முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடி சபரிமலை வருகை

திங்கட்கிழமை, 8 டிசம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

திருவனந்தபுரம் - சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 27ம் தேதி மண்டல பூஜை நடக்கிறது. தொடர்ந்து மகரவிளக்கு திருவிழா தொடங்குகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க வேண்டும் என பாரதீய ஜனதா கட்சியினரும், அகில இந்திய அய்யப்ப சேவா சமாஜத்தினரும் வேண்டுகோள் விடுத்தனர். இது தொடர்பாக அய்யப்ப சேவா சமாஜ் பொதுச் செயலாளர் ஈரோடு ராஜன் நிருபர்களிடம் கூறுகையில்,
பிரதமர் நரேந்திர மோடி சபரிமலைக்கு வர வேண்டும். ஐய்யப்பனை தரிசிக்க வேண்டும் என அய்யப்ப சேவா சமாஜத்தின் அகில இந்திய தலைவர் கிஷோர் குமார் வாரியர் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்தார். இதனை பிரதமரும் ஏற்றுக் கொண்டார். அடுத்த மாதம் 20ம் தேதிக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி சபரிமலைக்கு வருவதாக தெரிவித்துள்ளார். சபரிமலையை தேசிய புனித தலமாக அறிவிக்க பிரதமரின் வருகை உதவியாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து