எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் நானே நிற்பதாக கருதி அ.தி.மு.க.வினர் முழு மூச்சுடன் வெற்றிக்கு அயராது பாடுபட வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா தொண்டர்களுக்கு எழுதிய மடலில் கூறியுள்ளார். எல்லோருக்கும் சமவாய்ப்பு வழங்கும் ஜனநாயகம் மலர வேண்டும், அதற்காக நாம் வெற்றிகளை குவித்தாக வேண்டும் என்று அ.தி.மு.க.,வினருக்கு முதல்வர் ஜெயலலிதா தனது மடல் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறுத்து முதல்வர் ஜெயலலிதா தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதம் வருமாறு:-
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில், தமிழக வாக்காளப் பெருமக்களையும், என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளாகிய உங்களையும் சந்தித்து வருகின்ற மகிழ்ச்சியான தருணத்தில், இந்த மடல் வழியாகவும் உங்களோடு சில கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். எந்நாளும் தங்கள் குடும்பத்தின் வசமே ஆட்சி அதிகாரம் அனைத்தும் வேண்டும் என்று துடிக்கின்ற தீய சக்தியிடமிருந்தும், அதன் நச்சு விழுதுகளிடமிருந்தும் தமிழகத்தைக் காப்பாற்றவும் ஏழை, எளிய, உழைக்கும் மக்களுக்கு அதிகாரத்தில் பங்களிக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் புரட்சிகர அரசியல் பயணத்தைத் தொடர்ந்து நிலைநாட்டவும், நடைபெறுகின்ற தேர்தல்தான் இந்த சட்டமன்றப் பொதுத் தேர்தல் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
குடும்ப ஆட்சி முறை மக்களாட்சித் தத்துவத்திற்கு முற்றிலும் விரோதமானது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சியையும், அதிகாரத்தையும், அரசியல் செல்வாக்கையும் முழுமையாக தங்களுக்குள்ளேயே வைத்திருப்பது ``அனைவருக்கும் சம வாய்ப்பு'' என்ற மக்களாட்சித் தத்துவத்தின் அடித்தளத்தை சின்னாபின்னப் படுத்திவிடும். வாரிசு அரசியல் முறையை தமிழகத்தில் இருந்து முற்றிலுமாக ஒழித்திட வேண்டும். ஏனென்றால், அரசியல் அதிகாரத்தின் மீது கொண்ட பேராசையைத் தவிர, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வரத் துடிப்பதற்கு வேறு எந்தக் காரணமும் இல்லை. புதிது புதிதாக ஆயிரம் ஆயிரம் சிந்தனைகள் மலர வேண்டும். அவை கோடான கோடி உள்ளங்களில் இருந்து தோன்றி வர வேண்டும். அதன் மூலம் மக்களுக்காக, மக்களால், மக்களே நடத்துகின்ற ஜனநாயக ஆட்சி தொடர வேண்டும்.
சுயநல சிந்தனைகளால் நிரம்பிய தீய சக்தியை அடியோடு ஒழிக்க எம்.ஜி.ஆர். கண்ட இயக்கம் தான் ``அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்''. எம்.ஜி.ஆ-ரிடம் அரசியல் பாடம் பயின்ற நான், மக்களாட்சிக் கொள்கையின் அடிப்படையான ஏழைகளுக்கு வாழ்வு, எளியோருக்கு பாதுகாப்பு, எல்லோருக்கும் சம வாய்ப்பு, ஏற்றம் பெற்ற சமுதாயம் என்ற சிந்தனையில் உறுதியாக இருக்கிறேன். எனது இந்த உறுதிப்பாட்டின் காரணமாகத் தான், எல்லோரும் பயன்பெறும் வகையில் எண்ணற்ற சாதனைகளை எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு தொடர்ந்து நிகழ்த்தி வருகிறது. அவை அனைத்தும் வரலாற்றில் நிலைபெறும் சிறப்புடையவை. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் தற்போதைக்கு மட்டுமல்ல, பல தலைமுறைகளுக்கு செழிக்கும் வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறேன்.
எல்லோருக்கும் விலையில்லா அரிசி, குடும்பப் பெண்களின் வேலைப் பளுவை குறைப்பதற்கு மின் சாதனங்கள், உழைக்கும் மக்களின் பசிப்பிணி போக்க அம்மா உணவகங்கள் போன்ற உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்யும் சாதனைகள் மட்டுமல்ல, எல்லோரும் தரமான கல்வி பெற்று, எல்லோரும் தகவல் தொழில்நுட்ப அறிவியலின் வளர்ச்சியை பயன்படுத்திக் கொண்டு தங்கள் வாழ்க்கைக் கனவுகளை நனவாக்கிக் கொள்ள வாய்ப்பளிக்கும் தொலை நோக்குத் திட்டங்கள் உள்ளிட்ட முன்னோடியான பல திட்டங்களை நான் நிறைவேற்றி வருகிறேன். இந்தத் திட்டங்கள் எல்லாம் தொடர வேண்டும். எல்லோருக்கும் சம வாய்ப்பு அளிக்கின்ற ஜனநாயகப் பண்பு வளர வேண்டும். அதற்கு, நாம் வெற்றி மேல் வெற்றி குவித்தாக வேண்டும்.
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் நியமிக்கப்பட்டுள்ள சட்டமன்றத் தொகுதிக் குழு, ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிக் குழு, மண்டலக் குழு பூத் கமிட்டி ஆகியவற்றின் உறுப்பினர்களும், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களை ஒவ்வொரு நாளும் சந்தித்து, உங்கள் அன்புச் சகோதரியின் ஆட்சியில் தமிழக மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் செய்யப்பட்டிருக்கும் நற்செயல்கள் பலவற்றையும் விளக்கிக் கூறுங்கள்.
மேற்சொன்ன பணிகளை நிறைவேற்ற, தொகுதிக் குழு பொறுப்பாளர்களும், சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் அவரவர் சார்ந்த சட்டமன்றத் தொகுதிகளில் பணியாற்றுவது மிகவும் அவசியம். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளைத் தவிர, மற்ற தொகுதிகளில் பணியாற்றுவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள் கண்ட வெற்றிச் சின்னமாம் ``இரட்டை இலை'' சின்னம் இந்தத் தேர்தல் களத்தில் போட்டியிடுகிறது. 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மகத்தான வெற்றி பெற்று, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் புகழுக்கு புகழ் சேர்க்கும் வண்ணம், அவருடைய பிறந்த நாள் நூற்றாண்டில் சரித்திர சாதனை படைத்திட வேண்டும். எந்தச் சூழலிலும், எந்த நேரத்திலும் நம்மை விட நம்முடைய இயக்கம் எந்தச் சூழலிலும், எந்த நேரத்திலும் நம்மை விட நம்முடைய இயக்கம் பெரிது, நமது இயக்கத்தின் வெற்றியே நம்முடைய வெற்றி என்ற கொள்கை வேட்கையோடு என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் பணியாற்றிட வேண்டும் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில், 234 தொகுதிகளிலும் உங்கள் அன்புச் சகோதரியாகிய நானே வேட்பாளராகக் களத்தில் நிற்கிறேன் என்ற உணர்வோடு நீங்கள் முழு மூச்சுடன் தேர்தல் பணியாற்றிட வேண்டும். தமிழக மக்களின் நல்வாழ்வுக்காக அல்லும் பகலும் அயராது உழைக்கிறேன். எப்பொழுதும் தமிழக மக்களின் உயர்வு பற்றியே சிந்திக்கிறேன். தமிழகத்தில் வாழுகின்ற ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சியான வாழ்வு அமைந்திட இன்னும் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை திட்டமிட்ட வண்ணமே எனது அரசியல் பயணம் தொடர்கிறது.
எனது அன்புக் கட்டளையை ஏற்று, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் கடமை உணர்வோடு தேர்தல் பணியாற்றி, கழக வேட்பாளர்களின் வெற்றிக்கு அல்லும் பகலும் அயராது உழைத்திட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்! இப்படை தோற்கின் எப்படை வெல்லும்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது மடலில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை2 days 6 hours ago |
ஆனியன்ப்ரை5 days 5 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 2 days ago |
-
தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் : ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
12 May 2024சென்னை : தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் என்று தெரிவித்துள்ள ஓ.பி.எஸ். மூன்று ஆண்டு கால தி.மு.க.
-
எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும் பேசுவதை நிறுத்த மாட்டேன் : அண்ணாமலை திட்டவட்டம்
12 May 2024சென்னை : அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவரை பற்றி அவதுறாக பேசிய புகாரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
கன்னட டி.வி. நடிகை விபத்தில் உயிரிழப்பு
12 May 2024பெங்களூரு : பிரபல தொலைக்காட்சி நடிகை பவித்ரா ஜெயராம் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
-
பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பம்
12 May 2024சென்னை : பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
-
ராஜஸ்தானில் ரூ.107 கோடி போதைப்பொருள் பறிமுதல் : மும்பை போலீசார் நடவடிக்கை
12 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ரூ.107 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை மும்பை போலீசார் பறிமுதல் செய்தனர். 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
மேற்குவங்க கவர்னரை ராஜினாமா செய்ய சொல்லாதது ஏன்? - பிரதமர் மோடிக்கு மம்தா கேள்வி
12 May 2024கொல்கத்தா : மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் மீது பாலியல் புகார் இருந்தும், பிரதமர் மோடி ஏன் அவரை ராஜினாமா செய்ய சொல்லவில்லை என முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ள
-
1,500 மீட்டர் ஓட்ட பந்தயம்: தடகள வீராங்கனை தீக்சா தேசிய சாதனை
12 May 2024லாஸ் ஏஞ்சல்ஸ் : இந்தியாவுக்காக 2021-ம் ஆண்டில் ஹார்மிலன் பெய்ன்ஸ் 4 நிமிடங்கள் 5.39 வினாடிகளில் பந்தய தொலைவை கடந்து படைத்திருந்த தேசிய சாதனையை தீக்சா முறியடித்து உள்ளார
-
கிராண்ட் செஸ் டூர் தொடர்: கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா
12 May 2024வார்சா : கிராண்ட் செஸ் டூர் தொடரில் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் தமிழகத்தின் பிரக்ஞானந்தா.
