முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜ் தாக்கரேவுடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு

வெள்ளிக்கிழமை, 30 அக்டோபர் 2015      சினிமா
Image Unavailable

மும்பை - மகாராஷ்டிரா நவநிர்மாண் சபையின் தலைவர் ராஜ் தாக்கரேயை நடிகர் கமல்ஹாசன் நேற்று மும்பையில் அவரது இல்லத்தில் சந்தித்தார். காலை 9.20 மணியளவில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. ராஜ்தாக்கரே மனைவி ஷர்மிளா மற்றும் மகள் ஊர்வசியையும் கமல் சந்தித்தார். இருவரும் சுமார் அரைமணி நேரம் பேசினர். கமலுக்கு பொன்னாடை போர்த்தி, மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்றார் ராஜ்தாக்கரே.

“நாங்கள் பழைய நண்பர்கள். நட்பின் அடிப்படையில் அவரைச் சந்திக்க வந்தேன். கைகுலுக்கினோம்..” என்றார் கமல். மகாராஷ்டிர நவ நிர்மாண் சபையின் செய்தித் தொடர்பாளர் சந்திப் தேஷ்பாண்டே இந்தச் சந்திப்பு பற்றி கூறும்போது, “ராஜ்தாக்கரே, கமலை பொன்னாடை போர்த்தி மலர்ச்செண்டுகள் வரவேற்றார். இதன் பின்னணியில் திட்டம் எதுவும் இல்லை. அவர் தாக்கரேயை பார்க்க வந்தார்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்