முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்சித் தலைவராகிறார் ராகுல்? ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகும்?

புதன்கிழமை, 22 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, காங்கிரஸ் கட்சியின் தலைவராக அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஓரிருவாரங்களில் பொறுப்பேற்க கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. நடந்து முடிந்த பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு படுதோல்வி கிடைத்து வந்த நிலையில் தேர்தல் தோல்விக்கு ராகுல் காந்தி தான் பொறுப்பேற்க வேண்டும் என்று அக்கட்சியிலேயே பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்தனர். 

மேலும் பிரியங்கா காந்தியை காங்கிரஸ் கட்சியின் தலைவராக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வந்தது. இந்நிலையில் விடுமுறையில் செல்வதாக அறிவித்து விட்டு திடீரென மாயமானார் ராகுல் காந்தி. இதனிடையே 2 மாத கால விடுமுறைக்குப் பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன் நாடு திரும்பினார் ராகுல் காந்தி. நாடு திரும்பிய உடனே விவசாயிகளை சந்தித்து அவர் ஆலோசனை நடத்தினார்.

அதன் பின்னர் டெல்லியில் நடந்த விவசாயிகள் பேரணியிலும் அவர் கலந்து கொண்டார். பாராளுமன்றத்தில் நில கையக மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாஜக அரசை சாடியும் அவர் பேசினார். இதனிடையே ஓரிரு வாரங்களில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராகுல் காந்தி ஏற்கக் கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் சோனியா காந்தி மூத்த தலைவராக இருந்து அவருக்கு வழிகாட்டியாக இருந்து செயல்படுவார் என்றும், இதற்கான அறிவிப்பு இன்னும் இரண்டொரு நாளில் வெளியாகக் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து