முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குமரி மீனவர்களை மீட்க வலியுறுத்தி அமைச்சரிடம் உறவினர்கள் மனு

வெள்ளிக்கிழமை, 19 டிசம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை - வங்கதேச சிறையில் அடைக்கப்பட்ட கன்னியாகுமரி மீனவர்கள் 24 பேரை மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மீனவர்களின் உறவினர்கள் சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபாலிடம் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் புனித தாமஸ் நகரை சேர்ந்த 24 மீனவர்கள் , கொல்கத்தா கடலில் மீன்பிடித்துக்கொண்டிருக்கும் போது வங்கதேச போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர் . இது குறித்து பிரதமர் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் ,ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளார். இந்த நிலையில் அவர்களது உறவினர்கள் செல்வராஜ், செபா மற்றும் பிரபா உள்ளிட்டோர் நேற்று சென்னை தலைமை செயலகத்திற்கு வந்தனர். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபாலை சந்தித்து மனுவொன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் கொல்கத்தா, பெட்வாகாட் துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்காக நமது எல்லைக்கு சென்றனர். கடந்த 9 ந்தேதி அதிகாலை 2 மணிக்கு அவர்களை வங்கதேசத்தை சேர்ந்த கடற்படையினர் கன்னியாகுமரி மீனவர்களை கைதுசெய்து , அங்குள்ள குல்னா மாவட்டம், பாகர்காட் துணைச்சிறையில் அடைத்துள்ளனர். வங்காளதேச சிறையில் வாடும் எமது குடும்பத்தினரையும் பறிமுதல் செய்யப்பட்ட மீன்படகுகளை மீ்ட்டு தர நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்

 

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து