முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின்சார அடுப்பு வெடித்து விபத்து: 7 சிறார்கள் பலி

ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2015      உலகம்
Image Unavailable

நியூயார்க் - அமெரிக்காவின் ப்ரூக்ளின் நகரில் உள்ள ஒரு வீட்டில் மின்சார அடுப்பு வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் 7 சிறார்கள் கருகி பலியானார்கள்.

மின்சார அடுப்பில் சாப்பாட்டை சுட வைத்து விட்டு மாடியில் குடும்பத்தினர் இருந்த போது இந்தத் தீவிபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த தீ விபத்தில் சிறார்களின் தாயார் மற்றும் சகோதரி மட்டும் உயிர் பிழைத்துள்ளனர். மின்சார அடுப்பு உருகி, வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் இருந்து கிளம்பிய தீ மளமளவென வீடு முழுவதும் பரவியது. அதில் மேல் மாடியில் தூங்கிக் கொண்டிருந்த 5 முதல் 16 வயதுடைய 7 சிறார்களும் பரிதாபமாக தீயில் சிக்கிக் கொண்டு கருகி பலியாயினர்.

அவர்களின் தாயார் மற்றும் 15 வயது சகோதரி ஆகியோர் புகையில் சிக்கி 2வது மாடி ஜன்னல் வழியாக கீழே குதித்து உயிர் தப்பினர். விபத்தில் உயிர் தப்பிய தாயாரின் பெயர் கெயில் சசூன். உயிரிழந்த 7 சிறார்களில் 4 பேர் சிறுமிகள் ஆவர். விபத்தின் போது கெயிலின் கணவர் வெளியூர் போயிருந்தாராம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து