எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : முதலமைச்சராக பதவி ஏற்க வந்த ஜெயலலிதாவுக்கு மக்கள் வழிநெடுக வெள்ளமென திரண்டிருந்து மகிழ்ச்சி பொங்க வரவேற்பு அளித்தார்கள். சட்டமன்ற தேர்தலில் தனித்து நின்று போட்டியிட்டு 134 தொகுதிகளில் அதிமுக மகத்தான வெற்றி பெற்றது. அதிமுக பொதுசெயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா , ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றார்.
1984–ம் ஆண்டுக்குப்பின் அதாவது 32 ஆண்டுகளுக்குப்பின் ஆட்சியில் இருந்த ஒரு கட்சி தொடர்ச்சியாக அடுத்து ஆட்சியை பிடித்த சரித்திர சாதனையை ஜெயலலிதா படைத்திருக்கிறார். அதே போன்று இதுவரை 6–வது முறையாக யாரும் முதலமைச்சராக பதவி ஏற்றது இல்லை. அந்த வரலாற்று சாதனையையும் ஜெயலலிதா பிடித்திருக்கிறார்.
ஜெயலலிதா பதவி ஏற்ற நிகழ்ச்சி சென்னை கடற்கரை சாலையில் உள்ள பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவி ஏற்கும் நிகழ்ச்சியை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்களும் தொண்டர் களும் சென்னையில் குவிந்தனர். முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் தோட்ட இல்லத்திலிருந்து பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் வரை சாலையின் இருபக்கமும் மக்கள் வெள்ளமென திரண்டிருந்தனர்.
ஜெயலலிதா வந்தபோது வாழ்த்து கோஷம் எழுப்பியும் கொடிகளை அசைத்தும் உற்சாகமாக வரவேற்றார்கள். மகளிர் அணியினர் மலர் தூவியும், பூரண கும்ப மரியாதை அளித்தும் முதலமைச்சரை வரவேற்றார்கள். பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் அருகே கடற்கரை சாலையில் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் இருந்தது. மக்கள் வெள்ளத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் மெல்ல ஊர்ந்து வந்தது. மக்களின் எழுச்சி வரவேற்பை ஜெயலலிதா கைகூப்பியும், கை அசைத்தும் பெற்றுக் கொண்டார்.
படுகர் இன மக்கள் பாரம்பரிய உடை அணிந்து நடனமாடி ஜெயலலிதாவை வரவேற்றார்கள். செண்டை மேளம், நாதஸ்வரம், தாரை தப்பட்டை, பேண்டு வாத்தியம் முழங்க கொம்பு ஊதியும் மற்றும் பல்வேறு இசை கருவிகள் இசைக்க ஜெயலலிதாவுக்கு எழுச்சி வரவேற்பு அளிக்கப்பட்டது.
பதவி ஏற்பு விழா மண்டபம் நடந்த வளாகம் மக்கள் வெள்ளமாக காட்சி அளித்தது. பதவி ஏற்பு விழா நிகழ்ச்சியை காண பல்வேறு இடங்களில் பெரிய எல்.இ.டி. திரை வைக்கப்பட்டு அதில் ஒளிபரப்பப்பட்டது.
தமிழகம் முழுவதும் ஒளிபரப்பு
முதலமைச்சர் ஜெயலலிதாவின் பதவி ஏற்பு விழா நிகழ்ச்சிகள் தமிழகம் முழுவதும் நவீன மின்னணு வீடியோ வேன் மூலம் பெரிய திரையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எங்கும் எழுச்சி, உற்சாகம் காணப்பட்டது. 6–வது முறையாக முதலமைச்சர் ஜெயலலிதா பதவி ஏற்றதை அடுத்து தமிழகம் முழுவதும் மக்கள் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து பதவி ஏற்பு விழா நடந்த மண்டபம் வரை வழிநெடுக அ. தி.மு.க. கொடிகள் கட்டப்பட்டிருந்தது. எங்கும் விழாக்கோலம் பூண்டிருந்தது.
கோட்டையில் ஜெயலலிதா
முதலமைச்சர் ஜெயலலிதா பதவி எற்றதும் சென்னை தலைமை செயலகத்துக்கு வந்தார். அங்கு உயர் அதிகாரிகள், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோர் மலர்கொத்து வழங்கி வரவேற்றார்கள். பின்னர் முதலமைச்சர் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதன்பின் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். தலைமைச் செயலக நுழைவு வாயிலில் நாகதேவதை அம்மன் ஆலயம் உள்ளது. அங்கு சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் நேராக ஜெயலலிதா கவர்னர் மாளிகை சென்றார். அங்கு செம்மலை தற்காலிக சபாநாயகராக பதவி ஏற்கும் நிகழ்ச்சிக்கு சென்றார். அப்போதும் வழிநெடுக ஜெயலலிதாவுக்கு மக்கள் திரண்டிருந்து எழுச்சி வரவேற்பு அளித்தனர்.
