சந்திரகுப்த மௌரியரின் முதன்மை அமைச்சராகவும், வழிகாட்டியாகவும் இருந்து, மிகப்பெரிய மௌரிய பேரரசு அமைவதற்கு முக்கிய காரணமானவர் தான் சாணக்கியர். இவர் படிப்பை பழம்பெரும் தக்ஷஷீலா பல்கலைகழகத்தில் முடித்தார். உலகிலேயே மிகச்சிறந்த பாடசாலையாக இருந்த இந்த இடம் தற்போது பாகிஸ்தானில் அமைந்துள்ளது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
டைரி எனப்படும் நாட்குறிப்பு உலக வரலாற்றில் மிகப் பெரிய மாற்றங்களை உருவாக்கிய ஒன்று என்று சொல்லலாம். காகிதங்களின் காலம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கும் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் டைரிகளில் தங்களது அன்றாடங்களை யார் இப்போது எழுதி வைத்துக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறு எழுத விரும்புபவர்களுக்கு வந்து விட்டது டிஜிட்டல் டைரி. டிஜிட்டல் டைரிகளில் நீங்கள் உங்கள் போட்டோ அல்லது வீடியோவையும் இணைக்க இயலும் அதோடு அதை பாஸ்வேர்ட் போட்டு லாக் செய்தும் வைக்கவும் முடியும் இதன் மூலன் நம்மை ஆராய்ச்சு செய்யும் கண்களிடமிருந்து தப்பிக்க இயலும். முற்றிலும் இலவசமான இந்த அப்ளிகேஷனை பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து உங்கள் மொபைலிலேயே பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது கூடுதல் வசதி தானே...
பொதுவாக ஹோலி பண்டிகை என்றாலே வட மாநிலங்களில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை என்றுதான் நாம் அனைவரும் கருதுகிறோம். ஆனால் அது தவறு.. ஹோலி பண்டிகை இந்தியா முழுவதும் வெவ்வேறு வடிவங்களில் கொண்டாடப்படுவதுடன் பிற ஆசிய நாடுகளிலும், தற்போது உலக நாடுகளிலும் கூட ஹோலி கொண்டாடப்படுகிறது. ஹோலியின் போது வண்ணப் பொடிகளை தூவி கொண்டாடுவது வடநாட்டு ஸ்டைல். மஞ்சள் குளித்து கொண்டாடுவது கேரள ஸ்டைல், பால்குடம் எடுத்து பங்குனி உத்திரம் என கொண்டாடுவது தமிழகத்து ஸ்டைல். எப்படியானாலும் குளிர்காலம் முடிந்து வசந்தம் தொடங்குவதை அறிவிக்கும் விதமாக பங்குனி (அல்லது பால்குன) மாதத்தின் பவுர்ணமி தினத்தன்று கொண்டாடுவதுதான் ஹோலி. மேலும் இதற்கு ஒரு புராணக் கதையும் உள்ளது. ரண்ய கசிபுவை விஷ்ணு நரசிம்ம அவதாரத்தில் வந்து வெற்றி கொண்ட நாளாகவும் ஒரு தரப்பினரால் கொண்டாடப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயிலிருந்து 100 கோலா கரடிகளை மீட்க உதவிய துணிச்சலான நாய்க்கு சர்வதேச விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.ஆஸ்திரேலியாவில் கடந்த 2019-20 ஆம் ஆண்டில் வரலாறு காணாத வகையில் காட்டுத் தீ பரவியது. இதில் ஏராளமான மரங்கள், செடிகள், கொடிகள் கருகியதுடன், பறவைகள், விலங்குகளும் பாதிக்கப்பட்டன. இதில் பாதிக்கப்பட்ட அரிய வகை விலங்கான கோலா கரடிகளை மீட்கும் பணியில் சிறப்பு குழுவினர் ஈடுபட்டனர். இதில் மீட்பு பணியில் ஈடுபட்ட வீரர்களுடன் இணைந்து பயிற்சி பெற்ற நாய் ஒன்றும் அவர்களுக்கு இணையாக தீரமாக போராடி உதவியது. பீர் (Bear) எனப் பெயரிடப்பட்டுள்ள ஆஸ்திரேலியன் கூலி இன நாய்தான் இந்த வீர சாகசத்துக்கு சொந்தக்காரி. இதற்காக