முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

19–ந் தேதி சத்தியமூர்த்தி பவனில் காங். மாவட்ட தலைவர்கள் கூட்டம்v

செவ்வாய்க்கிழமை, 16 டிசம்பர் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை - காங்கிரசில் இருந்து விலகிய ஜி.கே.வாசன் த.மா.கா.வை தொடங்கியுள்ளார். அந்த கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தமிழகத்தில் காங்கிரசை வளர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். நடிகை குஷ்பு சமீபத்தில் காங்கிரசில் இணைந்தார்.
‘கோஷ்டி பூசலை தவிர்த்து தலைவர்களும், தொண்டர்களும் இணைந்து பணிபுரிய வேண்டும்’ என்பதற்கான முயற்சிகளிலும் இளங்கோவன் ஈடுபட்டுள்ளார். இதற்கான ஆலோசனை கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
தமிழ்நாடு காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் வருகிற 19–ந் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமை தாங்குகிறார்.

கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளரும், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளருமான முகுல்வாஸ்னிக் கலந்து கொள்கிறார். முன்னாள் மத்திய நிதிமந்திரி ப.சிதம்பரம், முன்னாள் மாநில தலைவர்கள் குமரி அனந்தன், தங்கபாலு, கிருஷ்ணசாமி, முன்னாள் மத்திய மந்திரிகள் பிரபு, மணிசங்கர்அய்யர், ஜெயந்தி நடராஜன், சுதர்சன நாச்சியப்பன், தனுஷ் கோடி ஆதித்தன், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கோபிநாத், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் திருநாவுக்கரசர், ஜெயக்குமார், செல்லக்குமார் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

சிறப்பு அழைப்பாளர்களாக சட்டமன்ற உறுப்பினர்களும், அனைத்து பிரிவு தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி நடவடிக்கைகள் மற்றும் 2016 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராவது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து