முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

காதலர்களின் அழகிய சுரங்கப் பாதை

காதலர்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது கண்டு ரசிக்க வேண்டிய அழகிய, அதிசய சுரங்கப் பாதை எங்குள்ளது தெரியுமா...உக்ரைன் நாடு. ரஷ்யாவுக்கு அருகில் உள்ள ஒரு குட்டி நாடு. நாடுதான் குட்டி, ஆனால் ஐரோப்பாவிலேயே அதிகமான அழகிய கட்டிடங்கள், சுற்றுலா தளங்கள், சாகச விளையாட்டு தளங்கள், பாரம்பரிய சந்தைகள் என பல்வேறு சிறப்புகளுக்கு சொந்தமான 2 ஆவது மிகப் பெரிய நாடாகும். இங்குதான் இயற்கை எழில் கொஞ்சும் காதலர் பசுமை சுரங்கப்பாதை அமைந்துள்ளது. சுமார் 3 கிமீ நீளம் கொண்ட இந்த பாதை ஒரு கைவிடப்பட்ட ரயில் தடமாகும். ஒரு காலத்தில் அருகில் உள்ள மர ஆலையிலிருந்து தினமும் மரங்களை சுமந்து கொண்டு ரயில் இந்த தடத்தில் சென்று வந்துள்ளது. தற்போது இந்த தண்டவாளத்தை பசுமை போர்த்திய சுரங்கம் போல இயற்கை அற்புதமானதாக மாற்றியுள்ளது. உலகில் உள்ள காதலர்கள் எல்லாம் இதை நோக்கி தினம் தினம் கவர்ந்திழுக்கப்படுகிறார்கள்.அத்தனை அற்புதமான இடமாகும். இதில் நடந்து செல்வதே மிகவும் பரவசமளிக்கும் அனுபவமாக அமையும். அந்நாட்டில் உள்ள Kleven நகரில் கார்பெந்தியன் மலைத் தொடர் காடுகளுக்கு மத்தியில் இந்த வழித்தடம் அமைந்துள்ளது.

உவ்வே... இனிமேலாவது புகையிலை பொருள்களை சாப்பிடாதீர்கள்

இந்தியாவில் தமிழகம் தவிர்த்து பெரும்பாலான வட மாநிலங்களில் பெரும்பான்மையோர் புகையிலை பொருள்களை பயன்படுத்தி வருகின்றனர். இது ஒரு குறைந்த பட்ச லாகிரி வஸ்துவாக கருதப்படுகிறது. வட மாநிலங்களில் இரு பாலரும் இதை பயன்படுத்துகின்றனர். ஆனால் இதில் சுவைக்காக சேர்க்கப்படும் பொருளை கேட்டால் இனி வாயில் வைக்கும் போதெல்லாம் அதன் நினைவு வரும். ஆம், நாம் கழிக்கும் சிறுநீரில் அதிகமாக யூரியா என்ற ரசாயனம் காணப்படுகிறது. இந்த யூரியாதான புகையிலை பொருள்களில் சுவையூட்டியாக சேர்க்கப்படுகிறதாம். இது தொடர்பாக மத்திய நோய் தடுப்பு கண்காணிப்பகமே அளித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. உவ்வே.. இனிமேலாவது புகையிலை பொருள்களை சாப்பிடாதீர்கள் மக்களே...

உறங்கும் போது எப்படி படுக்க வேண்டும்

முந்தைய இரவு உறக்கத்தைப் பொருத்தே அடுத்த நாளின் செயல்திறன் நிர்ணயிக்கப்படுவதால் உடலுக்கு தூக்கம் தவிர்க்க முடியாதது. ஆனால், எந்த நிலையில் தூங்கினால் உடல்நலனுக்கும் மனநலனுக்கும் நல்லது என்பது முக்கியமானது. உங்களுடைய முதுகெலும்பை சரியாக சீரமைக்கும் நிலையில் தூங்குவதன் மூலம் மட்டுமே தூக்கம் மேம்படும். உடலில் எவ்வித பிரச்னைகளும் ஏற்படாது. முதுகு படுக்கையில் படும்படி கிடைமட்டமாக படுத்துத் தூங்குவது முதுகெலும்பை சரியான நிலையில் பராமரிக்கிறது. இது கீழ் முதுகு மற்றும் கழுத்துத் தசைகள் இரண்டையும் தளர்த்தும். இந்த நிலையில் தூங்குவது ஒரு நிம்மதியான தூக்கத்தைத் தருவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மெல்லிய மெத்தை, தலையணையை உபயோகித்தால் தோள்பட்டை அல்லது கழுத்து வலி ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

