முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணுமின் உற்பத்தியை அதிகரிக்கிறது சீனா

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜூலை 2015      உலகம்
Image Unavailable

பெய்ஜீங்: சீனாவில் ஹாங்யான்ஹி பகுதியில் புதிய அணு உலை அமைக்கும் பணியை அந்த நாட்டு அரசு தொடங் கியுள்ளது. அதன்படி வரும் 2020-ம் ஆண்டில் உலகின் மூன்றாவது மிகப் பெரிய அணுமின் உற்பத்தி நாடாக சீனா உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவில் தற்போது 23 அணுமின் உற்பத்தி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் 20 கிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. வரும் 2020-ம் ஆண்டில் அணு மின் உற்பத்தியை 58 கிகாவாட்டாக உயர்த்த சீன அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதற்காக நாடு முழுவதும் புதிய அணுமின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் ஹாங்யான்ஹி பகுதியில் புதிய அணு உலையை அமைக்கும் பணியை சீன அரசு அண்மையில் தொடங்கியது. இதையும் சேர்த்து தற்போது 26 அணு உலைகள் புதிதாகக் கட்டப்பட்டு வருகின்றன.

இவை அனைத்தும் பயன் பாட்டுக்கு வரும்போது சீனாவின் ஒட்டுமொத்த அணுமின் உற்பத்தி 58 கிகாவாட்டை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணுமின் உற்பத்தியில் தற்போது அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. பிரான்ஸ், ஜப்பான், ரஷ்யா, தென்கொரியா ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.  வரும் 2016-ம் ஆண்டில் ரஷ்யா, தென் கொரியாவை சீனா பின்னுக்குத் தள்ளிவிடும் என்று தெரிகிறது. அதைத் தொடர்ந்து 2017-ம் ஆண்டில் ஜப்பானை முந்திச் செல்லும் என்று அமெரிக்க ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து