முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

கொழுப்பை குறைக்கவும்

உலக மக்கள் தொகையில் 76 சதவீதம் பேர் உடல் பருமனால் பாதிக்கப்படுள்ளனராம். உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் மக்களிடம் அதிகம் கவனம் இல்லாததே இதற்கு முக்கிய காரணம் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் உலக மக்கள் தொகையில் 49 சதவீதம் பேர் குண்டானவர்கள் என்றும் குண்டாவதற்கு உடலில் சேரும் கொழுப்பு தான் முக்கிய காரணம் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

உருளை கிழங்கின் தாயகம் எது தெரியுமா?

உலகம் முழுவதும் இன்றைக்கு செல்வாக்கு செலுத்தும் உணவு பொருளில் உருளை கிழங்கு முதலிடம் வகிக்கிறது. இன்றைக்கு உருளைகிழங்கை சாப்பிடாத ஆட்களே இல்லை என்ற அளவுக்கு பரவியுள்ளது. ஆனால் உருளை கிழங்கு முதன் முதலில் எங்கு பயிரிடப்பட்டது தெரியுமா.. பெரு நாட்டில் தான் முதன் முதலில் பயிரிடப்பட்டது. இன்றைய பெரு நாட்டுப்பகுதியே உருளைக்கிழங்கின் தாயகம் எனப்படுகிறது அங்கிருந்து 1536-ல் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டு ஐரோப்பிய கடல் பயணிகள் வழியாக ஆசியா மற்றும் பிற பகுதிகளுக்கும் சென்றது. அதுவும் பெருவில் எப்போது பயிரிடப்பட்டது தெரியுமா... கிட்டத்தட்ட சுமார் 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு. அதே போல பெருவில் மட்டும் சுமார் 1000 வகையான தக்காளி ரகங்கள் உள்ளன என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.

மழையின் பெயரில் கரன்சி வெளியிடும் நாடு எது தெரியுமா?

ஒவ்வொரு நாட்டு கரன்சிக்கும் அதாவது பணத்துக்கும் ஓர் பெயர் உண்டு. ஆனால் மழையின் பெயரையே கரன்சிக்கு சூட்டிய நாடு எது தெரியுமா... சகாரா பாலைவனத்தில் அமைந்துள்ள நாடான போஸ்துவானா தான் அது. அந்நாட்டு கரன்சியின் பெயர்  போஸ்துவானன் புலா. அவர்கள் மொழியில் புலா என்றால் மழை. அவர்களின் அடிப்படையான அனைத்து கரன்சிகளிலும் இந்த புலா அதாவது மழை என்ற பெயர் இடம் பெற்றிருக்கும் என்பது ஆச்சரியம் தானே..

ஸ்ட்ராபெர்ரி என்பது ஒரு தனிப்பட்ட பழம் அல்ல என்பது தெரியுமா?

ஸ்ட்ராபெர்ரி என்று நாம் சாப்பிடும் பழம், பெர்ரி வகையைச் சேர்ந்தது அல்ல. ஆனால் வாழைப்பழம் பெர்ரி வகையைச் சேர்ந்தது. சீதாப்பழம் என்பது ஒரே பழம் அல்ல. அது ஒரு கூட்டுக்கனி. Compound fruit என்பார்கள். தாவரவியல் பாஷையில் சொன்னால் கூட்டு மஞ்சரி மலர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு கனியைப் போல இவ்வாறு உருவாகியுள்ளது. ஒரே பழத்துக்குள் பல்வேறு பழங்கள் ஒட்டுமொத்தமாக பொதிந்து வைக்கப்பட்டதைப் போல காட்சியளிக்கும். அதற்கு நமது சீதா பழம் தான் மிக சிறந்த உதாரணமாகும். என்ன ஒரு ஆச்சரியம் பாருங்கள்.

சாக்லேட்டின் தாயகம்

கொலம்பஸ் 16ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். அப்போது அங்கு வாழ்ந்து வந்த மக்கள் சாக்லேட்களைப் பயன்படுத்தி வந்ததைக் கண்டு பின்னர் ஸ்பெயின் நாட்டுக்கு அதனை அறிமுகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.கி.பி. 1350ஆம் ஆண்டுகளில் தென் ஆப்பிரிக்காவில் பயன்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அங்கு வாழ்ந்து வந்த மக்கள் சாக்லேட்டை கோகா மரங்களில் இருந்து பெற்றனர். பின்னர் ஸ்பெயின் நாட்டிலும் இத்திரவப் பொருள் ஓர் உணவாகப் பரவியது. ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக் காலம் இது ஸ்பெயினில் மட்டுமே புழக்கத்தில் இருந்து வந்தது என பல்வேறு ஆதாரங்கள் கூறுகின்றன. 17 ஆம் நூற்றாண்டில் பிரான்சில் சாக்லேட் அறிமுகப்படுத்தப்பட்ட போது உடனடியாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. உடலுக்கு தீங்கற்றது என அரசு சான்றளித்த பிறகே 1650 இல் மக்கள் பானமாக மாறியது. பின்னர் பிரெஞ்சுக்காரர் அதை ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தினார். 18 ஆம் நூற்றாண்டில் தான் இங்கிலாந்துக்குள் நுழைகிறது சாக்லேட். சுவிஸ் நாட்டு கெய்லர் சாக்லேட்டை கட்டிகளாக மாற்றி பரவ செய்தார். காட்பரி சகோதரர்களான புரோஜான் மற்றும் பெஞ்சமின் ஆகியோர் விதவிதமான மூலப்பொருட்கள் கலவையுடன் சுவையான சாக்லேட் பண்டங்களை உருவாக்கினர்.கோஹன்ரிட் ஜே. வான் ஹட்டன் என்ற டச்சு நாட்டு வேதியியல் அறிஞர் 1860 ஆம் ஆண்டில் சாக்லேட் திரவத்தை, சாக்லேட் தூளாக மாற்றக்கூடிய தொழில்நுட்பச் செயல் முறையைக் கண்டுபிடித்தார். இக்கோட்பாட்டின் அடிப்படையில் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த டேனியல் பீட்டர் என்பவர் பால் சாக்லேட்டைத் தயாரிக்கத் துவங்கினார்.தற்போது இந்தியா உட்பட எல்லா நாடுகளிலும் வகை வகையான சாக்லேட்கள் தயாரிக்கப்படுகின்றன. 2 ஆம் உலகப் போரின் போது வீரர்களுக்காக விதவிதமான சாக்லேட்கள் தயாரிக்கப்பட்டன

புராணங்களில் இடம் பெற்றுள்ள பறவைகள் எது தெரியுமா?

எகிப்து புராணங்களில் பா என்ற பறவையும், சாம்பலிலிருந்து உயிர்தெழும் பீனிக்ஸ் பறவையும் குறிப்பிடப்பட்டுள்ளன. மெக்சிகோ நாட்டுப்புற கதைகளில் கூ என்ற பறவை வருகிறது. பூர்வீக அமெரிக்க புராணங்களில் தீப்பறவை இடம் பெற்றுள்ளது. கிரேக்க புராணங்களில் ஹார்பீஸ் என்ற பறவை சொல்லப்படுகிறது. ஆஸ்டெக் புராணங்களில் குவாட்செல்கோட் என்ற பறவை சொல்லப்படுகிறது. அமெரிக்க புராணங்களில் ராவன் ஆகிய பறவைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்து புராணங்களில் அன்னம், சக்கரவாகம், அன்றில் போன்ற பறவைகள் குறிப்பிடப்படுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago