முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேசம் - தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர் சமனில் முடிந்தது

செவ்வாய்க்கிழமை, 4 ஆகஸ்ட் 2015      விளையாட்டு
Image Unavailable

டாக்கா - வங்கதேசம்-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. முதல் டெஸ்ட் போட்டி ஏற்கெனவே டிராவான நிலையில் 2-வது டெஸ்ட் போட்டியும் டிராவில் முடிந்ததால் இரு போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் சமனில் முடிந்தது.  வங்கதேச தலைநகர் டாக்கா வில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 88.1 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பிறகு தொடர் மழை காரணமாக அடுத்த 3 நாள் ஆட்டங்கள் கைவிடப்பட்டன. 5-வது நாளில் மைதானம் ஈரப்பதமாக இருந்ததால் ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில் ஆட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து போட்டி டிராவில் முடிந்தது. 

வழக்கமாக வங்கதேசத்தில் ஜூன் 15-ம் தேதி முதல் மழைக்காலம் தொடங்கிவிடும். அது ஆகஸ்ட் வரை நீடிக்கும். இந்தக் காலங்களில்தான் 80 சதவீத மழைப் பொழிவு இருக்கும். அதுவும் இந்த முறை புயல் காரணமாக தொடர் மழை பெய்து வருவதால் வங்கதேசம்-தென் ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடர் முழுமையாக பாதிக்கப்பட்டது.  இந்தத் தொடர் குறித்து தென் ஆப்பிரிக்க கேப்டன் ஹசிம் ஆம்லா கூறுகையில், நான் விளையாடிய தொடர்களில் இது வழக்கத்துக்கு மாறான ஒன்று ஆகும். 10 நாட்களைக் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 6 நாட்கள் மழையால் பாதிக்கப்படும் என நான் நினைக்கவில்லை என்றார். 

வங்கதேச கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் கூறுகையில், எங்களுடைய கிரிக்கெட் சீசனான அக்டோபர் முதல் மே வரையிலான காலத்தில் பெரிய அணிகளுடன் விளையாட நாங்கள் விரும்புகிறோம். ஆனால் அந்தக் காலங்களில் பெரிய அணிகள் வேறு தொடர்களில் விளையாடிக் கொண்டிருக்கின்றன. பெரிய அணிகளுடன் நிறைய போட்டிகளில் விளையாடும்போது நிறைய கற்றுக்கொள்ள முடியும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்