முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-வது மற்றும் 4-வது சனிக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை: ரிசர்வ் வங்கி அதிகாரபூர்வ அறிவிப்பு

சனிக்கிழமை, 29 ஆகஸ்ட் 2015      இந்தியா
Image Unavailable

மும்பை - மாதந்தோறும் 2-வது மற்றும்  4-வது சனிக்கிழமை அனைத்து வங்கிகளுக்கும் பொது விடுமுறை விடப்படுவதாக ரிசர்வ் வங்கி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.  வங்கி ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று, மாதத்தின் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளை பொது விடுமுறையாக அறிவிக்க மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்னர் ஒப்புதல் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 1-ம் தேதியில் இருந்து இந்த அறிவிப்பு அமலுக்கு வருவதாக ரிசர்வ் வங்கி அதிகாரபூர்வமாக அறிவித்தது. 

அதன்படி, பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், கிராமப்புற வங்கிகள், உள்ளூர் வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளுக்கும் மாதத்தின் 2 ஆவது மற்றும் 4 ஆவது சனிக்கிழமைகள் பொது விடுமுறை விடப்படுகிறது. மேலும், மாதத்தின் மற்ற சனிக்கிழமைகளில், வங்கிகள் முழு வேலைநாளாக செயல்படும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்