முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

தாகம் தீர்க்கும்

சர்க்கரை நோய், உடல் உஷ்ணம், அதிக வியர்வை, அதிகளவில் சிறுநீர் கழிப்பது போன்றவற்றால் நாவறட்சி ஏற்படும். அதிக வயிற்றுப்போக்கால் நீர்ச்சத்து வெளியேறுவதாலும் நாவறட்சி உண்டாகிறது. அதிக தாகம், நாவறட்சியை போக்க ஆவாரை, அரச இலை, நித்திய கல்யாணி ஆகியவை மருந்தாகின்றன.

2 டம்ளர் போதும்

ரத்த அழுத்தம் சீராக, அதிக உடல் எடையை விரைவில் குறைக்க, வாயுத் தொல்லையிலிருந்து விடுபட, உடலில் இன்சுலின் அளவு சீராக, மலச்சிக்கல் பிரச்சினை இவை அனைத்தும் நீங்க, நாம் தினமும் எழுந்ததும் வெறும் 2 டம்ளர் தண்ணீர் குடித்தாலே போதும்.

இந்த உயிரிக்கு ஆக்சிஸன் வேண்டாம்

விஞ்ஞானத்தில் எப்போதும் புதுமைகள் சாத்தியம் தான். அண்மையில் இஸ்ரேல் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ள உயிரினம் ஆக்சிஸன் அதாவது பிராண வாயு இல்லாமலேயே உயிர் வாழக்கூடியது. இது அறிவியலில் அதிசயம். சால்மன் மீன்களின் தசையில் வாழக்கூடிய உயிரினம் இது. 10 உயிரணுக்களுக்கும் குறைவாகக் கொண்ட இந்த ஒட்டுண்ணிக்கு ஹென்னிகுயா சால்மினிகோலா என்று பெயரிடப்பட்டுள்ளது.ஜெல்லிமீன் மற்றும் பவளப்பாறை இனத்தை சேர்ந்த உயிரினமாக இந்த ஒட்டுண்ணி கருதப்படுகிறது. இவை பிராணவாயுவை உள்வாங்குவதும் இல்லை, மூச்சுவிடுவதும் இல்லை. பரிணாம வளர்ச்சியில் புதிய திசையை காட்டியுள்ளதாக விஞ்ஞானிகள் வியக்கின்றனர். அவர்களோடு சேர்ந்து நாமும் வியப்போம்.. என்ன ஓகேவா..

பூண்டின் மருத்துவ பலன்

வறுத்த 6 பூண்டுகளை தினமும் சாப்பிட்டு வந்தால் உயர் இரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால், இதய நோய்கள், மாரடைப்பு, பெருந்தமனி தடிப்பு போன்றவைகளை கட்டுப்படுத்தப்படும். பூண்டு உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புக்களை கட்டுப்படுத்தும். உடலில் ஆன்ஜியோடென்சின் II என்னும் ஹார்மோன் உற்பத்தியை தடுக்கும்.

இப்படியும் வினோதம்

அயர்லாந்தில் உள்ள கில்லோர்லின் நகரில், நாட்டின் ராஜாவாக, ஆட்டுக்கு முடிசூட்டியுள்ளனர். அங்கு பழமையான திருவிழாக்களில் ஒன்றான பக்ஃபேர் பண்டிகையின் போது, ஒரு ஆட்டைப் பிடித்து, அதனை நகரம் முழுவதும் ஊர்வலமாகக் கொண்டு செல்வர். அதன்பின் அந்த ஆட்டிற்கு ராஜாவாக முடிசூட்டுவார்களாம். திருவிழா முடியும் வரை அந்த ஆடுதான் அரசனாம்.

உலகின் மிக பழமையான ஒயின் பாட்டில் அண்மையில் கண்டுபிடிப்பு

மேலைநாடுகளில் ஒயினை தயாரிப்பதும், அவற்றை நூறாண்டுகளாக, தலைமுறை தலைமுறையாக பாதுகாப்பதும் வழக்கம். அண்மையில் ரோமை சேர்ந்த செல்வந்தர் ஒருவரின் கல்லறை ஜெர்மனியில் அமைந்துள்ளது. அதில்தான் உலகிலேயே மிகவும் பழமையான ஒயின் பாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஒயின் 4 நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. கிட்டத்தட்ட 1650 ஆண்டுகள் பழமையானதாகும். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக திறக்கப்படாமல் இருப்பதால் திறந்தால் என்ன ஆகும் என்றோ, தற்போது அது நச்சுத் தன்மைய உடையதாகவோ மாறியிருக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. இருந்த போதிலும் திறக்கப்படாத பாட்டிலில் அடைக்கப்பட்ட மிக பழமையான ஒயினாக இது கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago