முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காமராஜர் விழாவில் அமித்ஷா பங்கேற்பு: மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தகவல்

திங்கட்கிழமை, 13 ஜூலை 2015      அரசியல்
Image Unavailable

சென்னை, விருதுநகரில் நடைபெறும் காமராஜரின் பிறந்த நாள் விழாவில் பிஜேபி தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யவுள்ளார்.அதற்கான ஏற்பாடுகள் பிஜேபி சார்பில் நடைபெற்று வருகிறது என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தகவல்  தெரிவித்தார். டெல்லி செல்வதற்கு  சென்னை விமான நிலையம் வந்த மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:- பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழாவையொட்டி   விருதுநகரில் மாபெரும் சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிஜேபி தேசிய தலைவர் அமித்ஷா  வருகை தருகிறார்.

காமராஜர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.இந்த விழாவை பிஜேபி சார்பில் சிறப்பாக கொண்டாட உள்ளோம்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டி பெரும்பாலான கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளனவே என்று கேட்டதற்கு,  அவர்கள் உணர்வு எப்படியோ அதே உணர்வுகளில் நாங்களும் இருக்கிறோம்.

அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது  இதுகுறித்து  கருத்து சொல்வது சரியாக இருக்காது. நீதிமன்ற தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம். அன்புமணி ராமதாஸ் கூட்டணிக்கு  தலைமை தாங்குகிறார் என்றும் அவர் தான் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார்என்றும் பாமக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதே என்று கேட்டதற்கு  அது அவர்களின் சொந்த கருத்து. அவர்களின் கட்சி எடுத்த முடிவு. ஆனால் தேர்தல் சமயத்தில் தான் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் .இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து