முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலியா அருகே பப்புவா நியூகினியா நாட்டில் நிலநடுக்கம்

திங்கட்கிழமை, 30 மார்ச் 2015      உலகம்
Image Unavailable

சிட்னி - ஆஸ்திரேலியா அருகே பசிபிக் கடலில் பப்புவா நியூகினியா என்ற தீவு நாடு உள்ளது. அங்கு நேற்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வட கிழக்கு பகுதியில் உள்ள கொகோபோ நகரம், தலைநகர் போர்ட்மோர்ஸ்பி உள்ளிட்ட பகுதிகள் அதிர்ந்தன. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி ஓட்டம் பிடித்தனர். பாதுகாப்பான இடங்களில் தங்கினர்.

அங்கு 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கொகோபோ நகரில் இருந்து 50 கி.மீட்டருக்கு தென் கிழக்கில் பூமிக்கு அடியில் 65 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உருவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக கொகோபோ கடலில் வழக்கத்தை விட மிக உயரமான அலைகள் எழும்புகின்றன. அவை 3 முதல் 10 அடி உயரம் வரை எழுவதால் சுனாமி தாக்கலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும் பசிபிக் நாடுகளான ரஷ்யா, சீனா, ஜப்பான்,ஆஸ்திரேலியா,நியூசிலாந்து, லிப்பைன்ஸ்,இந்தோனேசியா,ஹவாய், மெக்சிகோ,கவுதமலா, கோஸ்டாரிக்கா, பனாமா, கொலம்பியா, ஈகுவேடார், பெரு, சிலி, அண்டார்டிகா ஆகிய 17 நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு அடி உயரத்திற்கு சுனாமி அலைகள் எழும்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நிலநடுக்கம் ஏற்பட்ட பப்புவா நியூகினியாவில் சேத விவரம், உயிர் சேதம் போன்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து