முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலியல் குற்றவாளியை அடித்துக் கொன்ற பொதுமக்கள்

வெள்ளிக்கிழமை, 6 மார்ச் 2015      இந்தியா
Image Unavailable

திம்மாபூர் - சிறையை உடைத்து பாலியல் குற்றவாளியை பொதுமக்களே அடித்து கொலை செய்த சம்பவம் நாகலாந்து மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் வந்தவர் சையத் பரீத்கான். நாகாலாந்தில் கார் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்த இவர் நாகா பழங்குடியின பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சையத்தை கைது செய்தனர். பின்னர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சையத், திம்மாபூரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆத்திரமடைந்த பழங்குடியின மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு திம்மாபூர் மத்திய சிறையை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர், பாலியல் குற்றவாளி சையத்தை சிறைக்கு வெளியே கொண்டு வந்து ஊர்வலமாக ஊரின் மையப் பகுதிக்கு அழைத்து வந்து அவரை அடித்துக் கொலை செய்தனர். பின்னர் அங்கிருந்த வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து