முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் போரிட அழைப்பு

வெள்ளிக்கிழமை, 19 டிசம்பர் 2014      உலகம்
Image Unavailable

நியூயார்க் - தீவிரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைந்து போரிட வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூன் அழைப்பு விடுத்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

 

சிறுபான்மையினர், அகதிகள், அப்பாவி மக்களை குறிவைத்து நடத்தப்படும் தீவிரவாத தாக்குதல்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. உலகின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாதம் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

 

இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து தீவிரவாதத்துக்கு எதிராக தீரமாக போரிட வேண்டும்.

 

வரும் 2015-ம் ஆண்டு செயல் ஆண்டாக இருக்க வேண்டும். உலகம் முழுவதும் வாழும் மக்கள் செழுமை அடைய வேண்டும், ஒளிமயமான எதிர்காலத்தைப் பெற வேண்டும். அதை இலக்காக கொண்டு ஐ.நா. சபை செயல் படும்.

 

பாகிஸ்தானில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை சகித்துக் கொள்ளவே முடியாது. ஆப்கானிஸ்தான், நைஜீரியா, சோமாலியா உட்பட பல்வேறு பகுதிகளில் தீவிரவாத பிரச்சினை தலைதூக்கியுள்ளது. அதனை அடியோடு வேரறுக்க வேண்டும், என்று அவர் தெரிவித்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து