முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனா சுரங்கத்தில் வெடி விபத்து: 21 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 22 நவம்பர் 2015      உலகம்
Image Unavailable

பெய்ஜீங்: வடகிழக்குச் சீனாவில் உள்ள ஒரு சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 21 பேர் பலியானார்கள். ஒருவரைக் காணவில்லை என அந்நாட்டின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது. ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தில் ஜிக்ஸி சிடியில் உள்ள அரசுக்குச் சொந்தமான இந்த சுரங்கத்தில் வெள்ளிக்கிழமையன்று தீப்பிடித்தது.22 பேர் சுரங்கத்திற்குள் சிக்கியிருப்பதாக முன்னதாகக் கூறப்பட்டது. இந்தத் தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

சீனாவில் உள்ள சுரங்கங்களில் பல அபாயகரமான சூழலில் இயங்கிவருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் அங்கு உள்ள சுரங்கங்களில் ஏற்படும் விபத்துகளில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்படுகின்றனர். ஆனால், சமீப காலமாக பாதுகாப்பு விதிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டுமென அதிகாரிகள் வலியுறுத்த ஆரம்பித்திருப்பதால் சுரங்க பாதுகாப்பு என்பது மேம்பட்டுவருகிறது.

தீ விபத்து ஏற்பட்டபோது சுரங்கத்தில் 38 தொழிலாளர்கள் பணியாற்றிவந்தனர். அவர்களில் 16 பேர் தப்பித்துவெளியில் வந்துவிட்டனர் என ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்போது தீ கட்டுக்குள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்