எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சி - தமிழ்நாடு காங்கிரசிலிருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தனது ஆதரவாளர்களுடன் விலகினார். இதைதொடர்ந்து திரு¢¢ச்சியில் இன்று 28ந் தேதி (வெள்ளிக்கிழமை) புதிய கட்சி தொடங்கப்போவதாக அவர் அறிவித்திருந்தார். தமிழ்நாடு முழுவதும் ஜி.கே.வாசனின் ஆதரவாளர்கள் அவரது கட்சியில் தொடர்ந்து இணைந்து வருகிறார்கள். இந்த நிலையில் திருச்சியில் இன்று பொன்மலை ஜி கார்னரில் மாநாடு போல பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடத்துவதற்கு இரவு, பகலாக ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்கிடையே நேற்று முன்தினம் சென்னையில் ஜி.கே.வாசன் தன்னுடைய புதிய கட்சிக்கான கொடியை அறிமுகப்படுத்தினார்.
திருச்சி பொன்மலை ஜிகார்னரில் இன்று (28ந்தேதி) மாலை பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முழுவதும் இருந்து 8 ஆயிரம் வாகனங்களில் ஜி.கே.வாசன் கட்சியினர் திருச்சிக்கு வரப்போவதாக ஏற்கனவே திருச்சியில் முன்னாள் எம்.எல்.ஏக்கள் வேலூர் ஞானசேகரன் கோவை தங்கம், விடியல் சேகர், திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகரன், முன்னாள் திருச்சி மேயர் சாருபாலா ஆகியோர் அறிவித்திருந்தனர்.
அதன்படி தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரம் பஸ்கர், 8 ஆயிரம் கார்கள், 5 ஆயிரம் வேன்கள், ஜி.கே.வாசன் கட்சியினர் இன்று திருச்சிக்கு வருகின்றனர். 3 லட்சம் பேர் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக முன்னனி தலைவர்கள் தெரிவித்துள்ளார்கள். விழாவிற்கு வரும் வாகனம் நிறுத்துவதற்காக திருச்சியில் 7 இடங்களை திருச்சி மாநகர போலீசார் அமைத்துள்ளார்கள்.
மேலும், திருச்சி பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வருகைதரும் தொண்டர்களுக்காக கழிப்பிட வசதி, குடிநீர் வசதி தனித்தனியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாநகருக்குள் நுழையும் 7 நுழைவு வாயில் பகுதிகளில் கட்சி தொண்டர்களை வரவேற்க கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளார்கள். இன்று நடைபெற உள்ள பொதுக்கூட்ட மேடை 60 அடி நீளத்தில் 40 அகலத்தில் பிரமாண்டமாக அமைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. மேடையின் இடது புறத்தில் சென்னை தலைமை செயலகத்தின் மாதிரியும், வடது புறத்தில் டெல்லி நாடாளுமன்றம் மாதிரியும் கட்அவுட்கள் அமைக்கப்பட்டுள்ளது மேடைக்கு முன்புறம் 32 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.
பொதுக்கூட்ட நிகழ்ச்சி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. முதலில் லஷ்மி ஸ்ருதி குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. அதைதொடர்ந்து பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் தொடங்கும். 32 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை ஜி.கே.வாசன் ஏற்றி வைத்து 250 தொண்டர்கள் பங்கேற்கும் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். அதைதொடர்ந்து பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. முதலில் முன்னனி தலைவர்கள் பேசுகிறார்கள். இறுதியாக இரவு 8 மணிக்கு ஜி.கே.வாசன் உரையாற்றுகிறார். பின்பு 8.30 மணியுடன் பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிவடைகிறது. பொதுக்கூட்டத்திற்கு வரும் பெண்கள் உட்காருவதற்காக தனி இடம் அமைக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகரில் இந்த பொதுக்கூட்டத்திற்காக எங்கு பார்த்தாலும் கொடிகள் கட்டப்பட்டுள்ளது மாநாட்டு அழைப்பு பேனர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. பிரச்சார வாகனங்கள் திருச்சி மாநகர் முழுவதும் சுற்றி வருகிறது. பொதுக்கூட்ட திடலில் உயர் மினகோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பொது¢கூட்டத்தில் பங்கேற்பதற்காக முன்னாள் ஐஏஎஸ். ஐபிஎஸ். பிரபல வக்கீல்கள், மாணவர்கள், மகளிர் அணியினர் ஆகியோர் திரண்டு வருகிறார்கள் என கட்சி முன்னினி நிர்வாகிகள் தெரிவித்தனர். இப்பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை முன்னாள் எம்.எல்.