எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : வணிகவரித் துறையின் மூலம் 179 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வணிகர்களின் தேவைகளை மையப்படுத்தியும், துறையின் வரிநிர்வாகத்தை மேம்படுத்தவும், வளர்ந்து வரும் தகவல் தொழில் நுட்பத்தின் உதவியுடன், துறையின் முழுமையான கணினி வழி தீர்வு திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா துவக்கிவைத்தார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வணிகவரி மற்றும் பதிவுத் துறைசார்பில் கோயம்புத்தூரில் 1 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பதிவுத் துறை அலுவலக வளாகக் கட்டடத்தை காணொலிக் காட்சமூலமாக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். மேலும், 20 கோடியே 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டடங்கள், வணிகவரி அலுவலகக் கட்டடங்கள், வணிகவரி சோதனைச் சாவடி கட்டடம், சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள் ஆகியவற்றை திறந்து வைத்து, 179 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான ஒருமுகப்படுத்தப்பட்ட கணினிவழி தீர்வு திட்டத்தை துவக்கி வைத்தார்.
வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் பதிவுத் துறை அலுவலகங்களில், பதிவு ஆவணங்களைப் பராமரிப்பதற்கும், பணியாளர்கள் திறம்படப் பணியாற்றுவதற்கும், போதிய இடவசதி இல்லாததை கருத்தில் கொண்டும், பொதுமக்கள் அதிகம் வந்துசெல்கின்ற சார்பதிவாளர் அலுவலகங்களில் பொதுமக்களுக்கு தக்க வசதிகள் அளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தைக் கருதியும், சிறிய இடங்களுக்கு அதிக அளவில்வாடகை தர வேண்டிய நிலையினை தவிர்த்திடவும், பதிவுத் துறையில் வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு சொந்தகட்டடங்கள் கட்டும் திட்டத்தினை முதலமைச்சர்ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது அந்த வகையில், கோயம்புத்தூரில் 13,558 சதுர அடி கட்டட பரப்பளவில், 1 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், தரை மற்றும் இரண்டு தளங்களுடன், கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பதிவுத் துறை அலுவலக வளாகக் கட்டடத்தை காணொலிக் காட்சிமூலமாக முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
மேலும், திண்டுக்கல்லில் 2 கோடியே 58 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பதிவுத் துறை வளாகக் கட்டடம்; திண்டுக்கல் மாவட்டம் - நத்தம், வத்தலக்குண்டு மற்றும் சாணார்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம் - கந்தர்வகோட்டை, தேனி மாவட்டம் -தேவாரம், இராமநாதபுரம் மாவட்டம் - முதுகுளத்தூர் மற்றும் தொண்டி, திருப்பூர் மாவட்டம்நல்லூர், விருதுநகர் மாவட்டம் - காரியாப்பட்டி, சிவகங்கை மாவட்டம் -மதகுபட்டி, சேலம் மாவட்டம் - தம்மம்பட்டி மற்றும் சேலம் மேற்கு 3 எண் இணை சார்பதிவாளர் அலுவலகம்; தருமபுரி மாவட்டம் - மொரப்பூர், கிருஷ்ணகிரி மாவட்டம் - சூளகிரி, வேப்பனப்பள்ளி மற்றும் பாரூர், கடலூர் மாவட்டம் - நல்லூர் மற்றும் சிறுபாக்கம், திருவண்ணாமலை மாவட்டம் - கண்ணமங்கலம், திருவள்ளூர் மாவட்டம் -திருவாலங்காடு, தஞ்சாவூர் மாவட்டம் – இரண்டாம் புலிக்காடு ஆகிய இடங்களில்12 கோடியே 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள்; கன்னியாகுமரி மாவட்டம் - வாள்வச்சகோஷ்டம் மற்றும் அரியலூர் மாவட்டம் -அரியலூர் ஆகிய இடங்களில் 2 கோடியே 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டடங்கள்; வேலூர் மாவட்டம் - ஆற்காடு மற்றும் விழுப்புரம் மாவட்டம் - கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் 1 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வணிகவரி அலுவலகக் கட்டடங்கள்; திருநெல்வேலியில் 1 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வணிகவரித் துறை பணியாளர் பயிற்சி நிலையக் கட்டடம்; கோயம்புத்தூர் மாவட்டம் -மீனாட்சிபுரத்தில் 29 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வணிகவரி சோதனைச் சாவடி கட்டடம்; என மொத்தம் 21 கோடியே 76 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வணிகவரி மற்றும் பதிவுத் துறை கட்டடங்களை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
வணிகவரித் துறையில் மின்னணு ஆளுகை முறைகளைப் புகுத்துவதன் அவசியத்தை கருத்தில் கொண்டு, இத்துறையில் முழுமையாக மின்னணு ஆளுகை முறைகளைக் கொண்டு வர ஏதுவாக மென்பொருள், வன்பொருள் ஆகியவற்றின் தேவைகளை முழுமையாக நிறைவு செய்திடும் நோக்கிலும், இதன் மூலம் வரி நிர்வாகத்தில்உள்ள சேவையின் தரம் கணிசமான அளவு உயர்வதோடு வரி ஏய்ப்பு தடுக்கப்பட்டு வரி செலுத்துவோருக்குத் தேவையான சேவை குறுக்கீடின்றி எளிதாகக் கிடைக்க வழிவகைகள் செய்யப்படும் என்று 2011-2012ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, வணிகவரித் துறையின் மூலம் 179 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வணிகர்களின் தேவைகளை மையப்படுத்தியும், துறையின் வரிநிர்வாகத்தை மேம்படுத்தவும், வளர்ந்து வரும் தகவல் தொழில் நுட்பத்தின் உதவியுடன்,து றையின் முழுமையான கணினிவழி தீர்வு திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.
இத்திட்டத்தின் மூலம், வணிகவரித் துறையில் உள்ள 554 அலுவலகங்களுக்குதேவையான கணினி வசதிகளுடன் கூடிய இரட்டை இணையதள தொடர்பு வசதிகள் கொடுக்கப்பட்டு, மாநில தகவல் தரவு மையத்தில் இணைக்கப்பட்டுள்ளது. துறை சார்ந்த அனைத்து மென்பொருள்களும் டாடா கன்சல்டன்சி நிறுவனத்தின் மூலமாக நிறுவப்பட்டு,பதிவுச் சான்றிதழ், மாதாந்திர நமூனாக்கள், ஊ-படிவம் மற்றும் இதரபடிவங்கள், சோதனைச்சாவடிச் சேவைகள் மற்றும் இதர சேவைகளை இணையதளம் மூலமாக அறிமுகப்படுத்தப்படும். மேலும், வணிகர்களின் அனைத்து சேவைகளுக்கான விண்ணப்பம், வணிகவரித்துறை கேட்கும் கூடுதல் விவரங்களுடன் பதில், இறுதி ஆணைகள், துறை அனுப்பும் அறிவிப்புகள் போன்ற அனைத்தும் இணையதளம் மூலமாகவே கிடைக்கும்.
இத்திட்டத்தின் மூலம், எல்லா சேவைகளும் கணினிவழியாக அவர்கள் இருப்பிடத்திலேயே வழங்கப்படுவதால், வணிகர்கள் வணிகவரித்துறை அலுவலகங்களுக்கு நேரடியாக செல்லவேண்டியது தவிர்க்கப்படும். வணிகர்கள் இணையதள சேவை மூலம் வரித்திருப்புகை பெற வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வாகனங்கள் சோதனைச் சாவடியில் தடையின்றி செல்ல ஏதுவாக, அனுப்பப்படும் பொருட்கள் பற்றிய விவரங்களை முன்கூட்டியே வலைதளத்தில் பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, 24 ஒ 7 என்ற அடிப்படையில் இயங்கும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 103 6751-ல் மாநில சேவை மையம் செயல்படும். இதன் மூலம், வணிகர்கள் எந்நேரமும் இச்சேவைகள் குறித்த விவரங்களையும், ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளலாம். வணிகவரித் துறையின் செயல்பாடுகள் தடையின்றி நடைபெறுவதற்கும், வரிவசூல் சிறப்பாக நடைபெறவும், 44 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட 8 ஜீப்புகளை, வணிகவரித் துறை செயலாக்கப் பிரிவின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர்.எம்.சி.சம்பத், தலைமைச் செயலாளர். ஞானதேசிகன், தமிழ்நாடு அரசுஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை முதன்மைச் செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) முகமது நசிமுத்தின், வணிகவரி ஆணையர்/முதன்மைச் செயலாளர்.எஸ்.கே. பிரபாகர்., பதிவுத்துறை தலைவர். முருகய்யா,., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 4 hours ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை3 days 6 hours ago |
ஆனியன்ப்ரை6 days 5 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 3 days ago |
-
மகளிர் இலவச பேருந்து பயணத்தால் தெலங்கானாவில் மெட்ரோ ரெயில் சேவை கடும் பாதிப்பு
13 May 2024ஐதராபாத், தெலங்கானாவில் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக எல் & டி நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
இ.பி.எஸ். தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது எப்படி? தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்
13 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற தேர்தலில் இபிஎஸ் தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்தல் ஆணையம
-
இடைக்கால ஜாமின் கோரிய ஹேமந்த் சோரன்: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
13 May 2024புதுடெல்லி, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன், தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய வாய்ப
-
4-ம் கட்ட பார்லி. தேர்தல்: 62.84 சதவீத வாக்குப்பதிவு
13 May 2024புதுடெல்லி : 4-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 62.84 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
சென்னையில் 50-வது வெற்றி: ரசிகர்களுடன் கொண்டாட்டம்
13 May 2024சென்னை : சென்னையில் 50-வது வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடியது சி.எஸ்.கே. வீரர்கள்.
சென்னை வெற்றி...