டைட்டானிக் கப்பல்

1912 -ம் ஆண்டு மூழ்கிய உலகின் பெரிய கப்பலாகக் கருதப்பட்ட டைட்டானிகை சுற்றிப்பார்க்க இங்கிலாந்தில் செயல்பட்டுவரும் ப்ளூ மார்பிள் எனும் தனியார் சுற்றுலா நிறுவனம், ஏற்பாடு செய்து வருகிறது. கடலில் மூழ்கியுள்ள டைட்டானிக் கப்பலை, அருகில் சென்று சுற்றிப்பார்க்கும்  எட்டு நாட்கள் கொண்ட இந்தப் பயணத்துக்கு கட்டணம், இந்திய மதிப்பில் 65 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய்.

அன்னை தெரசா அணிந்திருந்த சேலைக்கு அறிவுசார் சொத்துரிமை உள்ளது தெரியுமா?

அல்பேனியாவில் பிறந்து கிறிஸ்துவத்தை பின்பற்றிய அன்னை தெரசா கொல்கத்தாவில் மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டியை தொடங்கி ஏழைகளுக்கு 50 ஆண்டுகளுக்கும் மேலாக சேவை செய்து வந்தார். அவர் அணிந்திருந்த வெள்ளை நிறமும், ஓரத்தில் 3 நீல நிற கரையும் கொண்ட சேலை அவரது அடையாளமாகவே மாறின. பின்னர் அவரை பின்பற்றி அந்த சாரிட்டியில் உலகம் முழுவதும் பணியாற்றி வரும் கன்னியாஸ்திரிகளும் அந்த புடவையையே சீருடையாக ஏற்று அணிந்து வருகின்றனர். இந்த தனித்தன்மை வாய்ந்த  புடவையின் டிசைனை அன்னை தெரசா தான் உருவாக்கினார். தற்போது அதற்கு அறிவுசார் சொத்துரிமை அளிக்கப்பட்டுள்ளது. எனவே இதை யாரும் வணிக ரீதியாக பயன்படுத்தக் கூடாது என அந்த அறக்கட்டளை கேட்டுக் கொண்டுள்ளது. லாப நோக்கம் அற்ற பொது சேவைகளுக்கு மட்டுமே அதை பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவாலியர் விருது

பிரான்ஸ் நாட்டின் கலாச்சாரத் துறை சார்பில் வழங்கப்படும் மதிப்பு மிக்க விருதான செவாலியர் விருதை இந்தியர்கள் பலர் பெற்றுள்ளனர். தமிழகத்‌தின் சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு ‌‌திரைத் துறையில் அவர் படைத்த சாதனைகளைப் பாராட்டி சிவாஜிக்கு இந்த விருது 1997-ல் வழங்கப்பட்டது. இந்திய அளவில் தொழிலதி‌ர் ஜே.ஆர்.டி. டாட்டா, திரையுலக ஜாம்பவான் சத்யஜித்ரே, ‌பிரபல சிதார் இசைக் கலைஞர் பண்டிட் ரவிசங்கர், அறிவியல் விஞ்ஞானி‌ சி.என்.ஆர். ராவ், பாலமுரளிக் கிருஷ்ணா, 2007-ம் ஆண்டில் நடிகர் அமிதாபச்சனும், 2014-ம் ஆண்டில் நடிகர் ஷாரூக்கானும் இந்த விருதைப் பெற்றனர். ‌2015-ம் ஆண்டில் யஷ்வந்த் சின்ஹாவும், ம‌னிஷ் அரோராவுக்கும் வழங்கப்பட்டது. இந்த வரிசையில் நடிகர் கமலஹாசனும் இணைந்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago