முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

புதிய கண்டுபிடிப்பு

கார்பன் டை ஆக்சைடை மீத்தேனாக மாற்றும் முறையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ரோடியம் என்ற நுண்துகள் மூலம் நிகழ்த்தப்படும் வேதிவினையால் உலக அளவில் ஏற்படும் மாசுபாட்டுக்கு முக்கிய காரணியாக விளங்கும் கார்பன் டை ஆக்சைடினை மீத்தேனாக மாற்ற முடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரூ. 714 கோடியாம்

மறைந்த ஓவியர் ஷான் மிஷெல் பாஸ்கியா வரைந்த அந்த ஓவியம், நியூயார்க்கில் பிரபல ஏல நிறுவனத்தில் விற்பனை செய்யப்பட்டது. ஒரு மண்டையோடு வடிவத்தைக் கொண்ட முகத்தை இந்த ஓவியம் சித்தரிக்கிறது. இந்த ஓவியம், 110.5 மில்லியன் டாலர் களுக்கு விற்பனையானது. இந்திய மதிப்பில் இதன் விலை சுமார் 714 கோடி ரூபாய். இதை ஜப்பானைச் சேர்ந்த தொழில்முனைவர் வாங்கியுள்ளார். ஓவியர் ஷான் மிஷெலின் முந்தைய ஓவியத்தைக் காட்டிலும் இது கிட்டத்தட்ட இருமடங்கு விலைக்கு விற்கப்பட்டிருக்கிறது. தற்போது ஓவியத்தை ஏலத்தில் எடுத்தவர்தான் ஓர் ஆண்டுக்குமுன், ஷான் மிஷெலின் அந்த ஓவியத்தையும் விலைக்கு வாங்கினார். அமெரிக்காவைச் சேர்ந்த ஓவியக் கலைஞர்கள் வரைந்து விற்பனையான படைப்புகளிலேயே இது மிகவும் அதிக விலைக்குப் போனதாம்.

உலகை முதன்முதலாக கப்பலில் சுற்றி வந்த பயணி

பெர்டினல் மெக்கலன் என்ற ஸ்பெயின் நாட்டு மாலுமி 1519 இல் 5 கப்பல்களுடன் இந்தியாவை தேடி புறப்பட்டார். அவர் தென் அமெரிக்கா வந்து அங்கிருந்து மேற்கொண்டு செல்லும் வழியை தேடினார். அவர் வந்த கடற்பாதைதான் மெக்கல்லன் நீரிணை என்று அறியப்படுகிறது. பசிபிக் பெருங்கடல் வழியாக 99 நாட்கள் பயணம் செய்து குவாம் என்ற தீவை அடைந்தார். பின்னர் அங்கிருந்து பிலிப்பைன்ஸ் வந்தனர். அங்கு ஏற்பட்ட உள்நாட்டுகாரர்களுடனான சண்டையில் மெக்கல்லன் கொல்லப்பட்டார். மிஞ்சியவர்கள் பயணத்தை தொடர்ந்தனர். 1522 ஆம் ஆண்டு 3 வருட  பயணத்துக்கு பிறகு அவர்கள் மீண்டும் ஸ்பெயின் வந்தடைந்தனர். இந்த பயணம்தான் உலகை சுற்றி வந்த முதல் கப்பல் பயணம் என அறியப்படுகிறது. 

எரிமலையில் கொடி

இந்தோனேஷியாவில் புகைந்து கொண்டிருக்கும் டுகோனு எரிமலை பகுதிக்கு தைரியமாகச் சென்ற ஐதராபாத்தை சேர்ந்த சாய் தேஜா என்ற இளைஞர் எரிமலையில் தேசிய கொடியை பறக்க செய்தும், அதனை வீடியோ பதிவு செய்தும் சாதனை படைத்திருக்கிறார்.  உள்ளூர் மக்களின் உதவியோடு சாதனை படைத்த அவர், இந்த பயணம் மனநிறைவை அளித்ததாக தெரிவித்துள்ளார்.

