முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனுஷ் பட வழக்கு: தணிக்கை குழுவை அணுகி தீர்வு காண உத்தரவு

புதன்கிழமை, 11 பெப்ரவரி 2015      சினிமா
Image Unavailable

மதுரை - தனுஷ் பட வழக்கு சம்பந்தமாக தணிக்கை குழுவை அணுகி தீர்வு காணலாம் என்று மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு திருக்குறிப்பு தொண்டநாயனார் மகாசபை தலைவர் எஸ். மாரிச்செல்வம் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, 

நடிகர் தனுஷ் நடித்து நாளை வெளிவரவிருக்கும்  திரைப்படம் அனேகன். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படத்தில் வண்ணார் சமுதாயத்தை சேர்ந்த பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வசனம் இடம்பெற்றுள்ளது. இந்த படத்தை தணிக்கை செய்த போது வண்ணார் சமுதாய பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகள் நீக்கப்படாமல் விடப்பட்டுள்ளன.

இதனால் அனேகன் படத்தை வெளியிட தடை விதிக்க கோரியும் சில காட்சிகளை நீக்க கோரியும் தணிக்கை குழு அதிகாரிகளிடம் கடந்த 4ம் தேதி புகார் மனு கொடுத்தேன். அந்த மனு மீது அதிகாரிகள் இதுவரை  நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நாளை திரையிட இருக்கும் அனேகன் படத்துக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று நீதிபதி ராஜேந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அவர், மனுதாரர் தணிக்கை குழுவை அணுகி இந்த பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து