ஏக்கள் விடியல் சேகர், கோவை தங்கம், வேலூர் ஞானசேகரன், திருச்சி மாவட்ட தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான ராஜேசேகரன், திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா, திருச்சி குணா, உள்ளிட்ட பலர் தீவிரமாக செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்றுமாலை சரியாக 5 மணிக்கு ஜி.கே.வாசன் முன்னனி தலைவர்களுடன் பொதுக்கூட்ட மைதானத்திற்கு வந்தார். அவருடன் முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், முன்னாள் மாநில தலைவர் ஞானதேசிகன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் பீட்டர் அப்போன்ஸ், விடியல் சேகர், கோவை தங்கம், சக்தி வடிவேலு, திருச்சிமாவட்ட முன்னாள் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான ராஜசேகரன், திருச்சி முன்னாள் மேயர் சாருபால தொண்டைமான், மற்றும் வாசன் எஸ்டேட் ரவி முருகையா, கே.வி.ஜி.ரவீந்திரன், தர்மராஜ், ஏ.ஜி.ஆனந்தராஜ், இன்டர்நெட் ரவி, திருச்சி டி.குணா இளைஞர் காங்கிரஸ் ராஜராஜசோழன், ஜெயகர்ணா, க.பி.பாலசுப்பிரமணியம் உள்பட முன்னனி தலைவர்கள் வந்தனர்.
அதைதொடர்ந்து பொதுக்கூட்ட மைதானத்தில் 100 கிலோ எடையுள்ள பிரமாண்ட பலூனை ஜி.கே.வாசன் ஆகாயத்தில் பறக்கவிட்டார். அப்பொழுது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் கரகோஷம் எ-ழுப்பினார்கள். பின்னர், பொதுக்கூட் மேடையை ஜி.கே.வாசன் சுற்றிப்பார்த்தார். அதன்பின்பு ஜி.கே.வாசன் கட்சி முன்னனி தலைவர்களுடன் மேடைக்கு அருகில் உட்கார்ந்து ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை2 days 18 hours ago |
ஆனியன்ப்ரை5 days 17 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 2 days ago |
-
மகளிர் இலவச பேருந்து பயணத்தால் தெலங்கானாவில் மெட்ரோ ரெயில் சேவை கடும் பாதிப்பு
13 May 2024ஐதராபாத், தெலங்கானாவில் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக எல் & டி நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் மோதல்
13 May 2024அமராவதி, ஆந்திராவில் சித்தூர், கடப்பா மாவட்டங்களில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் 8.25 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது : செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப ஏற்பாடு
13 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்: தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
13 May 2024சென்னை, மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதமடைவதாக விவசாயிகள் வேதனைப்படுகின்றனர் என்று தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
விரைவில் திருமணம் செய்து கொள்வேன்: பிரச்சாரத்தில் ராகுல்காந்தி கலகல பேச்சு
13 May 2024ரேபரேலி, உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, விரைவில் திருமணம் செய்வேன் என ராகுல் பேசியது அங்கு கலகலப்பான சூழலை ஏற்படுத்தியது.
-
இ.பி.எஸ். தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது எப்படி? தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்
13 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற தேர்தலில் இபிஎஸ் தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்தல் ஆணையம
-
சந்தேக மரணமாக வழக்கு மாற்றம்: ஜெயக்குமார் மரணம் குறித்து தென்மண்டல ஐ.ஜி. விளக்கம்
13 May 2024நெல்லை, சந்தேக மரண வழக்காக ஜெயக்குமார் வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ள தென்மண்டல ஐ.ஜி., இன்னும் ஒரு வாரத்தில் இந்த வழக்கில் ஒரு தெளிவான முடிவு கிடைக்கும் என்
-
ரூ.188 கோடி கொள்ளை வழக்கு: மேலும் ஒரு இந்திய வம்சாவளி நபர் கனடா போலீசாரால் கைது
13 May 2024ஒட்டாவா : கனடாவில் தங்கக் கட்டிகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்.
13 May 2024சென்னை : தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளத
-
'விக்கிரவாண்டி' இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? - டாக்டர் ராமதாஸ் விளக்கம்
13 May 2024விழுப்புரம் : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? என்பது குறித்து அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.