-
டெல்லியை வீழ்த்தியது பெங்களூரு
13 May 2024பெங்களூரு : டெல்லி அணிக்கு எதிராக பவுலிங்கில் மிரட்டிய பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது.
-
பெண்ணை கடத்திய வழக்கு: ரேவண்ணாவுக்கு ஜாமின் வழங்கியது பெங்களூரு கோர்ட்
13 May 2024பெங்களூரு, பெண்ணை கடத்திய வழக்கில் கர்நாடக எம்.எல்.ஏ ரேவண்ணாவுக்கு பெங்களூரு நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.
-
அடுத்த சுற்றில் போபண்ணா ஜோடி
13 May 2024களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.
-
வெறுப்புணர்வை தூண்டியதாக புகார்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது டெல்லி ஐகோர்ட்
13 May 2024புதுடெல்லி, தேர்தல் பிரசாரத்தின் போது மத வெறு்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக பிரதமர் மோடி மீது வழக்கு பதிவு செய்யக் கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய
-
பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்குமா டெல்லி அணி? - லக்னோவை இன்று எதிர்கொள்கிறது
13 May 2024புதுடெல்லி : 'பிளே ஆப்' சுற்று வாய்ப்பில் டெல்லி அணி நீடிக்குமா? என்ற நிலையில் இன்று லக்னோ அணியை எதிர்கொள்கிறது.
-
நடிகர் கவுண்டமணிக்கு எதிரான கட்டுமான நிறுவனத்தின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
14 May 2024புதுடெல்லி : நடிகர் கவுண்டமணிக்கு எதிரான கட்டுமான நிறுவனத்தின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது..
-
பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழ்நாட்டில் தேர்ச்சி விகிதம் 91.17 சதவீதம் : கோவை மாவட்டம் முதலிடம்
14 May 2024சென்னை : தமிழகத்தில் பிளஸ் -1 தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில் தமிழகத்தில் 91.17 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர்.
-
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதனுக்கு மற்றொரு டாக்டர் பட்டம்
14 May 2024வேலூர் : வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதனுக்கு அமெரிக்க நாட்டில் உள்ள நியூயார்க் மாநில பல்கலைக்கழகம் (பிங்ஹாம்டன் பல்கலைக்கழகம்)
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-05-2024.
14 May 2024 -
தயாநிதி தொடர்ந்த அவதூறு வழக்கில் எடப்பாடி ஆஜர் : விசாரணை ஜூன் 27-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
14 May 2024சென்னை : தயாநிதி மாறன் தொடர்ந்து அவதூறு வழக்கில் சென்னை எழும்பூர் கோர்ட்டில் அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேரில் ஆஜரானார்.
-
மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை ஜூன் மாதம் அமல்
14 May 2024சென்னை : சென்னையில் மாநகர பேருந்து, புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் என்று அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறை ஜூன் மாதம் அமலுக்கு வரவுள்ளது.
-
அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
14 May 2024சென்னை : அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
அரசு மருத்துவமனையில் செலுத்தும் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி சான்றுதான் விமான நிலையத்தில் ஏற்கப்படும்: அமைச்சர் மா.சுப்ரமணியன்
14 May 2024சென்னை : மஞ்சள் காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனையில் செலுத்தும் தடுப்பூசிக்கான சான்றுதான் விமான நிலையத்தில் ஏற்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.&nb
-
நாகை எம்.பி. செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
14 May 2024சென்னை : நாகை எம்.பி. செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
-
தனிச்செயலரின் தந்தை மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்
14 May 2024நாமக்கல் : தமிழக முதல்வரின் தனிச்செயலாளர் தந்தை உடல் நல குறைவால் உயிரிழந்தார்.
-
ஈரானுடன் சபஹர் துறைமுக ஒப்பந்தம்: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
14 May 2024வாஷிங்டன் : ஈரானுடன் சபஹர் துறைமுக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
சிங்கப்பூரில் சட்டத்துறை துணை அமைச்சராக இந்திய வம்சாவளியை சேர்ந்த முரளி பிள்ளை நியமனம்
14 May 2024சிங்கப்பூர் : சிங்கப்பூரில் சட்டம் மற்றும் போக்குவரத்து துறை துணை அமைச்சராக இந்தியா வம்சாவளியை சேர்ந்தவரான முரளி பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார்.
-
கென்யாவில் வெள்ளம்: 40 டன் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்த இந்தியா
14 May 2024புதுடெல்லி : கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கென்யாவுக்கு 40 டன் மருந்து பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், மீட்பு உபகரணங்கள், அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட நிவ
-
சுவாதி மாலிவால் விவகாரம்: டெல்லி மாநகராட்சி கூட்டத்தில் பா.ஜ.க. கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்
14 May 2024புதுடெல்லி : டெல்லி மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. அப்போது ஆம் ஆத்மி எம்.பி.
-
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தொடரும் போராட்டம்: பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி
14 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தொடரும் போராட்டத்தின் விளைவாக பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.