முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உடல்நிலை குறைவால் தேர்தலில் போட்டியிடவில்லை: பின்வாங்கினார் மலையாள நடிகை லலிதா

திங்கட்கிழமை, 21 மார்ச் 2016      சினிமா
Image Unavailable

திருவனந்தபுரம், கேரள சட்டசபைத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என, மலையாள நடிகை கேபிஏசி லலிதா அறிவித்திருக்கிறார்.

தமிழ்நாடு, கேரளா உட்பட 5 மாநில சட்டசபைத் தேர்தல் வருகின்ற மே மாதம் 16 ம் தேதி நடைபெறுகிறது.தமிழ்நாடு போன்று கேரளா மாநிலத்திலும் சட்டமன்றத் தேர்தல் களைகட்டி வருகிறது. இந்நிலையில் நடிகை கேபிஏசி லலிதா தான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்திருக்கிறார்.
கேபிஏசி லலிதா கேரள மாநில சட்டசபைத் தேர்தலில், சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்திருக்கிறார் என கடந்த வாரம் செய்திகள் வெளியாகின. தேர்தலில் போட்டியிடுவதாகக் கூறிய லலிதாவிற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆதரவை வெளிப்படையாக அளித்தது.

இந்நிலையில் இந்தத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என லலிதா தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர், என்னுடைய உடல்நிலை மற்றும் சினிமா காரணமாக இந்தத் தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. என்னுடைய இந்த முடிவை நான் ஏற்கனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனிடம் தெரிவித்து விட்டேன், என்று கூறியிருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்