முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திர புயல் நிவாரணம்: ரஜினிகாந்த் நிதியுதவி

ஞாயிற்றுக்கிழமை, 21 டிசம்பர் 2014      சினிமா
Image Unavailable

ஐதராபாத் - ஆந்திர புயல் நிவாரணத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளார்.

சமீ பத்தில் ஆந்திராவை குத்குத் புயல் தாக்கியது. இதில் கடலோர ஆந்திராவில் விசாகப்பட்டினம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம் மாவட்டங்களில் கடுமையான பொருட்சேதமும் பயிர்சேதமும் ஏற்பட்டது. புயல் பாதித்த மக்களுக்கு உதவுவதற்காக ஐதராபாத்தில் தெலுங்கு திரையுலகம் சார்பில் நட்சத்திர கலை விழா நடத்தப்பட்டு நிதியுதவி வழங்கப்பட்டது. இது தவிர நடிகர், நடிகைகள், தொழிலதிபர்கள் தனிப்பட்ட முறையில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து நிதி உதவி அளித்து வருகிறார்கள். நடிகர் ரஜினிகாந்த் சில நாட்களுக்கு முன் ஐதராபாத்தில் தனது லிங்கா படத்தின் வெளியீ ட்டு விழாவில் கலந்து கொண்டு பேசுகையில், நட்சத்திர கலை விழாவில் தன்னால் கலந்து கொள்ள முடியாமல் போனதாகவும் என்றாலும் புயல் பாதித்த மக்களுக்கு உதவி செய்வேன் என்றும் அறிவித்து இருந்தார். அதன்படி நடிகர் ரஜினிகாந்த் ஆந்திர புயல் நிவாரண நிதியாக ரூ . 5 லட்சம் வழங்கியுள்ளார். சென்னையில் ரஜினிகாந்த் நடத்தும் ராகவேந்திரா சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் ரூ. 5 லட்சத்துக்கான காசோலை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு அனுப்பி உள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து