முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுவையில் ஏ.டி.எம்.மில் ரூ. 21 லட்சம் கொள்ளை

வியாழக்கிழமை, 29 ஜனவரி 2015      தமிழகம்
Image Unavailable

புதுச்சேரி - புதுவையை அடுத்த தவளைக்குப்பத்தில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் ரகசிய குறியீட்டு எண்ணை பயன்படுத்தி இயந்திரத்தை திறந்து ரூ. 21 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
புதுச்சேரியில் இருந்து கடலூர் செல்லும் சாலையில் உள்ள தவளைக்குப்பத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளை உள்ளது. இந்த வங்கி வளாகத்தில் ஏ.டி.எம். மையமும் இயங்கி வருகிறது. இதில் அதே பகுதியை சேர்ந்த துரைசாமி என்பவர் காவலாளியாக இருந்து வருகிறார்.

இரவு நேரத்தில் காவலாளி தூங்கி விட்டாராம். இதை பயன்படுத்தி கொண்ட மர்ம நபர்கள் சிலர் ஏ.டி.எம். மையத்திற்குள் புகுந்து ரகசிய குறியீட்டு எண்ணை பயன்படுத்தி திறந்து அதில் இருந்த ரூ. 21 லட்சம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து விட்டு சென்றுள்ளனர். காலையில் எழுந்து பார்த்த போது பணம் கொள்ளையடிக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்த காவலாளி அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இது பற்றி வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. புதுச்சேரி உயர் காவல் கண்காணிப்பாளர் சந்திரன், கிராமப்புற காவல் கண்காணிப்பாளர் தெய்வசிகாமணி மற்றும் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து