முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெப்ப சலனத்தால் சென்னையில் மழை வாய்ப்பு

திங்கட்கிழமை, 2 மார்ச் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் தொடங்கும் காலத்துக்கு முன்னதாகவே தென் மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்க தொடங்கி உள்ளது. அதிகபட்சமாக மதுரை, பாளையங்கோட்டையில் 97 டிகிரி வெயில் கொளுத்தியது.
இந்த நிலையில் வங்க கடலில் இலங்கை அருகே நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்பட பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. உள் மாவட்டங்களிலும் ஓரிரு பகுதிகளில் மழை பெய்தது.

இது வெயிலின் உச்சத்தை தணிப்பதாக அமைந்தது.இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு பலவீனம் அடைந்து கலைந்து விட்டது. ஆனாலும் அதன் மேக கூட்டங்கள் அவ்வப்போது திரண்டு வருவதால் ஓரிரு சமயம் மழை தூறல் விழுகிறது.
சென்னையில் நேற்று 89 டிகிரி வெயில் கொளுத்திய நிலையில், வெப்ப சலனம் காரணமாக கருமேகங்கள் திரண்டன. இதனால் நேற்று  காலையில் வானம் மேக மூட்டமாக காணப்பட்டது. சென்னையில் ஒருசில இடங்களில் மழை துறல்கள் விழுந்தன. இன்று ஒருசில பகுதிகளில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து