முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடிவேலு மீது தயாரிப்பாளர் புகார்

திங்கட்கிழமை, 28 செப்டம்பர் 2015      சினிமா
Image Unavailable

சென்னை, சிரிப்பு நடிகர் வடிவேலு மீது எலி பட தயாரிப்பாளர் ஜி.சதீஷ்குமார் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளார்.

எலி என்ற படத்தில் தான் நடித்து வருவதாகவும் ராம்குமார் என்பவர் தயாரித்து வருவதாகவும், யுவராஜ் என்பவர் இயக்கி வருவதாகவும் கூறிய வடிவேலு போதிய நிதி இல்லாததால் தன்னை இந்த படத்தை தயாரிக்குமாறு கேட்டுக்கொண்டதாக சதீஷ்குமார் தனது புகாரில் கூறியுள்ளார்.தனக்கு 17 கோடி ரூபாய் வரை செலவானதாகவும் இது பற்றி கேட்டபோது, படம் 32 கோடி ரூபாய் வரைக்கும் விற்பனையாகும். மேலும் தொலைக்காட்சி உரிமையை 15 கோடிக்கு விற்பனை செய்து தருவதாகவும் உறுதி அளித்தார். அவருடைய பேச்சை நம்பி 17 கோடி முதலீடு செய்த பின், படம் சரிவர ஓடாததால் 9 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. மேலும் சில தியேட்டர் உரிமையாளர்கள் போலி கணக்கை தயாரித்து என்னை மிரட்டினார்கள்.

இது குறித்து நடிகர் வடிவேலுவிடம் கூறியபோது அவரும் அவரது மேனேஜரும் என்னை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டினர். இதனிடையே, முன்னாள் திமுக துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி மற்றும் அவரது ஆட்கள் தன்னை மிரட்டி வருவதாகவும் சதீஷ்குமார் புகார் கூறியிருக்கிறார்.எனவே நடிகர் வடிவேலு, முன்னாள் துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி, டாக்டர் தரணி, யுவராஜ், ராம்குமார், பன்னீர், முத்தையா ஆகியோர்மீது நடவடிக்கை எடுத்து என் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் எனக்கு ஏற்பட்ட நஷ்ட தொகையை வடிவேலுவிடமிருந்து பெற்றுத்தருமாறும் சதீஷ்குமார் போலீஸ் கமிஷனரிடம் அளித்துள்ள புகாரில் கூறியிருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்