முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு அரசின் சார்பில் சின்னத்திரை விருதுகள் விண்ணப்பங்கள் பெற மே 27 தேதி வரை நீட்டிப்பு

புதன்கிழமை, 20 மே 2015      சினிமா
Image Unavailable

சென்னை: தமிழ்நாடு அரசின் சார்பில் சின்னத்திரை விருதுகள் விண்ணப்பங்கள் பெறப்படும்  மே 27 தேதி  வரை நீட்டித்துள்ளது.என்றுசெய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார் இது  குறித்து   வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-  

தமிழ்நாடு அரசின் சார்பில் 2013 ஆம் ஆண்டிற்கான திரைப்பட விருதுகள், 2013 ஆம் ஆண்டிற்கான சின்னத்திரை விருதுகள், 2011, 2012 மற்றும் 2013ஆம் ஆண்டுகளுக்கான திரைப்பட மானியம் வழங்குவதற்கு தகுதியுடைய சிறந்த தமிழ் திரைப்படங்கள், நெடுந்தொடர்கள், நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை தேர்வு செய்வதற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 20.05.2015 அன்று மாலை 5.00 மணி வரை பெறப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த காலக்கெடுவை நீட்டித்து வழங்கவேண்டும் என்கிற திரையுலகத்தினரின் கோரிக்கையினை அரசு கனிவுடன் பரிசீலனை செய்து விண்ணப்பங்கள் பெறப்படும் நாளினை 27.05.2015 அன்று மாலை 5.00 மணி வரை நீட்டித்துள்ளது.

பூர்த்தி செய்த விண்ணப்பங்கள்  எம்.ஜி.ஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில் உள்ள திரைப்படத்துறையினர் நலவாரியம், தரமணி, சென்னை-113 என்கிற முகவரியில் 27.05.2015 மாலை 5.00 மணிவரை (அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து) பெறப்படும் என்று செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து