முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அன்னை தெரசா விவகாரம்: பாஜ செய்தி தொடர்பாளர் மீது நடிகை பாய்ச்சல்

வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015      சினிமா
Image Unavailable

புது டெல்லி - அன்னை தெரசா குறித்து ஆர்எஸ்எஸ் தலைவரின் சர்ச்சைப் பேச்சு விவகாரத்தில் பாஜ செய்தி தொடர்பாளரும் பிரபல பாலிவுட் நடிகையும் டுவிட்டரில் மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் அன்னை தெரசாவை மதமாற்ற நோக்கம் கொண்டவர் என்று பேசினார். இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் பாராளுமன்றத்திலும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. இந்த சூழலில் மோகன் பகவத் சிங் பேச்சை நியாயப்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கு பிரபல பாலிவுட் நடிகை தியா மிர்சா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தனிப்பட்ட பிரச்சினைகளை மிகவும் கொச்சப் படுத்துவது போல உங்களது பேச்சு உள்ளது. இதற்காக நீங்கள் வேட்கப்பட வேண்டும். அன்னை தெரசா குறித்த உங்கள் கருத்து கண்டனத்துக்குறியது என்று தனது டுவிட்டரில் தியா குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு அவரது டுவிட்டரில் பதிலளித்த பாஜ செய்தித் தொடர்பாளர் மீனாட்சி லேகி உண்மை மிக வலிமையானது. அதனை எதிர்கொள்ள முடியாமல் அகந்தையுடன் இருக்கும் நீங்கள் தான் இதற்காக அவமானம் அடைய வேண்டும். உங்களால் உண்மையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று தெரிகிறது.

இதற்கு பதிலளித்த தியா கூறுகையில், எனது தந்தை ஒரு கத்தோலிக், எனது தாயார் ஒரு வங்காலி, நான் ஒரு இந்துவை திருமணம் செய்து கொண்டேன். நான் ஒரு முஸ்லீம் வளர்ப்பு தந்தையால் வளர்க்கப்பட்டேன். உண்மையில் நான் ஒரு இந்தியன் என்று தியா மிர்சா பதிலடி கொடுத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து