முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் துப்பாக்கி சண்டையில் ராணுவ அதிகாரி மரணம்

புதன்கிழமை, 28 ஜனவரி 2015      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர் - ஜம்மு காஷ்மீர் புல்வாமா மாவட்டம் அருகே பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் குடியரசு தினத்தில் விருது பெற்ற ராணுவ அதிகாரி கர்னல் எம்.என். ராய் உட்பட பாதுகாப்பு படையினர் இருவர் உயிரிழந்தனர். இந்த சண்டையில் ஹிஜ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

புல்வாமா மாவட்டம் மிந்தோரா கிராமத்தில் உள்ள தங்களது வீடுகளுக்கு ஹிஜ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் செல்வதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர் அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த சண்டையின் போது ராணுவ அதிகாரி கர்னல் எம்.என். ராய், போலீஸ் காவலர் சிங் ஆகியோர் உயிரிழந்தனர். பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக குடியரசு தினத்தன்று ராய்க்கு விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. துப்பாக்கி சண்டையின் போது உயிரிழந்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு ஜம்மு மாநில முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து