ஆஸ்திரேலியாவின் Sunshine Coast பகுதியில் அமைந்திருக்கும் University of the Sunshine Coast பல்கலை கழகத்தில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது இந்த வீர தீர சாகசத்தை புரிந்த பீருக்கு International Fund for Animal Welfare என்ற சர்வதேச விலங்குகள் தன்னார்வ அமைப்புதான் விருது வழங்கி கவுரவித்துள்ளது. உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் இந்த நாய் ஹீரோவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஒட்டகங்களை பற்றிய கட்டுக்கதைகளில் ஒன்று, அது கிடைக்கும் போது நீரை பருகிவிட்டு, உடலின் ஒரு பகுதியில் சேமித்து வைத்துக் கொள்கிறது என்பதுதான் அது. ஆனால் அறிவியல் பூர்வமான உண்மை அதுவல்ல. அது நீண்ட காலம் நீரை குடிக்காமல் கொளுத்தும் பாலைவனத்தில் சமாளிப்பதற்கு காரணம் அதன் ரத்ததில் உள்ள ஓவல் வடிவ ரத்த அணுக்கள் தான். மேலும் இவை 240 சதவீதம் வரை விரிவடையும் தன்மை கொண்டவையும் கூட. மற்ற உயிரினங்களுக்கு 150 சதவீதம் வரை மட்டுமே விரிவடையும். மேலும் இவை உடலில் நீரிழப்பு ஏற்பட்டு ரத்தம் அடர்த்தியானாலும் அதில் நீந்தி சென்று ஆக்ஸிசனை ரத்த நாளங்களுக்கு கொண்டு செல்லும் திறன் பெற்றுள்ளன. எனவே ஒட்டகம் தனது எடையில் 40 சதவீதம் வரை நீரிழப்பை சமாளிக்கிறது. இது தான் ஒட்டகம் நீண்ட நாள்களுக்கு நீர் குடிக்காமல் சமாளிப்பதன் ரகசியம்.
இயற்கை சீற்றங்களான நிலநடுக்கம் வருவதை முன்கூட்டியே அறிய ‘மை ஷேக்’ என்ற மொபைல் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிலநடுக்கம் வருவதை இந்த ஆப் மூலம் எளிதாக முன்கூட்டியே அறியலாம். சீஸ்மோமீட்டர் எனும் கருவியினால் மொபைலில் உள்ள ஜிபிஸ் மூலம் இந்த அதிர்வுகள் உணரப்பட்டு அறிவிக்கப்படுகிறது. இது வரை இரண்டு லட்சம் பேர் இந்த ஆப்பை பதிவிறக்கம் செய்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சின்னசாமி தி.மு.க.வில் இணைந்தார்
03 Dec 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சின்னசாமி தி.மு.க.வில் இணைந்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-03/12/2025
03 Dec 2025 -
என்னை கொல்ல முயற்சி: பாக்., ராணுவம் மீது இம்ரான்கான் குற்றச்சாட்டு
03 Dec 2025இஸ்லாமாபாத், என்னை கொல்ல பாகிஸ்தான் ராணுவம் முயல்வதாக முன்னாள் பிரதமர் இம்ரான்கான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
எஸ்.ஐ.ஆர். விவகாரம்: அமித்ஷா மீது மம்தா குற்றச்சாட்டு
03 Dec 2025கொல்கத்தா, வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிக்கு அமித்ஷா தான் காரணம் என்று மம்தா பானர்ஜி கூறினார்.
-
தேர்தல் ஆணையத்தை கண்டித்து மன்சூர் அலிகான் உண்ணாவிரத போராட்டம்
03 Dec 2025சென்னை : தேர்தல் ஆணையத்தை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் நடிகர் மன்சூர் அலிகான் ஈடுபட்டுள்ளார்.
-
புதுச்சேரி முதல்வருடன் த.வெ.க. பொதுச்செயலாளர் மீண்டும் சந்திப்பு
03 Dec 2025புதுவை : புதுச்சேரி முதல்வருடன் தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீண்டும் சந்தித்து பேசினார்.
