முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடப்பாண்டில் 14 பேர் கவுரவக்கொலை

புதன்கிழமை, 26 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - இந்தியாவில் இந்த ஆண்டு 14 பேர் கவுரவ கொலை செய்யப்பட்டதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜ்ஜூ அளித்த பதிலில் தெரிவித்திருப்பதாவது,
தேசிய குற்ற ஆவண அமைப்பின் புள்ளி விவரப்படி உத்தர பிரதேச மாநிலத்தில் 7 பேர், பஞ்சாபில் 2 பேர், அரியானா, குஜராத், ஆந்திரா, மகராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 14 பேர் இந்த ஆண்டில் அக்டோபர் மாதம் வரை கவுரவக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலைகள் குறித்த புள்ளி விவரங்களை சேகரிக்கும் பணி இந்த ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. கவுரவ கொலைகளை தடுக்கும் வகையில் ஒருவரின் திருமண சுதந்திரத்தில் மற்றவர்கள் தலையிடுவதை தடுக்க வழிவகை செய்யும் மசோதாவை சட்ட அமைச்சகம் உருவாக்கி வருகிறது என்று ரிஜ்ஜூ தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து