முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தினால் நடவடிக்கை

வியாழக்கிழமை, 5 மார்ச் 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - மத நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. இது தொடர்பாக மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் திக்விஜயசிங் பேசுகையில், மத நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் பரவலாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.

இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பதிலளிக்கையில்,

மத நல்லிணக்கத்துக்கு யார் பாதிப்பை ஏற்படுத்தினாலும் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனினும் சம்பவங்களின் எண்ணிக்கை அடிப்படையில் மத நல்லிணக்கத்தை மதிப்பிட முடியாது என்றார்.
அதை தொடர்ந்து மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜ்ஜூ பேசுகையில், கடந்த அக்டோபர் மாதத்தில் 72 மத மோதல் சம்பவங்களும், நவம்பர் மாதத்தில் 49 சம்பவங்களும், டிசம்பர் மாதத்தில் 33 சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. ஆனால் ஜனவரி மாதத்தில் அந்த சம்பவங்களின் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது.

டெல்லியின் திரிலோக்புரி பகுதியில் கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் மத மோதல் அடிப்படையிலானதா, இல்லையா என்பது விசாரணைக்கு பிறகே தெரிய வரும். டெல்லியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மத ரீதியிலான 3 மோதல் சம்பவங்கள் நடந்துள்ளன. அதன்பிறகு ஜனவரி மாதம் வரை எந்த சம்பவங்களும் நடைபெறவில்லை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து