முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காற்று மாசுபாடு அறிக்கை: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சனிக்கிழமை, 18 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்கும்படி மாநில அரசுகளுக்கு நீதிபதி ஸ்வதந்தர் குமார் தலைமையிலான தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.


வாகன புகையால் ஏற்படும் காற்று மாசுபாடு குறித்த தகவலோடு, மாநிலங்களில் உள்ள வாகன எண்ணிக்கை குறித்தும் தகவல் அளிக்கும்படியும் கூறப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள காற்று தர அளவையும், காற்று மாசுபாட்டை குறைக்க தகுந்த யோசனைகளையும் கூற தீர்ப்பாயம் பணித்துள்ளது.

டெல்லியில் 10 ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கும் டீசல் வாகனங்களுக்கு தீர்ப்பாயம் ஏற்கனவே தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து