முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வருடன் 12 மாவட்ட மேயர்கள் சந்திப்பு

வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை - சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை பெண் மேயர்கள் நேற்று சந்தித்து பேசினர். தமிழகத்தில் மொத்தம் 12 மேயர்கள் உள்ளனர். அதில், தூத்துக்குடி, நெல்லை, திருச்சி, தஞ்சாவூர், ஈரோடு, வேலூர், திருப்பூர் ஆகிய 7 மாநகராட்சிகளில் பெண்கள் மேயர்களாக உள்ளனர்.

இந்த நிலையில், தஞ்சாவூர் தவிர மற்ற மாநகராட்சி மேயர்கள் அந்தோணி கிரேசி, புவனேஸ்வரி, ஜெயா, மல்லிகா பரமசிவம், கார்த்தியாயினி, விசாலாட்சி ஆகிய 6 பேரும் நேற்று தலைமைச் செயலகத்துக்கு வந்தனர். முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை அவர்கள் 6 பேரும் சந்தித்து பேசினர். சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது.

இதுபற்றி சில பெண் மேயர்களிடம் கேட்டபோது, “மக்கள் நலத்திட்டங்களை அவர்களிடம் எடுத்துச்செல்வதில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று முதல்- அமைச்சர் எங்களுக்கு அறிவுரை வழங்கினார். வரும்சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை மக்கள் வெற்றிபெற செய்வதற்கு ஏற்ற வகையில், அவர்களுக்கான திட்டங்களை முழு அளவில் செயல்படுத்துவோம் என்று நாங்கள் உறுதி அளித்துள்ளோம்” என்று தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து