முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாமக்கல் - அரியலூர் அதிமுக பிரமுகர்கள் நீக்கம்

செவ்வாய்க்கிழமை, 16 டிசம்பர் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை - நாமக்கல்- அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த இரு அதிமுக பிரமுகர்கள் நீக்கப்பட்டுள்ளதாக மக்களின் முதல்வரும் அதிமுக பொதுசெயலாளர்ருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது குறித்து அதிமுக பொதுசெயலாளரும், மக்களின் முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை வருமாறு:
கழகத்தின் கொள்கைக்கும் குறிக்கோளுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தி்ன் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழகக்கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த எஸ்.கே.செல்லமுத்து ( சேந்தமங்கலம் பேரூராட்சி கழக மாவட்ட பிரதிநிதி) அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த குணசேகரன்( சுன்னங்குடி கிளைக்கழக செயலாளர் திருமானார் ஒன்றியம்) ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி வைக்கப்படுகின்றனர்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இனி அவர்களுடன் எந்த வித தொடர்பும் வைத்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு மக்களின் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து