முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் உள்ள வாய்ப்புகளை ஜெர்மனி பயன் படுத்திகொள்ள வேண்டும் டெல்லி வந்துள்ள ஜெர்மனி பாதுகாப்புதுறை அமைச்சர் உர்சலாவிடம் மோடி வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 28 மே 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: இந்திய பாதுகாப்பு உற்பத்தி துறையில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.இந்த வாய்ப்புகளை ஜெர்மனி பயன்படுத்திகொள்ள வேண்டும் என்று டெல்லி வந்துள்ள ஜெர்மனியின் பாதுகாப்புத்துறை அமைச்சர் டாக்டர் உர்சலாவிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார். ஜெர்மனி பாதுகாப்புத்துறை அமைச்சர் டாக்டர் உர்சலா தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அவர் நேற்று பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது மோடி கூறுகையில் ஜெர்மனியை முக்கியத்துவம் வாய்ந்த பொருளாதார கூட்டாளியாக இந்தியா பார்க்கிறது. இந்திய பாதுகாப்பு உற்பத்திதுறையில் நிறைய வாய்ப்புகள் உள்ளன. இந்த வாய்ப்புகளை ஜெர்மனி பயன்படுத்திகொள்ள வேண்டும் என்றார்.

இந்த சந்திப்பின் போது ஜெர்மனி அமைச்சர் கூறுகையில் பாதுகாப்பு  தொழில் நுட்பம் உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு உற்பத்தி ஆகியவற்றில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட ஜெர்மனியும் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல்  இந்தியா வர திட்டமிட்டுள்ளார். அவர் இந்த பயணத்தை மிகுந்த ஆர்வத்துடன் எதிர் நோக்கியுள்ளார் என்றார்.அப்போது மோடி கூறுகையில் ஜெர்மனி அதிபரின் பயணத்தை நானும் மிகுந்த ஆவலுடன் எதிர் நோக்கி இருக்கிறேன் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து