முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புகையிலைப் பொருட்கள் மீதான வரிஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை

வியாழக்கிழமை, 18 டிசம்பர் 2014      வர்த்தகம்
Image Unavailable

சென்னை - தமிழ்நாடு முழுவதும் உள்ள இரயில் நிலையங்கள், ஆம்னி பேருந்துகள், சுங்கச்சாவடி, சில்லறை மற்றும் மொத்த விற்பனை கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதில், கோவைக் கோட்டத்தில் புகையிலைப் பொருட்களை இவ்வாறாக கொள்முதல் பட்டியல் இல்லாமலும், பதிவு செய்யப்படாத கிட்டங்கிகளிலும் இருப்பு வைக்கப்பட்டிருந்த வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.15.04 லட்சம் தண்டம் மற்றும் வரியாக வசூலிக்கப்பட்டுள்ளது.அரசாணை எண் 82, (வணிகவரி மற்றும் பதிவுத்துறை), நாள் 31.10.2014ன் படி 01.11.2014 முதல் தமிழ் நாட்டில் முதற்கட்ட விற்பனைக்கு புகையிலைப் பொருள்களுக்கான விற்பனை வரியினை 20 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக அதிகரித்து ஆணையிடப்பட்டுள்ளது. புகையிலைப் பொருட்கள் பிற மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டால் தமிழ் நாட்டில் முதற்கட்ட விற்பனைக்கான வரி 30ரூ செலுத்தப்பட வேண்டும். வணிகர்கள் தங்கள் வணிக தலத்தில் இருப்பில் உள்ள புகையிலைப் பொருள்களுக்கான கொள்முதல் பட்டியலினை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். கொள்முதல் பட்டியல் இல்லாமலும், பதிவு செய்யப்படாத கிட்டங்கிகளிலும் புகையிலைப் பொருட்களை வைத்திருந்தாலும், முறையான வரியினை செலுத்தத் தவறினாலும் அவ்வணிகர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள இரயில் நிலையங்கள், ஆம்னி பேருந்துகள், சுங்கச்சாவடி, சில்லறை மற்றும் மொத்த விற்பனை கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதில், கோவைக் கோட்டத்தில் புகையிலைப் பொருட்களை இவ்வாறாக கொள்முதல் பட்டியல் இல்லாமலும், பதிவு செய்யப்படாத கிட்டங்கிகளிலும் இருப்பு வைக்கப்பட்டிருந்த வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.15.04 லட்சம் தண்டம் மற்றும் வரியாக வசூலிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருச்சி மாவட்டத்தில் வரிஏய்ப்பு செய்த வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.22.16 லட்சம் வரியாக வசூலிக்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் இதேபோன்று ரூ.4.5 லட்சமும், சென்னையில் ரூ.45 லட்சமும் தண்டம் மற்றும் வரியாக வசூலிக்கப்பட்டுள்ளது.
வரி ஏய்ப்பு செய்யும் வணிகர்கள் கடுமையான நடவடிக்கையையும், குற்றவியல் விளைவுகளையும் எதிர்கொள்ளவேண்டுமென எச்சரிக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து