-
உயிர் தமிழுக்கு விமர்சனம்
13 May 2024கேபிள் டிவி தொழில் செய்து வரும் நாயகன் அமீர், நாயகி சாந்தினி ஸ்ரீதரனை கண்டதும் காதல் கொள்கிறார்.
-
நாகை எம்.பி. செல்வராஜ் மறைவு: முதல்வர் ஸ்டாலின் - இ.பி.எஸ். இரங்கல்
13 May 2024சென்னை, நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
இன்டியா கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
13 May 2024சென்னை, இன்டியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வேன்: ராகுல்
13 May 2024ரேபரேலி : மத்தியில் காங்கிரஸ் - இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதே எனது முதல் வேலையாக இருக்கும் என்று உறுதியளிப்பதாக காங்கிரஸ்
-
அமெரிக்காவில் பயங்கரம்: நடந்து சென்றவர் மீது காரை ஏற்றி கொலை செய்த திருநங்கை
13 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில், சாலையில் நடந்து சென்ற நபர் மீது, திருநங்கை ஒருவர் காரை ஏற்றியும் கத்தியால் குத்தியும் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை அத
-
சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் : கோவை குற்றவியல் கோர்ட் அனுமதி
13 May 2024கோவை : சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தல்: 62.84 சதவீத வாக்குப்பதிவு
13 May 2024புதுடெல்லி : 4-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 62.84 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
இடைக்கால ஜாமின் கோரிய ஹேமந்த் சோரன்: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
13 May 2024புதுடெல்லி, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன், தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய வாய்ப
-
குருத்வாராவில் வழிபாடு நடத்தி சப்பாத்தி சுட்டு சீக்கியர்களுக்கு உணவு பரிமாறிய பிரதமர் மோடி : பீகார் பிரச்சாரத்தில் ருசிகர சம்பவம்
13 May 2024பாட்னா : பீகாரில் உள்ள சீக்கியர்களின் புனிதத்தலமான குருத்வாராவில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி, அங்கு சப்பாத்தி சுட்டு, சீக்கியர்களுக்கு உணவு பரிமாறினார்.
-
இந்திய அளித்த போர் விமானங்களை இயக்கும் திறன் எங்களுக்கு இல்லை : மாலத்தீவு அமைச்சர் தகவல்
13 May 2024மாலே : இந்திய போர் விமானத்தை இயக்கும் திறன் எங்கள் ராணுவத்திற்கு இல்லை என்று மாலத்தீவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் 50-வது வெற்றி: ரசிகர்களுடன் கொண்டாட்டம்
13 May 2024சென்னை : சென்னையில் 50-வது வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடியது சி.எஸ்.கே. வீரர்கள்.
சென்னை வெற்றி...
-
மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது "என் உயிருக்கு ஆபத்து" என ஆவேசமாக குரல் எழுப்பிய சவுக்கு சங்கர் : போலீசார் முன்னிலையில் கோஷமிட்டதால் பரபரப்பு
13 May 2024கோவை : கோவையில் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் போலீசார் முன்னிலையில் என் உயிருக்கு ஆபத்து என சவுக்கு சங்கர் ஆவேசமாக குரல் எழுப்பிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்ட
-
டெல்லியை வீழ்த்தியது பெங்களூரு
13 May 2024பெங்களூரு : டெல்லி அணிக்கு எதிராக பவுலிங்கில் மிரட்டிய பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது.
-
வாக்குச்சாவடியில் வரிசையில் வருமாறு கூறிய வாக்காளரை கன்னத்தில் அறைந்த எம்.எல்.ஏ. திருப்பித்தாக்கியதால் பரபரப்பு
13 May 2024தெனாலி : ஆந்திர மாநிலத்தில் வாக்குச் சாவடி ஒன்றில் வாக்களிக்க வந்த எம்எல்ஏவை வரிசையில் வருமாறு கூறிய வாக்காளரை எம்எல்ஏ கன்னத்தில் அறைந்தார்.
-
அமெரிக்க நகைச்சுவை தொடர் Garfield
13 May 2024ஒரு சுட்டியான பூனைக்குட்டியின் பெயர்!
தனது எஜமானின் வீட்டில் வாழும் Garfield க்கு, Odie ஒரு நாய் , உற்ற நண்பன்!