முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

மொபைல் அரக்கன்

செல்ஃபோனிலிருந்து வரும் கதிர்வீச்சுக்களுக்கும், புற்று நோய்க்கும் பலமான தொடர்பு உள்ளது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. அந்த கதிர்வீச்சு மூளையில் புற்று நோயை உண்டாக்கும் என்றும் குழந்தைகள் தொடர்ந்து இந்த கதிர்வீச்சில் தாக்கப்பட்டால் லுக்கீமியா வருவதற்கு சாத்தியங்கள் உள்ளன எனவும் தெரிய வந்துள்ளது.

நம்பர் ஒன்

ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பயணிகளுக்காக விற்பனை செய்யப்படும் குடிநீர் குறித்து கன்சுமர் வாய்ஸ் என்ற பத்திரிக்கை மேற்கொண்ட ஆய்வில், இந்திய ரயில்வே சுற்றுலா மற்றும் உணவுக் கழகம் சார்பில் தயாரிக்கப்படும் “ரயில் நீர்“ என்ற சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அதிக அளவில் விற்பனை மற்றும் தரமும் நன்றாக உள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய ரோபோ

ஜப்பானின் ‘ஒரிகாமி’ என்னும் முறையை பின்பற்றி அமெரிக்காவில் உள்ள ஹர்வார்ட் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் மடிக்கு வைக்கக்கூடிய புதிய ரோபோடை வடிவமைத்துள்ளனர்.  இந்த ரோபோட்டிற்கு பேட்டரி தேவை இல்லை. இந்த ரோபோட் வயர்லெஸ் மாக்னெட்டிக் ஃபீல்ட் மூலம் இயக்கப்படுகிறது.

வழி இருக்கு...

நாம் சமையலில் சேர்க்கும் பொருட்கள் சில இயற்கையாகவே கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டிருக்கின்றன.       மிளகு, மஞ்சள், இஞ்சி, பூண்டு போன்றவை இவற்றில் அடங்குபவை.   இதில் பூண்டு கொழுப்பை கரைக்கும் சிறந்த பண்பு கொண்டிருக்கிறது. இது பசியை கட்டுப்படுத்தும் 

கோஹினூர் வைரம்

கோஹினூர் வைரம், 105 கேரட் (21.6 கிராம்) எடை கொண்டது. கோஹினூர் என்ற சொல்லுக்கு பாரசீக மொழியில் மலை அளவு ஒளி என்று பொருள். இது இந்தியாவில், ஆந்திர மாநிலத்தின் குண்டூர் அருகே உள்ள கொல்லூர் எனும் கிராமத்தில் இருந்து வெட்டியெடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. 5000 ஆண்டுகள் பழமையான இந்த வைரம் பல கைகள் மாறி 1793-ல் பாரசீக மன்னன் நாதிர்ஷா கைக்குப் போனது. அவரே இந்த வைரத்துக்கு கோஹினூர் வைரம் என்று பெயரிட்டார். அதன்பின்னர் பஞ்சாப் சிங்கம் என்று அழைக்கப்பட்ட ரஞ்சித் சிங் கைகளுக்குச் சென்றது. வணிகம் செய்ய வந்து காலனி ஆதிக்காமாக இந்தியாவை மாற்றிய கிழக்கிந்தியக் கம்பெனியின் சர்.ஜான் லாரன்ஸ் இதனைக் கைப்பற்றி, அதை இங்கிலாந்து அரச குடும்பத்தினருக்கு பரிசளித்தார். தற்போது, கோஹினூர் வைரம் இங்கிலாந்து ராணியின் கிரீடத்தை அலங்கரித்து வருகிறது.

ஆனந்த கண்ணீர்

பிரபலமான எமோஜி எது என்று கண்டுபிடிக்க, உலகம் முழுவதும் உள்ள 212 நாடுகளைச் சேர்ந்த 40 லட்சம் ஸ்மார்ட்போன்களில் உள்ள 427 மில்லியன் குறுஞ்செய்திகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதில், ஆனந்த கண்ணீருடன் இருக்கும் முகம் போன்ற எமோஜி உலகில் அதிகம் பேர் பயன்படுத்திய பாப்புலரான எமோஜியாகத் தேர்வு செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago