முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஸ்டிரைக்

வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014      வர்த்தகம்
Image Unavailable

சென்னை - பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் நாடு முழுவதும் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 4 வருடமாக போனஸ் மறுப்பு, கடை நிலை ஊழியர்கள் ஊதியம் தேக்கம் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டில் சென்னை தொலைபேசி மற்றும் தமிழ்நாடு வட்டாரம் ஆகியவற்றில் பணிபுரியும் சுமார் 25 ஆயிரம் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் கலந்து கொண்டனர்.ஊழியர்களின் போராட்டத்தால் வாடிக்கையாளர்கள் சேவை பாதிக்கப்பட்டன. சென்னையில் உள்ள பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் சேவை மையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. ஊழியர்கள் பணிக்கு வராததால் டெலிபோன் பழுது, ரீசார்ஜ் செய்யும் பணி, கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட பல பணிகள் பாதிக்கப்பட்டன.
பி.எஸ்.என்.எல் கூட்டு போராட்டகுழு தலைவர் மதிவாணன் தலைமையில் பூக்கடை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.இந்த போராட்டத்தால் செல்போன் சேவை, இணைய தள சேவை பாதிக்காது. தரைவழி டெலிபோன் மட்டும் பழுது பணி முற்றிலும் பாதிக்கப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து