முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை பயணத்தில மனைவி - காதலியை அழைத்துச் செல்லக்கூடாது : கிரிக்கெட் வீரர்களுக்கு அதிரடி உத்தரவு

வெள்ளிக்கிழமை, 31 ஜூலை 2015      விளையாட்டு
Image Unavailable

புது டெல்லி - இலங்கை பயணத்தில் போது இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் தங்களது மனைவி அல்லது காதலியை அழைத்துச் செல்லக்கூடாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வருகிற 4-ம் தேதி இலங்கை புறப்பட்டு செல்கிறது. செப்டம்பர் 1-ம் தேதி வரை இந்திய அணி அங்கு பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

இந்த டெஸ்ட் தொடர் வருகிற 12ம் தேதி தொடங்குகிறது. இலங்கை பயணத்தில் விளையாடும் வீரர்கள் மனைவி, காதலிகளை அழைத்து செல்ல கிரிக்கெட் வாரியம் தடை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இலங்கை செல்லும் பெரும்பாலான வீரர்கள் கடந்த 1 மாதமாக ஓய்வில் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் போதுமான அளவு நேரத்தை செலவழித்து விட்டதால் இலங்கை பயணத்தில் அனுமதி இல்லை என்று கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

ஆசஷ் தொடரில் வர்ணனையாளராக பணியாற்றும் இந்திய அணியின் இயக்குனரான ரவிசாஸ்திரி தாமதமாக செல்வார். பயிற்சி ஆட்டம் முடிந்த பிறகே அவர் இலங்கை செல்வார். இதனால் பயிற்சியாளர் அணி இயக்குனர் இல்லாமல் இந்திய அணி இலங்கை புறப்படும் . வருகிற 6ம் தேதி ரவிசாஸ்திரி அணியுடன் இணைந்து கொள்வார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து