-
கார்த்திகை தீபத்திருவிழா: சுவாமிமலையில் தேரோட்டம்
03 Dec 2025சுவாமிமலை : கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு சுவாமிமலையில் தேரோட்டம் நடைபெற்றது.
-
பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மாற்றியமைப்பு
03 Dec 2025டெல்லி : பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மாற்றியமைக்கப்பட்டு புதிய உறுப்பினர்களின் பெயர்களை பட்டியலிட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிகளின் எண்ணிக்கை சரிவு
03 Dec 2025சென்னை : சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிகளின் எண்ணிக்கை சரிவடைந்துள்ளது.
-
தாழ்வுப்பகுதியாக வலுவிழந்து மண்டலம்: இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
03 Dec 2025சென்னை : காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழந்துள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், இன்று ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனம
-
சஞ்சார் சாதி செயலி: ஆப்பிள், கூகுள் நிறுவனங்கள் எதிர்ப்பு
03 Dec 2025டெல்லி : சஞ்சார் சாதி செயலியால் மத்திய அரசுக்கு ஆப்பிள், கூகுள் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
-
மும்பை விமான நிலையத்தில் ரூ.94 லட்சம் மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல்
03 Dec 2025மும்பை : மும்பை விமான நிலையத்தில் உயரக கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்து வாலிபரை கைது செய்தனர்.
-
மதுரை அருகே சோகம்: டீக்கடையில் மின்சாரம் தாக்கி 2 பேர் பலி
03 Dec 2025மதுரை : மதுரை அருகே உள்ள வாடிப்பட்டியில் வாடிக்கையாளர்களை கவர சீரியல் பல்பு தொங்க விட்ட டீக்கடையில் மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர்.
-
கடும் பனிப்புயல் காரணமாக அமெரிக்காவில் 5.5 கோடி பேர் பாதிப்பு
03 Dec 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் தற்போது 3-வது பனிப்புயல் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
கம்ப்யூட்டரை ‘ஆன்' செய்யாமல் துணை முதல்வர் ஆய்வு செய்தாரா? - தமிழக அரசு விளக்கம்
03 Dec 2025சென்னை : மழை பாதிப்பு புகார் மீதான நடவடிக்கைக்கு கம்ப்யூட்டரை ஆன் செய்யாமல் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு நடத்தினார்.
-
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து உயர்வு
03 Dec 2025சென்னை : செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
மாயமான மலேசிய விமானம்: 10 ஆண்டுகளுக்கு பிறகு தேடும் பணி வரும் 30-ம் தேதி மீண்டும் தொடக்கம்
03 Dec 2025கோலாலம்பூர் : 10 ஆண்டுகளுக்கு முன் மாயமான மலேசிய விமானத்தை மீண்டும் தேடும் பணி வரும் 30-ம் தேதி தொடங்குகிறது.
-
கார்த்திகை தீபத்திருவிழா: பழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு
03 Dec 2025பழனி : கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி பழனி முருகன் கோவிலில் பரணி தீபம் ஏற்றி வழிபாடு நடந்தது
-
ரஷ்ய கப்பல்கள் மீது தாக்குதல்: உக்ரைனுக்கு புதின் கடும் எச்சரிக்கை
03 Dec 2025மாஸ்கோ : உக்ரைன் துறைமுகங்கள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதை அடுத்து ரஷ்ய அதிபர் புதின் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
வங்காளதேசத்தை சேர்ந்த கர்ப்பிணிப்பெண் இந்தியாவுக்குள் நுழைய மனிதாபிமான அடிப்படையில் சுப்ரீம் கோர்ட் அனுமதி
03 Dec 2025புதுடெல்லி, வங்காளதேசத்தில் இருந்து கர்ப்பிணிப்பெண்கள் இந்தியாவுக்குள் நுழைய மனிதாபிமான அடிப்படை வழங்கப்பட்டுள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
பாகிஸ்தானில் எச்.ஐ.வி அதிகரிப்பு
03 Dec 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் 80 சதவீதம் பேர் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
டி-20 தொடருக்கு கில் ரெடி?
03 Dec 2025மும்பை : காயம் காரணமாக சுப்மன் கில் அணியில் இடம் பெறுவாரா இல்லையா என சந்தேகம் எழுந்த நிலையில் அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாட தயாராக உள்ளதாக தகவ
-
வெனிசுலா மீது விரைவில் அமெரிக்கா தாக்குதல் நடத்தும்: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு
03 Dec 2025வாஷிங்டன் வெனிசுலாவுக்குள் புகுந்து விரைவில் அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்று ட்ரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.
-
தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஓ.டி.பி சரிபார்ப்பு இனி கட்டாயம் : விரைவில் அமல்படுத்த ரயில்வே முடிவு
03 Dec 2025புதுடெல்லி : தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஓ.டி.பி சரிபார்ப்பு கட்டாயம் அமல்படுத்த உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
ஹாங்காங் தீ விபத்து; பலி 156 ஆக உயர்வு
03 Dec 2025ஹாங்காங் : ஹாங்காங் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் பலி எண்ணிக்கை 156 ஆக உயர்ந்துள்ளது.


