முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடங்குளம் 2-வது அணு உலையில் இருந்து தமிழகத்துக்கு மின்சாரம் இந்திய அணுசக்தி கழக தலைவர் தகவல்

வியாழக்கிழமை, 21 மே 2015      இந்தியா
Image Unavailable

சென்னை: கூடங்குளம் 2-வது அணு உலையில் இருந்து தமிழகத்துக்கு மின்சாரம் வழங்கப்படும் என இந்திய அணுசக்தி கழக தலைவர் ரத்தன்குமார் சின்கா தெரிவித்தார். இந்திய அணுசக்தி கழக தலைவர் ரத்தன்குமார் சின்கா,  மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-–

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள 2-வது அணுஉலையில் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான ஆயத்த ஏற்பாடுகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. அணுஉலையில் யுரேனியத்தை எரிபொருளாக பயன்படுத்த விரைவில் இந்திய எரிசக்தி ஒழுங்குமுறை வாரியத்தை அணுகுவோம். இதற்கு எப்படியும் 2 மாதங்கள் ஆகும்.

அதையடுத்து உடனடியாக மின் உற்பத்தி தொடங்கப்படும். இந்த அணு உலையில் இருந்து தமிழ்நாட்டுக்கு மின்சாரம் வழங்கப்படும்.
கூடங்குளத்தில் 3-வது அணு உலை புதிதாக அமைப்பதற்கான ஆய்வு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் 3-வது அணுஉலை பணிகள் தொடங்கப்படும். முதல் அணு உலையில் தற்போது 500-ல் இருந்து 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது எதிர்பார்த்த குறியீட்டு அளவை விட குறைவு தான்.

முதல் அணு உலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டால் 1,000 மெகாவாட் அளவு மின்சாரம் உற்பத்தியை தொடமுடியும். முதல் அணு உலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும்போது ஒரு வாரத்தில் இருந்து 2 வாரம் வரை மின்சார உற்பத்தியை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும். கோடை காலத்திற்கு பின் பராமரிப்பு பணிகள் தற்போது கோடை காலமாக இருப்பதால் பராமரிப்பு பணிகள் செய்தால் கடுமையான மின்தட்டுப்பாடு ஏற்பட்டு தமிழகம் பாதிக்கப்படும் என்பதால் கோடை காலத்திற்கு பின்னர் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்து உள்ளது.

எனவே பராமரிப்பு பணி தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. கூடங்குளம் முதல் அணுஉலையில் அவ்வப்போது சிறு சிறு பிரச்சினைகள், தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படுவது உண்மை. அணுஉலையில் இதுபோன்ற கோளாறு ஏற்படுவது சகஜம்தான். கோளாறு ஏற்பட்டதும் அவற்றை நாங்கள் உடனடியாக சரி செய்து விடுகிறோம். அதற்காக அணுஉலையை மூடிவிடவேண்டும் என்பது சரியானதல்ல. இந்தியாவில் உள்ள அனைத்து அணுஉலைகளும் மிகவும் பாதுகாப்பாக உள்ளன. அணுஉலைகளால் கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து