ஜே.சி.டி.பிரபாகர்
அ. தி.மு.க. சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர் மலர்கொத்துடன் நின்றார். உடனே காரை நிறுத்தி அவரிடம் மலர்கொத்து பெற்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை2 days 18 hours ago |
ஆனியன்ப்ரை5 days 17 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 2 days ago |
-
மகளிர் இலவச பேருந்து பயணத்தால் தெலங்கானாவில் மெட்ரோ ரெயில் சேவை கடும் பாதிப்பு
13 May 2024ஐதராபாத், தெலங்கானாவில் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக எல் & டி நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் மோதல்
13 May 2024அமராவதி, ஆந்திராவில் சித்தூர், கடப்பா மாவட்டங்களில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் 8.25 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது : செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப ஏற்பாடு
13 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்: தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
13 May 2024சென்னை, மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதமடைவதாக விவசாயிகள் வேதனைப்படுகின்றனர் என்று தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
விரைவில் திருமணம் செய்து கொள்வேன்: பிரச்சாரத்தில் ராகுல்காந்தி கலகல பேச்சு
13 May 2024ரேபரேலி, உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, விரைவில் திருமணம் செய்வேன் என ராகுல் பேசியது அங்கு கலகலப்பான சூழலை ஏற்படுத்தியது.
-
சந்தேக மரணமாக வழக்கு மாற்றம்: ஜெயக்குமார் மரணம் குறித்து தென்மண்டல ஐ.ஜி. விளக்கம்
13 May 2024நெல்லை, சந்தேக மரண வழக்காக ஜெயக்குமார் வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ள தென்மண்டல ஐ.ஜி., இன்னும் ஒரு வாரத்தில் இந்த வழக்கில் ஒரு தெளிவான முடிவு கிடைக்கும் என்
-
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்.
13 May 2024சென்னை : தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளத
-
ரூ.188 கோடி கொள்ளை வழக்கு: மேலும் ஒரு இந்திய வம்சாவளி நபர் கனடா போலீசாரால் கைது
13 May 2024ஒட்டாவா : கனடாவில் தங்கக் கட்டிகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
இ.பி.எஸ். தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது எப்படி? தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்
13 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற தேர்தலில் இபிஎஸ் தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்தல் ஆணையம
-
நாகை எம்.பி. செல்வராஜ் மறைவு: முதல்வர் ஸ்டாலின் - இ.பி.எஸ். இரங்கல்
13 May 2024சென்னை, நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
உயிர் தமிழுக்கு விமர்சனம்
13 May 2024கேபிள் டிவி தொழில் செய்து வரும் நாயகன் அமீர், நாயகி சாந்தினி ஸ்ரீதரனை கண்டதும் காதல் கொள்கிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-05-2024.
13 May 2024 -
'விக்கிரவாண்டி' இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? - டாக்டர் ராமதாஸ் விளக்கம்
13 May 2024விழுப்புரம் : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? என்பது குறித்து அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.
-
சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் : கோவை குற்றவியல் கோர்ட் அனுமதி
13 May 2024கோவை : சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
இன்டியா கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
13 May 2024சென்னை, இன்டியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வேன்: ராகுல்
13 May 2024ரேபரேலி : மத்தியில் காங்கிரஸ் - இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதே எனது முதல் வேலையாக இருக்கும் என்று உறுதியளிப்பதாக காங்கிரஸ்
-
4-ம் கட்ட பார்லி. தேர்தல்: 62.84 சதவீத வாக்குப்பதிவு
13 May 2024புதுடெல்லி : 4-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 62.84 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
அமெரிக்காவில் பயங்கரம்: நடந்து சென்றவர் மீது காரை ஏற்றி கொலை செய்த திருநங்கை
13 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில், சாலையில் நடந்து சென்ற நபர் மீது, திருநங்கை ஒருவர் காரை ஏற்றியும் கத்தியால் குத்தியும் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை அத
-
குருத்வாராவில் வழிபாடு நடத்தி சப்பாத்தி சுட்டு சீக்கியர்களுக்கு உணவு பரிமாறிய பிரதமர் மோடி : பீகார் பிரச்சாரத்தில் ருசிகர சம்பவம்
13 May 2024பாட்னா : பீகாரில் உள்ள சீக்கியர்களின் புனிதத்தலமான குருத்வாராவில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி, அங்கு சப்பாத்தி சுட்டு, சீக்கியர்களுக்கு உணவு பரிமாறினார்.
-
இடைக்கால ஜாமின் கோரிய ஹேமந்த் சோரன்: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
13 May 2024புதுடெல்லி, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன், தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய வாய்ப
-
இந்திய அளித்த போர் விமானங்களை இயக்கும் திறன் எங்களுக்கு இல்லை : மாலத்தீவு அமைச்சர் தகவல்
13 May 2024மாலே : இந்திய போர் விமானத்தை இயக்கும் திறன் எங்கள் ராணுவத்திற்கு இல்லை என்று மாலத்தீவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் 50-வது வெற்றி: ரசிகர்களுடன் கொண்டாட்டம்
13 May 2024சென்னை : சென்னையில் 50-வது வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடியது சி.எஸ்.கே. வீரர்கள்.
சென்னை வெற்றி...
-
மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது "என் உயிருக்கு ஆபத்து" என ஆவேசமாக குரல் எழுப்பிய சவுக்கு சங்கர் : போலீசார் முன்னிலையில் கோஷமிட்டதால் பரபரப்பு
13 May 2024கோவை : கோவையில் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் போலீசார் முன்னிலையில் என் உயிருக்கு ஆபத்து என சவுக்கு சங்கர் ஆவேசமாக குரல் எழுப்பிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்ட
-
டெல்லியை வீழ்த்தியது பெங்களூரு
13 May 2024பெங்களூரு : டெல்லி அணிக்கு எதிராக பவுலிங்கில் மிரட்டிய பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது.
-
அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி எதுவும் அளிக்கவில்லை : கவர்னர் விளக்கம்
13 May 2024சென்னை : அண்ணாமலைக்கு எதிராக கிரிமினல் வழக்குப்பதிய அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என கவர்னர் ஆர்.என்.ரவி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.