முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி வில்லியர்சை விட மிகச்சிறந்த வீரர் கோலி : தென் ஆப்பிரிக்க வீரர் கிப்ஸ் புகழாரம்

புதன்கிழமை, 18 மே 2016      விளையாட்டு
Image Unavailable

சென்னை  - டி வில்லியர்சை விட மிகச்சிறந்த வீரர் கோலி என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கிப்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார். இந்திய அணியின் ரன் குவிக்கும் எந்திரமாக செயல்பட்டு வரும் விராட் கோலி, நடப்பு ஐபிஎல் தொடரிலும் அசத்தி வருகிறார். தற்போது வரை 3 சதங்கள் அடித்துள்ள விராட் கோலி, உச்ச கட்ட பார்மில் உள்ளார். அதேபோல், தென் ஆப்பிரிக்க வீரர் டி வில்லியர்சும் உலகின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக வலம் வருகிறார். தற்போதைய தலைமுறையின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்கள் என்று விராட் கோலியும், டி வில்லியர்சும் கிரிக்கெட் விமர்சகர்களால் புகழப்பட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட  தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரரான கிப்ஸ் , டி வில்லியர்சை விட விராட் கோலி மிகச்சிறந்த வீரர் என்று தெரிவித்துள்ளார்.  இது குறித்து கிப்ஸ் கூறியதாவது:-  விராட் கோலியும், டி வில்லியர்சும் நெருக்கடியான நேரத்திலும் சிறப்பாக விளையாடுகின்றனர். இருந்த போதிலும் பெரிய போட்டிகளில் டி வில்லியர்சை விட விராட் கோலி மிகச்சிறந்த ஆட்டத்திறனை வெளிப்படுத்துகிறார் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்