கடவுளின் துகள் அல்லது போஸான் துகள்

இந்தியர் பலருக்கும், வெளிநாட்டவர் சிலருக்கும் புகழ் பெற்ற 3 போஸ்களைப் பற்றித் தெரிந்திருக்கலாம்! சுதந்திர போராட்ட வீரர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்! அடுத்து தாவரவியல் விஞ்ஞானி, ஸர் ஜகதிஷ் சந்திர போஸ்! 3 ஆவது உலக மேதை ஐன்ஸ்டைனுடன் பணியாற்றிய பெளதிக நிபுணர், சத்யேந்திர நாத் போஸ்! ஐன்ஸ்டீன் தெரியுமென்றால் சத்யேந்திர நாத் போஸையும் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். குவாண்டம் இயற்பியல் துறைக்கு இவர் ஆற்றிய தொண்டு அத்தகையது. குவாண்டம் மெக்கானிக்ஸ் என்கிற துறையின் உட்பிரிவான குவாண்டம் ஸ்டாடிஸ்டிக்ஸ் இவரால் தான் உருவானது,வங்காளத்தில் படித்தார். பள்ளிகாலத்தில் இறுதி தேர்வில் 100 க்கு 110 மதிப்பெண்களை கணக்கில் இவர் பெற்றிருந்தார்; காரணம் ஒரே கணக்கை வெவ்வேறு முறைகளில் போட்டிருந்தது தான். பின் கல்லூரியில் இயற்பியலில் தங்க பதக்கம் பெற்று தேறினார்.  Max Planck's Law" மற்றும் "Light Quantum Hypothesis" பற்றிய ஒரு கட்டுரையை வெறும் ஆறு பக்கங்களில் எழுதி ஐன்ஸ்டீனுக்கு அனுப்பினார். ஐன்ஸ்டீன் அசந்து போனார், அந்த கட்டுரையே போஸ் -ஐன்ஸ்டீன் ஸ்டாடிஸ்டிக்ஸ் எனும் துறைக்கு வழிவகுத்தது. இவரின் கட்டுரைகள் தான் ஐன்ஸ்டீன், பிளான்க் முதலியோரின் குவாண்டம் தியரி மற்றும் டிராக் ஹெய்சென்பெர்க் முதலியோரின் குவாண்டம் மெக்கனிக்ஸ் இரண்டுக்கும் பாலமாக இருந்தது.  இவரின் நினைவாகத்தான் கடவுள் துகளுக்கு போசான் என துகளுக்கு பெயரிடப்பட்டது . 

குதிரை திறன் எப்படி பெயர் வந்தது

வாகனங்களானாலும், மோட்டார் உள்ளி என்ஜின்களானாலும் அவற்றின் திறனை ஹார்ஸ் பவர் என்கிற குதிரை திறன் அலகாலேயே அளவிடுகிறோம் அல்லவா.. இந்த பெயர் எப்படி வந்தது தெரியுமா.. குதிரைத் திறன் என்ற பிரயோகத்தை முதன் முதலில் பயன்படுத்தியவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ்வாட். இவர் வேறு யாருமல்ல நீராவி என்ஜினைக் கண்டுபிடித்த பொறியாளர்தான். தான் உருவாக்கிய நீராவி எந்திரம் எந்த அளவுக்கு பொருள்களை இழுத்துக் கொண்டு எவ்வளவு வேகத்தில் செல்லும் என்பதை நிரூபிக்க, என்ஜினின் செயல் திறனை அளவிட வேண்டியிருந்தது. அந்தக் காலங்களில் சாரட் வண்டிகளில் குதிரைகள் பூட்டப்பட்டு இயக்கப்பட்டன. சாரட்டுக்கு மாற்றாக வந்த ஆட்டோமொபைல் வாகனங்களின் செயல்திறனை கணக்கிட குதிரையின் வேகத்தை அளவிட அவர் முடிவு செய்தார். நிலக்கரி சுரங்கங்களில் நிலக்கரியை மேலே இழுத்து வருவதற்கு குதிரைகள் பயன்படுத்தப்பட்டன. அதைக் கருத்தில் கொண்டு 149 கிலோ எடையை சுமந்து கொண்டு 100 அடி தூரத்தை ஒரு நிமிடத்தில் கடப்பதை ஒரு குதிரைத் திறன் (1 ஹெச்.பி.) என அவர் கணக்கிட்டார். பின்னர் அதவே அறிவியல் பூர்வமான கணக்கீடாக மாறி ஹெச்பி - குதிரை திறன் என்றானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago