முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே பிரசார பயணத்த்தால் எந்த வித மாற்றம் ஏற்படப்போவது இல்லை பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

புதன்கிழமை, 23 செப்டம்பர் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை, “தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தால் தமிழகத்தில் எந்த மாற்றமும் ஏற்படப்போவது இல்லை“ என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழகத்தில் பெரும்பாலான அரசியல் தலைவர்கள் குமரி மாவட்டத்தில் இருந்து தான் பிரசாரத்தை தொடங்குகிறார்கள். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தொடங்கியுள்ள நமக்கு நாமே பிரசார பயணத்தை பாராட்டுகிறேன். ஆனால் அவரது பிரசாரத்தால் தமிழகத்தில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை.

போலீஸ் துணை சூப்பிரண்டு விஷ்ணுபிரியா தற்கொலை விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். விசாரணை செய்வது யார்? என்பது முக்கியமல்ல. இன்னொரு விஷ்ணுபிரியா உருவாகி விடக்கூடாது என்பது தான் முக்கியம்.

இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்