Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

வியப்பில் ஆழ்த்தும் வித்தியாசமான பாலம்

வியட்நாமில் டா நாங்கிற்கு வெளியே கல்லினால் வடிமைக்கப்பட்ட இரு கைகள் பாலத்தை தாங்குவது போல இருக்கும் ஒரு பிரமாண்டமான காட்சி பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. கோல்டன் பிரிட்ஜ் என்று அழைக்கப்படும் பாலம் பனாமா மலைகளுக்கு மேலே கடல் மட்டத்திலிருந்து 1,400 மீட்டர் அதாவது சுமார் 3280 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் மேலிருந்து பார்த்தால் அந்த இடத்தை சுற்றியுள்ள பரந்த ஆழகான காட்சிகளை கண்டு ரசிக்கலாம். தங்க நிற வண்ணம் கொண்ட இந்த பாலம் ஊதா நிற லோபிலியா கிரிஸான்தமம்களால் (purple Lobelia Chrysanthemums ) வரிசையாக அமைந்துள்ளது மற்றும் கிட்டத்தட்ட 150 மீட்டர் நீளமுடன் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பாலத்தை தாங்கி கொண்டிருக்கும் செதுக்கப்பட்ட கைகள் தான் பார்ப்பவர்கள் வியக்கும் வண்ணம் அழகிய காட்சியை தருகிறது.

புதிய முயற்சி

டிடபிள்யூடிஎம் - பிஓஎன் பைபர் தொழில்நுட்பம் (TWDM-PON fibre technology) என்ற அடுத்த தலைமுறை பைபர் இணைப்பு மூலம் விநாடிக்கு 40 ஜிபி வேகத்தில் தரவிறக்கம் மற்றும் பதிவேற்றும் வகையிலான புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறிந்திருப்பதாக நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆசிய நாடுகளில் மிகக்குறைந்த இணைய வேகத்தைக் கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. இந்தியாவின் சராசரி இணைய வேகம் 2.5 எம்பிபிஎஸ் (mbps) ஆகும்.

'மொய் டெக்'

செல்போன் செயலியின் மூலமாக மொய் செய்பவரின் விவரங்களை எழுதிக்கொள்ள புது செயலியை உருவாக்கியுள்ளனர் உசிலம்பட்டிப் பெண்கள்.  'மொய் டெக்' எனும் இந்த செயலி வியக்க வைத்துள்ளது. மேலும் விழாக்களுக்கு வந்து மொய் எழுதும் மக்களுக்கு அவர்கள் மொய் செய்தமைக்கான ரசீது மற்றும் அவர்களது அலைப்பேசிக்கு குறுந்தகவல் என அசத்துகின்றனர்.

ஓராண்டு இடைவெளியில் இரட்டை குழந்தைகள் பிறந்தது எப்படி

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஒரு பெணணுக்கு ஓராண்டு இடைவெளியில் இரட்டை குழந்தைகள் பிறந்த அதிசய சம்பவம் உலகம் முழுவதையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஓராண்டு இடைவெளியில் பிறந்த இரட்டை குழந்தைகளா.. அது எப்படி.. கலிபோர்னியாவை சேர்ந்தவர் பாத்திமா மாட்ரிகல் என்ற இளம்பெண். இவர் கருவுற்றிருந்தார். பிரசவ வலி எடுக்கவே டிசம்பர் 31 இல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரவு 11.45க்கு இவருக்கு குழந்தை பிறந்தது. இந்நிலையில் மீண்டும் அவருக்கு பிரசவ வலி எடுக்கவே அவரை சோதித்ததில் அவர் இரட்டை குழந்தைகளை கருவுற்றிருந்தது தெரியவந்தது. இதையடுத்து சுமார் 15 நிமிடங்களுக்கு பிறகு மற்றொரு குழந்தையை பிரசவிததார். இதன் மூலம் அந்த குழந்தை 2022 இல் ஜனவரியில் பிறந்தது. இதனால் இரண்டு குழந்தைகளுக்கும் வெவ்வேறு தேதி, மற்றும் வருடங்களில் பிறந்த தினம் அமைந்தது. இந்த செய்தி உலகம் முழுவதும் வேகமாக பரவியது.

பேச முடியாது

குரங்குகளால் மனிதர்கள் போல் பேச முடியுமா? என்ற ஆராய்சியில், மக்காகிவ் வகைக் குரங்குகளுக்கு மனிதர்களைப் போலவே குரல் வளை உள்ளிட்ட குரல் எழுப்பும் உறுப்புகள் இருந்தாலும், ஒலி சைகைகளை குரலாக மாற்றும் அளவுக்கு மக்காகிவ் வகைக் குரங்குகளுக்கு மூளை வளர்ச்சியடையவில்லை என தெரியவந்துள்ளது.

எளிய பயிற்சிஎளிய பயிற்சி

இதயம், எலும்புகள் பலப்படுத்தி, மன அழுத்தத்தை குறைக்கும் சிறந்த மற்றும் எளிய பயிற்சியான நடை பயிற்சி உடல் உறுப்புகள் அனை்ததுக்கும் பயனளித்து, கொழுப்பைக் கரைத்து, உடலை கட்டுகோப்பாக வைக்கிறது. நடைபயிற்சியை நாம் தொடர்ந்து தடையில்லாமல் மேற்கொள்ள காலை பொழுதில், பூங்காக்களில் நண்பர் அல்லது உறவினரோடு நடப்பதை வழக்கப்படுத்தி கொள்ள வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago