர்கள் 55 முதல் 60 சசதவீதம் வரையில் நீரை இழக்கிறார் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. என்ன அற்புதம் பாருங்கள் உடல் நீராலானது என்றால் ஆச்சரியம் தானே.

பிராணாயாமம்

நாம் மிக ஆழமாக மூச்சை இழுக்கும்போது ஆக்சிஜன், உடலில் உள்ள அனைத்து திசுக்களுக்கும் அதிக அளவில் கிடைக்கிறது. இது திசுக்களின் செயல்பாட்டை விரைவுபடுத்தி நச்சுக்களை அப்புறப்படுத்துகிறது. வயிறு உள்ளே போவதால், வயிற்றுப் பகுதி தசைகள் சுருங்கும். இந்தத் தசைப் பயிற்சியை, தினமும் தொடர்ந்து செய்யும்போது, இவை இரண்டும் சேர்ந்து உடலின் எடையைக் குறைத்துவிடும்,

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago