முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை விமான நிலையத்தில் திடீர் தீ

புதன்கிழமை, 18 பெப்ரவரி 2015      வர்த்தகம்
Image Unavailable

சென்னை - சென்னை விமான நிலையத்தில் ஓடு பாதை அருகே புல்வெளி பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சென்னை விமான நிலையத்தில் பறவைகளை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  பறவைகள் விமானத்தின் மீது மோதினால் விபத்துக்கள் ஏற்படும்.  ஆகவே பறவைகள் விமான நிலையத்திற்குள் வரும்போது அவற்றை விரட்டுவதற்காக சிறிய வெடிகளை வெடிக்கச் செய்வார்கள்.

அதேபோல நேற்று காலை பறவைகளை விரட்டுவதற்காக வெடிகளை  வெடித்தபோது அந்த வெடி விமான நிலையத்தின் ஓடுபாதை அருகே இருந்த புல்வெளி மீது விழுந்தது. வெயிலில் புல்வெளி காய்ந்து இருந்ததால் வெடி பட்டதும் தீ உடனடியாக பற்றிக்கொண்டது. உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப் பட்டது.
3 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.

தீயை மேலும் பரவாமல் தடுப்பதற்காக நுரை அள்ளி வீசப்பட்டது. அதனைத் தொடர்ந்து தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.  தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்துபோது கோவையில் இருந்து இன்டிகோ விமானம் ஒன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. உடனடியாக அந்த விமானம் தடுத்து நிறுத்தப்பட்டது. தீயை முழுவதும் கட்டுக்குள் கொண்டு வந்த பிறகே அந்த விமானம் அனுமதிக்கப்பட்டது. விமான நிலையத்தின் ஓடுபாதையில் தீ விபத்து ஏற்பட்டது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து