3 பேர் பங்கேற்பு...
-
சோப்ராவுக்கு வெள்ளிப்பதக்கம்
12 May 2024கத்தார் தலைநகர் தோகாவில் 'டைமண்ட் லீக்' போட்டி நடைபெறுகிறது. இதன் ஈட்டி எறிதல் போட்டியில் உலகின் முன்னணி வீரர்கள் 10 பேர் பங்கேற்றனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-05-2024.
13 May 2024 -
ராஜஸ்தான் அணியை எளிதில் வீழ்த்தி சென்னை அபார வெற்றி : பிளே ஆப் சுற்றில் நீடிக்கிறது
12 May 2024சென்னை : ராஜஸ்தானை வீழ்த்தி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றதை அடுத்து பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் தொடர்ந்து நீடிக்கிறது.
-
உயிர் தமிழுக்கு விமர்சனம்
13 May 2024கேபிள் டிவி தொழில் செய்து வரும் நாயகன் அமீர், நாயகி சாந்தினி ஸ்ரீதரனை கண்டதும் காதல் கொள்கிறார்.
-
ஹரா திரைப்பட இசை வெளியீடு
13 May 2024கோயம்புத்தூர் எஸ் பி மோகன்ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஶ்ரீ விஜய் தயாரித்துள்ள 'ஹரா' திரைப்படத்தை ஜூன் 7ம் தேதி தமிழகம் எங்கும் எல்மா பிக்சர்ஸ் வெளியிடுகிறது
-
"குற்றம் புதிது" பட தொடக்க விழா
13 May 2024GKR CINE ARTS என்ற பட நிறுவனம் சார்பில் DR.S.கார்த்திகேயன் , தருண் கார்த்திகேயன் தயாரிக்கும் படம் " குற்றம் புதிது "
-
ஹிட்லிஸ்ட் இசை வெளியீடு
13 May 2024இயக்குனர் மற்றும் நடிகர் கே.எஸ்.ரவிக்குமாரின் RK Celluloids நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவாகிறது 'ஹிட்லிஸ்ட்' திரைப்படம்.
-
தமிழகத்தில் 8.25 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது : செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப ஏற்பாடு
13 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
இன்டியா கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
13 May 2024சென்னை, இன்டியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
-
அமெரிக்க நகைச்சுவை தொடர் Garfield
13 May 2024ஒரு சுட்டியான பூனைக்குட்டியின் பெயர்!
தனது எஜமானின் வீட்டில் வாழும் Garfield க்கு, Odie ஒரு நாய் , உற்ற நண்பன்!
-
சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் : கோவை குற்றவியல் கோர்ட் அனுமதி
13 May 2024கோவை : சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
ரஷ்யா மீது உக்ரைன் வான்வழி தாக்குதல்: 19 பேர் உயிரிழப்பு
13 May 2024மாஸ்கோ, ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய வான் தாக்குதலில் 10 தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து 15 பேரும், அதன்பின்னர் நடந்த தாக்குதலில் 4 பேரும் இறந்துள்ளன
-
இந்திய அளித்த போர் விமானங்களை இயக்கும் திறன் எங்களுக்கு இல்லை : மாலத்தீவு அமைச்சர் தகவல்
13 May 2024மாலே : இந்திய போர் விமானத்தை இயக்கும் திறன் எங்கள் ராணுவத்திற்கு இல்லை என்று மாலத்தீவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
ரூ.188 கோடி கொள்ளை வழக்கு: மேலும் ஒரு இந்திய வம்சாவளி நபர் கனடா போலீசாரால் கைது
13 May 2024ஒட்டாவா : கனடாவில் தங்கக் கட்டிகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
தமிழகத்தில் கஞ்சா வணிகத்தை தடுக்க நேர்மையாக செயல்பட வேண்டும்: அன்புமணி ராமதாஸ் அறிக்கை
13 May 2024சென்னை, கஞ்சா கடத்தல் வழக்கில் குற்றவாளி தப்புவதற்கு காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
-
ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியல்
13 May 2024 -
மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்: தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
13 May 2024சென்னை, மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதமடைவதாக விவசாயிகள் வேதனைப்படுகின்றனர் என்று தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.