முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

வயதான மூதாட்டி

உலகின் வயதான நபராக கருதப்பட்ட இத்தாலியின் எம்மா மார்ட்டின் லூகியாவின் மறைவுக்குப் பிறகு தற்போது ஜமைக்காவின் வைலட் பிரவுன் அந்த பெருமையை பெற்றுள்ளார். 117 வயதான இவர். ‌உணவில் பன்றி, கோழி வகை உணவை அறவே தவிர்கிறாராம். 1900-ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி பிறந்த இவர் கடந்த மாதம் தனது 117வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

செல்போனை கண்டுபிடித்தவர் யார் தெரியுமா

தொலைபேசியை கண்டுபிடித்தவர் அலெக்சாண்டர் கிரஹாம் பெல் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இன்றைக்கு அனைவரின் கைகளிலும் தவழும் செல்போனை கண்டுபிடித்தவர்கள் யார் தெரியுமா...மோட்டரோலா நிறுவனத்தின் ஜான் எப் மிட்சல், மார்ட்டின் கூப்பர் ஆகிய இருவரும் சேர்ந்து முதல் கம்பி்யில்லா ரேடியோ ஒலி அலைகள் மூலம் செயல்படும் செல்போனை 1973ம் ஆண்டு தயாரித்தனர். அதன்மூலம் கம்பியில்லா செல்போன் தொழில் நுட்பத்துக்கு வழிவகுத்தனர். அவர்கள் பயன்படுத்திய செல்போன் 2 கிலோ எடையுடன் இருந்தது. பின்னர் 1983 முதல் எடை குறைவான செல்போன்கள் விற்பனைக்கு வரத்தொடங்கின.

மெட்ரிக் முறையிலான கணக்கீடுகளை பயன்படுத்தாத நாடு எது தெரியுமா&?

இன்றைய நவீன உலகத்தில் நீட்டல், முகத்தல், நிறை என அனைத்தும் நவீன கணிதத்தின் மெட்ரிக் முறையிலேயே பயன்படுத்தப்படுகின்றன. நீர் பொருள்களை அளக்க லிட்டர், மில்லி லிட்டர் இப்படி, நீளத்தை அல்லது தூரத்தை அளக்க மில்லி மீட்டர், செமீ, மீட்டர் இப்படி, எடையை அளக்க கிராம், மில்லி கிராம், கிலோ கிராம்... இப்படி. கிட்டத்தட்ட உலகம் முழுவதும் உள்ள சுமார் 200 நாடுகள் இந்த முறைகளையே அளவீடுகளுக்கு பயன்படுத்துகின்றன. ஆனால் இதை பயன்படுத்தாத நாடுகளும் உலகில் உள்ளது என்றால் ஆச்சரியமானது தானே.. அவை மியான்மர், லைபீரியா மற்றும் அமெரிக்கா.  அண்மையில் லைபீரியாவும், மியான்மரும் மெட்ரிக் அளவீடுகளை ஏற்பதாக அறிவித்தன. ஆனால் அமெரிக்கா மட்டும் விதி விலக்கு. அவை யார்டு, அவுன்சு, பவுண்டு என்று பழைய கணக்கை கொண்டுள்ளது என்றால் ஆச்சரியமானு தானே..

புதிய வசதி

ஜிஃப் - கிராஃபிக் இன்டர்சேஞ்ச் ஃபார்மேட்,  ஜூன் 15, 1987-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்காவை சேர்ந்த மென்பொறியாளரான ஸ்டீவ் வில்வைட் என்பவர் கண்டறிந்த ஜிஃப்களின் 31-வது பிறந்த தினத்தை பேஸ்புக் கொண்டாடுகிறது. அந்த வகையில் பேஸ்புக் கமெண்ட்களில் ஜிஃப்களை பயன்படுத்தும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 1300 கோடி ஜிஃப்கள் மெசன்ஜர் மூலம் அனுப்பப்பட்டதாம்.

மலையில் தொங்கும் விடுதி

மனிதன் கொஞ்சம் தாழ்வுணர்ச்சி கொண்டவன். அதிகமாக சாகச விரும்பி. இதை சொல்வதற்கு காரணம் இருக்கிறது. இயற்கையோடு தன்னை ஒப்பிட்டுக் கொண்டு அதை வெல்ல வேண்டும் என ஓயாத மன அரிப்பை கொண்டிருப்பதால் தாழ்வுணர்ச்சி கொண்டவன் என்கிறோம். அதை வெல்ல வேண்டும் உந்துதலால் எதையாவது செய்து கொண்டிருப்பதால் சாகச விரும்பி ஆனான். அதற்கு சிறந்த உதாரணம் பெரு நாட்டில் உள்ள தொங்கும் விடுதி. அது என்ன தொங்கும் விடுதி. பெருவில் உள்ள மச்சு பிச்சு என்ற உலக அதிசய இடத்துக்கு செல்லும் வழியில் கஸ்கோ என்ற இடத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1300 அடி உயரத்தில் மலைக்குன்றில் ஒட்ட வைத்தது போல சுமார் 300 டிகிரி கோணத்தில் பார்க்கும் வகையில் விடுதி அறைகளை கட்டியுள்ளனர். கடந்த 2013 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த ரிசார்ட்டுக்கு கம்பி  வழியாக தொங்கிக் கொண்டுதான் செல்ல வேண்டும். அங்கிருந்து பெருவின் அழகை மட்டுமல்ல.. ஒட்டுமொத்த மலை மற்றும் வான் மேகங்களின் அழகை ரசிக்கலாம்.. ஆனால் நமது உடலும் இதயமும் கொஞ்சம் ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும்.. என்ன பெருவுக்கு போகலாமா..

தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் சில சிறப்பு அம்சங்கள்

தஞ்சை மாவட்டத்திலுள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் இரண்டாம் இராஜராஜ சோழனால் கி.பி 1167இல் கட்டப்பட்டது. கோயிலில் சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன. அவற்றில் நடனக்காட்சிகள், போர்க்காட்சிகள், மதநிகழ்வுகள், ரிஷிகள், விலங்குகள், கற்பனை உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.இக்கோயிலின் சிறப்பானது சேக்கிழார் இயற்றிய பெரியபுராணத்தில் சிறப்பிக்கப்படும் அறுபத்துமூன்று நாயன்மார்களைச் சிற்பங்களாகச் செதுக்கி வைத்துள்ளதே ஆகும். அநபாயச்சோழன் என்று அழைக்கப்படும் இரண்டாம் குலோத்துங்கச் சோழன் சேக்கிழாரைக் கொண்டு அறுபத்துமூன்று நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் பெரியபுராணத்தை இயற்றினார். அவரது மைந்தனான இரண்டாம் இராஜராஜ சோழன் அவர்களைச் சிற்பங்களாக இக்கோயிலில் செதுக்கிவைத்துள்ளார். தமிழகச் சைவக் கோயில்களில் தாராசுரத்தில் மட்டுமே அறுபத்துமூன்று நாயன்மார்களின் சிற்பங்கள் முழுத்தொகுப்பாக காணப்படுகின்றன. தாராசுரம் தமிழனின் கலை, கலாச்சாரம், பண்பாட்டினைப் பறைசாற்றும் எத்தனயோ சின்னங்களில் இதுவும் ஒன்று. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago